Thursday 25 January 2018

கர்னல் Vs தளபதி

ஒரு ராணுவ கேப்டன் எப்போதும் குடி போதையில் இருப்பதை தளபதி தெரிந்து கொண்டார்.கேப்டன் நல்ல மனிதன் தான்.குடிகாரர்கள் நல்லவர்கள் தான்.ஆனால் குறுக்கு வழியில் போகிறவர்கள்.அவ்வளவுதான்.
''நீ நல்லவன் உன்னை நான் பாராட்டுகிறேன்.ஆனால் உன்னை நீ பாழாக்கிக் கொண்டிருக்கிறாய்.நீ மட்டும் குடிக்காமல் தெளிவாக இருந்தால் விரைவில் ஒரு கர்னல் ஆகி விடுவாய்.''என்றார் தளபதி.
அது கேட்டு அவன் சிரித்தான்.'அது தேவையேயில்லை.குடியை விட்டால் வெறும் கர்னல் தானே ஆக முடியும்.நான் குடித்தால் தளபதி ஆகி விடுகிறேனே.'

No comments:

Post a Comment