Friday 6 July 2018

நீ !!!!!!

ஒரு குளிர்கால மழைப்போல்
என்னை ‌அதிகம் சிலிர்க்க வைத்தவள் நீ....
ஒரு கோடைகால நிழல் போல்
என்னை அதிகம் ரசிக்க வைத்தவள் நீ...
ஒரு கடலோர படகுப்போல்
என்னை அதிகம் தடுமாற வைத்தவள் நீ...
ஒரு குறிஞ்சி பூத்த பள்ளத்தாக்குப்போல்
என்னை அதிகம் ஆக்கிரமித்தவள் நீ...
ஒரு இரவு ‌நேர வீண்மீன்களைப்போல்
என்னை அதிகம் வியக்க வைத்தவள் நீ...
ஒரு வசந்தகால பூக்களைப்‌ போல்
என்னை அதிகம் மிளிர வைத்தவள் நீ...
ஒரு அவசரக்கால ஒலிப்பானைப் போல்
என்னை அதிகம் பரபரக்கவைத்தவள் நீ...
ஒரு ஏழையின் மகிழ்ச்சிப்போல
என்னை விண்ணில் மிதக்கவைத்தவள் நீ....
நீயின்றி தோற்றுவிடுகிறது என் விதிகள்
நீயிருந்தால் மாறிவிடும் என் புவியீர்ப்பு விசைகள்...!

No comments:

Post a Comment