Tuesday 23 January 2018

மெழுகு உருக அனல்...
என் மனம் கரைய உன் ஆ[அ]ண்மை..
முகம் கண்ட கணம்
மனம் துடிக்கும் மோகம்...
உயிரும் மெய்யும் உயிர்த்தெழுந்து
உதிரம் உற்சாகமாகும்
ஒரு மோன வேளை...
முத்தாடும் உறவில்
முக்தி பெற மோட்சம் சேர ...
மோக ராகம் பாடி ...
முயங்கி ...கிறங்கி ..
எனக்குள் இறங்கி ...
என் தாபம் இறக்கி ....
இரக்கமுடன் மேகம் நீங்கி
மோகத்தீயை அணிந்து வா ....
அனலில் மெழுகாய் உருகி
உருவம் தொலைந்து
பருவம் சுகிக்க வா வா
என் அன்பே உடனே வா !!!!!!!


No comments:

Post a Comment