Tuesday 10 July 2018

வெற்றிலை , பாக்கு ,பழம்


அன்பார்ந்த நண்பர்களே


பக்தி மார்க்கத்தில் தழைத்து  இருக்கும் அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் .

நாம் வீட்டில் ,கோவிலில்  பூஜை செய்யும் போது  வெற்றிலை , பாக்கு ,பழம் வைத்து  பூஜை செய்வோம்.அது எதுக்கு? என்று நிறைய பேர்களுக்கு தெரியாது .எது செய்தாலும் ஏன் ,எதுக்கு செய்கிறோம் என்று தெரிஞ்சு செய்தால், நாம் செய்கின்ற காரியம் சரியான முறையில் சென்றடையும் என்பதில் துளி கூட சந்தேகமில்லை .


நம் மூதாதையர் நமக்கு நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள்.நாம்தான் அதை பின்பற்ற மறந்து விடுகிறோம் . இனிமேலாவது அதைக் கடைபிடிப்போம்.

 சுவாமிக்கு ஏன் வெற்றிலை ,பாக்கு , பழம்  வைத்து பூஜை செய்கிறோம்?



வெற்றிலையும் , பாக்கும்  மகாலட்சுமியின் அம்சம் . வெற்றிலையின் நுனியில் லக்ஷ்மியும்,நடுவில்
சரஸ்வதியும்,காம்பில் பார்வதி தேவியும் இருக்கிறார்கள் .வெற்றிலை ,பாக்கு ,பழம் வைத்து
இறைவனை வணங்குவது மரபு. வெற்றிலை,பாக்கு  வைத்து வணங்கவில்லையெனில், எந்த ஒரு பூஜையும்  நிறைவு பெறாது .


வெற்றிலை  ,நோயில்லாமல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


பாக்கு  செல்வம் கிடைக்க வழிவகுக்கிறது .பாக்கு வைத்து இறைவனை வணங்கினால் நமக்கு குறைவற்ற செல்வம் கிடைக்கும் .



வாழைப்பழம் பாவ  -புண்ணிய விடுதலையை குறிக்கும் .


தேங்காய் அறிவை தரும் .

 



தேங்காய் ,வெற்றிலை,பாக்கு ,பழம் வைத்து அர்ச்சனை செய்வது நமக்கு அறிவு,ஆரோக்கியம் ,
செல்வம் ,பாவ-புண்ணிய விடுதலை ஆகியவற்றை தர வேண்டும் என்பதால் தான் .


கருணை கடலான இறைவனை பூஜிக்கும் போது  இவற்றை வைத்து பூஜிக்க  வேண்டும் .

திருமணத்திற்கு அழைக்கும் போது  வெற்றிலை , பாக்கு, பழத்துடன் அழைக்க வேண்டும் .அதுதான்
மரியாதைக்குரிய செயல் ஆகும்.

விருந்தினர்களுக்கு சுப காரியத்தின் போது  நமது வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் ஒரு
பொருளோடு வெற்றிலையும்,பாக்கும் சேர்த்து கொடுத்தால் நம் குடும்பம் செழித்தோங்கும் .

   மங்கள பொருளான வெற்றிலை,பாக்கை வலது கையால் வாங்க வேண்டும்.



 வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது .சீதை , "ராமன் போரில் ராவணனை வென்றான்" என்ற செய்தி கூற வந்த அனுமனிடம் ,"வெற்றி  உண்டாகட்டும் "என்று  வெற்றிலை மரத்தில் வெற்றிலையை பறித்து ஆசீர்வதித்தாள்.ஆகையால்  வெற்றிலை மாலை சார்த்தி ,அஞ்சநேயரை வழிபட்டால் வெற்றி  கிடைக்கும் என்பது  உறுதி .

வெற்றிலையை வாட விடுவது வீட்டிற்கு நல்லதல்ல .



வெற்றிலை ஒரு கர்ப்ப மூலிகை .இதனுடன் சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட தேவையான கால்சியம்
சத்து கிடைக்கும்.


வெற்றிலை நரை ,மூப்பு ,திரை ,சாக்காடு ஆகியவற்றை நீக்கி ,உடலை என்றும் நோயின்றி
வைத்திருக்க பயன்படுகிறது .  புற்று நோயை குணப்படுத்துகிறது. இருமல்,வாயு கோளாறு போக்கவல்லது .தீப்புண்ணை ஆற செய்கிறது .

No comments:

Post a Comment