Saturday 21 July 2018

ஒரு புல்லைக்கூட மனிதனால் படைக்கமுடியாது

மண் நீரூட்டும்
விதை கன்றாகும்
கன்று செடியாகி பூ பூக்கும்
வண்ணப்பூச்சி முத்தமிட
மலர் காயாகும்
காற்றால் கதிரால் முகிலால்
காய் கனியாகும்
பழம் பறவைக்கும்
விதை மண்ணுக்குமாகி
செடியும் மரமும் புதிதாய் பிறக்கும்.
விந்தணுவை கருமுட்டையை
சோதனைக்குழாயில்
குளிர்பதனப்பெட்டியில்
சேர்ந்திருக்கச் செய்யலாம்.
ஒட்டமுடியாதெங்களால்.
விந்தணு கருமுட்டையின்
விளிம்பைத் தானாய் பிளந்து கலவாமல்
விளையாதுயிரென்று கைவிரிக்கிறார் மருத்துவர்.
தன்னிச்சையாய் இயங்கும் படைப்பின் நுணுக்கம்
சோதனைக்குழாயில் அடைபடவில்லை.
..............................................................................
நினைத்துக்கொள்கிறேன்.
ஒரு புல்லைக்கூட மனிதனால் படைக்கமுடியாது

No comments:

Post a Comment