Wednesday 20 June 2018

ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை


நான் சிறு பையனாக இருந்த காலம். விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பூரானைக்கண்டேன். அதன் மேல் ஒரு கல்லை எறிய போனேன். அதை என் பாட்டி கண்டுவிட்டாள். "அடே! அதைக் கொல் லாதே! ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையடா!" என்று கத் தினாள். அவளுக்குத் தெரியாத பழங்கதை இல்லை; சம்பிரதாயம் இல்லை. நான் கல்லைக் கீழே எறிந்து விட்டு, "பாட்டி, பாட்டி, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை என்றாயே; அது என்ன?" என்று கேட்டேன். அவள் கதை சொல்லத் தொடங்கினாள்.
"ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பூரான்களே நெளிந்து கொண்டிருந்தன. கால் வைத்த இடமெல் லாம் பூரான். எல்லோரையும் பூரான்கள் கடித்துத் துன்புறுத்தின. ஜனங்கள் பகவானிடம் முறையிட்டுக் கொண்டார்கள். பகவான் பூரானுக்கு ஒரு சாபம் கொடுத்தார். 'நீ குட்டியைப் பெறப் பெற எல்லா வற்றையும் தின்றுவிடுவாயாக!' என்று சாபம் இட் டார். பூரான், 'அப்படியானால் என் வம்சம் எப்படி விருத்தியாகும்?' என்று அழுதுகொண்டே கேட்டது. 'நீ ஒரு பிள்ளையை மட்டும் மிச்சம் வைத்து மற்றவற் றைத் தின்பாய். அந்த ஒரு பிள்ளையால் உன் வம்சம் விருத்தியாகும்' என்று பகவான் மறுசாபம் கொடுத்தார். அது முதல் பூரான்கள் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாகவே இருந்து வருகின்றன. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை யென்றால் அந்தப் பிள்ளைக்கு ஒரு கெடுதலும் செய்யக்கூடாது ,அது பாவம்! என்று கதையைமுடித்தாள்.

No comments:

Post a Comment