Wednesday 24 January 2018

அல்லாவை / கடவுளை தேடுங்கள்

அல்லாவை நாம் தொழுதால்...சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோனை நினைத்திருந்தால்...
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்...
அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
அல்லாவை நாம் தொழுதால்...

பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ
பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ
அல்லாவை நாம் தொழுவோம்...
வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ
விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ
அல்லாவை நாம் தொழுவோம்...
இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்
இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்
அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்

No comments:

Post a Comment