Thursday 21 June 2018

கண்ணீர் கூட வலிக்கிறது

இயலாமையின் வெஞ்சினத்தால்
உருண்டு விழும்
கண்ணீர் கூட வலிக்கிறது
உடைக்கப்பபடும்பொழுது
வலி மட்டுமே இருந்தால்
எளிதில் கடந்து போகலாம்…
வலியோடு அவமானமும்
கட்டிப்பிடித்துக்கொண்டால்
துக்கம் அடைக்க என் செய்வது?
சந்தேகம் குமிழ்களாய் வெடிக்க
அருவருப்பின் புன்னகை
விகாரமாய் என் கண்முன்னே…
தொடர்ந்து வரும் நிழலாய்
சிரிப்புக்கு பின்னே
வஞ்சகத்தின் கண்ணிவெடி
அச்சம் தவிர்த்து
அறம் நின்று வாழும்
உறுதி மட்டுமே என் கையிருப்பாய் …..

No comments:

Post a Comment