Monday 2 July 2018

எஸ் பி பி

இந்தப்பாடலில் நடுவே 'பபப்ப்பா' என எஸ்.பி.பி ஹம்மிங் கொடுப்பார் அது மிகவும் கிக்காக இப்பாடலுக்கு அழகூட்டியது.

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் உனக்காகவே பாடுவேன்.
கண் உறங்காமலே வாடுவேன்

அன்று ஒருபாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்
கைவளையோசை கடல் கொஞ்சும் அலை ஓசையோ
அதை செவியார நான் கேட்க வரவில்லையோ
கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னித்தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடிமீது குடியேற்றி முத்தாடவோ...
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா

No comments:

Post a Comment