Friday 6 July 2018

இரண்டு குதிரைகள்

ஒருத்தன் வேகமா டாக்டர்கிட்டே ஓடிவந்தான்.  

ரெண்டு கையாலையும் வயத்தை பிடிச்சு கிட்டு...... ஐயோ டாக்டர்... வயறு வலிக்குதுன்னான்.  

அடடா...  நான் மனோதத்துவ டாக்டர்... உன் வியாதிக்கு மருந்து தர்ற டாக்டர் பக்கத்து ரூம்ல இருக்கார் போய் பாருன்னார்.

ஐயோ... என் நிலைமை தெரியாம பேசுறிங்களே....  நான் குதிரையை முழுங்கிட்டேன்  என்னை காப்பாத்துங்க டாக்டர்னு கத்தினான்.

ஓகோ... குதிரையை முழுங்கிட்டியா... அப்ப அதுக்கு நான் தான் வைத்தியம் பார்க்கணும்...வா, வந்து இந்த கட்டிலே படுன்னார்.

அவனும் படுத்தான்.  அவனுக்கு மயக்க முருந்து கொடுத்தார்.   அவன் மயக்கமானான்.   உடனே தன் உதவியாளரை கூப்பிட்டு, ஒரு குதிரையை கொண்டு வந்து வாசலில் கட்டி வைக்க சொன்னார்.

மயக்கம் தெளிஞ்சு அவன் எழுந்தான்.  உடனே டாக்டர் இப்படி சொன்னார்.

பார்த்தியாப்பா.... நீ முழுங்கின குதிரை.   வாய் வழியாவே எடுத்துடேன்.   இனிமே உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.  நீ போகலம்னார்.

குதிரையை பார்த்தவன் மறுபடியும்.... ஐயோ ஐயோ வயறு வலிக்குது என்னை காப்பாத்துங்க டாக்டர்னு கத்தினான்.

அதான் குதிரையை எடுத்தாச்சே அப்பறம் என்ன பிரச்சனை.

ஐயோ... நான் முழுங்கினது வெள்ளை குதிரை.  நீங்க எடுத்து சிகப்பு குதிரை... அப்படின்னான்.

இப்போ டாக்டர்... மயக்கம் போட்டு விழுந்துடார். 

No comments:

Post a Comment