Thursday 28 June 2018

மன்னன் மைதாஸ்

தொட்டதெல்லாம் பொன்னான கதை
பிரிஜியா நாட்டின் மன்னரானமைதாஸ் என்பவரைப் பற்றிக் கிரேக்க நாட்டில் தொட்டதெல்லாம் பொன்னான கதை என்ற ஒரு நீதிக் கதை உள்ளது.
டயோனிசஸ் என்ற கடவுள், மைதாஸ் மன்னரிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள், தருகிறேன்' என்று கூறினார்; உடனே மைதாஸ், நான் தொட்ட தெல்லாம் பொன்னாக வேண்டும் என்று கேட்கவே, சரி என்று டயோனிசஸ் தெய்வமும் சிரித்துக் கொண்டே வழங்கி விட்டது.
மன்னன் மைதாஸ் உடனே தமது மகளை அன்புடன் தொடவே, அவள் பொற்சிலை ஆகிவிட்டாள். அடுத்துப் பசிக்குப் புசிக்க உணவைத் தொட்டார்; அதுவும் பொன்னாக மாறிவிட்டது. பசிவாட்டிற்று கோரமாக எடுத்தது தாகம். உடனே மன்னன் மீண்டும் டயோனிசஸ் என்ற கடவுளை வணங்கி தனது நிலையிலே இருந்து தப்பிக்க வழி செய்யுமாறு வேண்டினார். உடனே அந்தத் தெய்வம், திமோலஸ் மலையருகே உள்ள பெக்டோலஸ் ஆற்றிலே நீராடினால் பழையபடி வாழமுடியும் என்றார். அதே போல மன்னன் செய்து முன்பு இருந்த நிலையில் வாழ்ந்தார். தனது மகளையும் அதே நதியில் நீராட வைத்து மீண்டும் பழைய உருவத்தைப் பெறச் செய்தார்.
ஆனால், ஒர் அதிசயம் திடீரென்று நடந்தது. அந்த அரசன் எந்த
ஆற்றில் நீராடினானோ, அந்த ஆற்று மணலெல்லாம் தங்கப் பொடிகளாக, மாறி விட்டது.

No comments:

Post a Comment