Thursday 12 July 2018

நகைச்சுவை

நம் நாட்டில்லிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர். அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்….
சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா ? மேனேஜர் கேட்க,
நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன் என்றார் நம்மாளு.
அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்,
முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய் ?
ஒருவரிடம் மட்டும்…
என்ன ஒருத்தர் மட்டுமா ?…
உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20 லிருந்து 30 நபர்களிடம் சேல்ஸ் செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும்.
சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய் ?
$10,12,347.64
ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா ? என்னென்ன விற்றாய் ?
முதலில் அவரிடம் சிறிய தூண்டில், கொஞ்சம் பெரிய தூண்டில், அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷிங் ராட், ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள் ?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா என்று தெரியவில்லையே என்றார்.
நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4×4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் “நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன்”. இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்
என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய் ? மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,
அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் – ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்.

No comments:

Post a Comment