Sunday 17 June 2018

காலப் புத்தகம்

தொலையட்டும்
---------------------------
வானத்துக் காவிரி
கடலில் விழும்,
கூவத்திலும்.
விடு,
உன் கூவம்
இனிக் கடல்.

காட்டுத் தீ வடிந்தால்
கரி உண்டு,
பொன்னும்.
விடு,
உன் கரி
இனிப் பொன்.

சுவாசக் காற்றிலே
மணம் உண்டு,
கிருமியும்.
விடு,
உன் கிருமி
இனிப் பூமணம்.

அழுதபின் சிரிக்க
பின் அழ, இருத்தும்
வாழ்க்கை வட்டம்.
விடு,
உன் வட்டம்
இனி வெளி.

ஏனோ
காலப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தைப்
புரட்டி விட்டாய்.
முடிவறியும் அவசரமா?
விடு,
நீ படித்ததால்
காலப் புத்தகத்துக்கு
கௌரவம்.

No comments:

Post a Comment