Tuesday 10 July 2018

அனுமன் ஸ்லோகம்


    ஆபன்னா கிலலோகார்த்திஹாரிணே ஸ்ரீ ஹனூமதே அகஸ்மாதாகதோத்பாத நாஸனாய நமோஸ்துதே ஸீதாவியுக்த ஸ்ரீராம ஸோக து: கபயாபஹ தபாத்ரிதயஸம் ஹாரின்னாஞ்ஜனேய நமோஸ்துதே! 

                  
பொதுப்பொருள்:

அனைவரையும் எல்லாவிதமான ஆபத்திலிருந்து காப்பவரே ஆஞ்சநேயா, நமஸ்காரம். மனக்கவலையைப் போக்குகிறவரே, சற்றும் எதிர்பாராதவகையில் வரும் ஆபத்துகளைப் போக்குபவரே, ஆஞ்சநேயா நமஸ்காரம்.

சீதையை விட்டுப் பிரிந்த ராமபிரானின் சோகம், துக்கம், பயம்  எல்லாவற்றையும் போக்கியவரும், எல்லாவகை மனவருத்தங்களையும் காணாமல் போகச் செய்பவருமான ஆஞ்சநேயரே நமஸ்காரம்.
அனுமன் ஸ்துதி 
அனுமன் என்ற பெயரை சொன்னாலே துன்பங்கள்  ஓடும் . துயரங்கள் தொலையும் .துன்பங்கள் தொலையும் 'தடைகள் 
தவிடு பொடியாகும் .நல்லனஉடனே  வந்து  சேரும்  என்கிறார்  துளசிதாசர் .

அனுமன் சாலீசா  என்ற  பெயரில் அவர் எழுதிய வடமொழி ஸ்லோகம் தமிழில்  இது .

  1. 1. ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே!மூவுலகை யெழுப்பும் வானரர் கோனே!
2. ராமதூதனே! ஆற்றலின் நிறையே!அஞ்சனை மைந்தனே! வாயுவின் புதல்வனே 3. மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே!தீமதி நீக்கிடும் நன்மதி நண்பனே!4. பொன் மேனியனே! பட்டாடை புனைவோனே!ஒளிர்குண்டலமுடன் அலைமுடி கொண்டோனே!5. இடி, கொடிமிளிரும் கரங்கள் கொண்டோனே!மூஞ்சைப் பூணூல் தோளணிவோனே!6. சிவனின் அம்சமே ! கேசரி மகனே!உனதொளி வீரத்தை வணங்குது உலகே!7. பேரறி வாளியே! நற்குண வாரியே!ராமசேவைக்கென மகிழ்வுடன் பணிவோனே!8. தலைவன் பெருமையைக் கேட்பதுன் பரவசம்!ராமயிலக்குவ சீதையுன் மனவசம்!9. நுண்ணிய உருவாய் அன்னைமுன் தோன்றினாய்!கோர வுருவினில் இலங்கையை எரித்தாய்!10. அசுரரை அழித்திடப் பேருருக் கொண்டேராம காரியத்தை நலமுடன் முடித்தாய்11. சஞ்சீவி கொணர்ந்தே இலக்குவனை எழுப்பிடவிஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்!12. ரகுபதி யுன்னைப் பெரிதும் புகழ்ந்தேபரதனைப் போல்நீ உடனுறை என்றார்!13. ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன்பெருமையைப் புகழ்வதாய் அணைத்தே சொன்னார்!14. சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும்ஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும்15. காலன் குபேரன் திசைக் காவலரும்கவிஞர் புலவரால் சொல்லிட இயலுமோ?16. சுக்ரீவனுக்கு அரசை அளித்திடராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்!17. உன் அறிவுரையை வீடணன் கொண்டதால்அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்!18. தொலைவினில் ஒளிரும் ஞாயிறைக் கண்டேசுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்!19. வாயினில் ராமனின் மோதிரம் கவ்வியேஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ!20. உலகினில் முடியாக் காரியம் யாவையும்நினதருளாலே முடிந்திடும் எளிதாய்!21. ராமராச்சியத்தின் வாயிற் காவலன்நீ!நுழைந்திட வியலுமோ நின்னருள் இன்றி!22. உனைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம்!மூவுலகும் அதன் முன்னே நடுங்கும்!24. பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ!மஹாவீர னுன் திருநாமம் சொல்வாரை!25. நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும்!பலமிகு நின்திரு நாமம் சொல்லிட!மனம், வாக்கு, செயலால் தியானிப் பவர்க்கே!27. தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடும்ராமனின் பணிகளை நீயே செய்தாய்!28. வேண்டிடும் பக்தர்கள் ஆசைகள் நிறைவுறும்!அழியாக் கனியாம் அனுபூதி பெறுவார்!29. நான்கு யுகங்களும் நின்புகழ் பாடிடும்!நின்திரு நாமமே உலகினில் சிறந்திடும்!30. ஞானியர் நல்லோரைக் காப்பவன் நீயே!தீயவை அழிப்பாய்! ராமனின் கனியே!31. எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும்கேட்டவர்க்கு அருள்வரம் சீதையுனக் களித்தார்!32. ராம பக்தியின் சாரமே நின்னிடம்!என்றும் அவனது சேவகன் நீயே!33. நின்னைப் பற்றியே ராமனை அடைவார்!தொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பார்!34. வாழ்வின் முடிவினில் ராமனடி சேர்வார்!ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறுவார்!35. மறுதெய்வம் மனதில் நினையா பக்தரும்அனுமனைத் துதித்தே அனைத்தின்பம் பெறுவார்!36. துன்பங்கள் தொலையும் துயரங்கள் தீர்ந்திடும்!வல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே!37. ஆஞ்ச நேயனே! வெற்றி! வெற்றி! வெற்றி!விஞ்சிடும் குருவே! எமக்கருள் புரிவாய்!38. நூறுமுறை இதைத் துதிப்பவர் எவரோஅவர் தளை நீங்கியே ஆனந்தம் அடைவார்!39. அனுமனின் நாற்பதைப் படிப்பவர் எல்லாம்சிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்!40. அடியவன் துளஸீ தாஸன் வேண்டுவான்அனைவர் உள்ளிலும் திருமால் உறையவே!சங்கடம் நீக்கியே மங்களம் அருளும்காற்றின் மைந்தனின் ரூபம்!ராம யிலக்குவ சீதை யுடனேஎன்றுமென் னுள்ளினில் வாழும்!ஸ்ரீ ராமசந்திர பகவானுக்கு வெற்றி எனப் பாடு!ராம இலக்குவ ஜானகீமாருதிக்கு வெற்றீயெனப் பாடு!ஸ்ரீராமஜெயம்!

நீங்களும் அனுமன் சாலிசா  நாற்பதையும்  படித்து பயன் பெறுங்கள் . 

No comments:

Post a Comment