Thursday 25 January 2018

ஒருவன் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் ஏழை.அதனால் கழுதையில் ஏறித்தான் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தான்.ஆனால் எப்போதும் தாமதமாகவேவீடு திரும்புவது வழக்கம்.அவன் மனைவிக்கு அதனால் ஏகப்பட்ட கோபம்.
அவன் தன மனைவியிடம்,''என் பிரச்சினையைப் புரிந்து கொள்.தொழிற்சாலையில் கடைசிச்சங்கு ஊதியவுடன் என் கழுதை அங்கிருந்து உடனே புறப்பட்டு விடும்.இரண்டு மூன்று வினாடிகளுக்குக் கூட அது காத்திருக்காது.நான் அதன் மேல் ஏறினேனா இல்லையா என்றெல்லாம் பார்க்காது.அது பாட்டுக்குப் புறப்பட்டு விடும்.அப்படிப் பழகி விட்டது அது.தொழிற்சாலை விடும் வேளையில் ஏகப்பட்ட நெரிசல்.எல்லோரும் அடித்துப் பிடித்து வெளியேறிக் கொண்டிருப்பார்கள்.அந்தக் கூட்ட நெரிசலில் நான் வெளியே வரப் பல தடவை தாமதமாகி விடுகிறது.வந்து பார்த்தால் கழுதை இருக்காது.நான் என்ன செய்ய?நடந்தே வீடு வர வேண்டி இருக்கிறது.இது தான் என் பிரச்சினை.\,''என்று சொன்னான்.
அவள் இதில் சமாதானம் அடைந்திருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது.அதனால்,''இதனால் நீ அறியும் நீதி என்ன?''என்று கேட்டான்.
'வீடு திரும்புவதற்கு சரியான நேரம் என்ன என்பது ஒரு கழுதைக்குக் கூடத் தெரிந்திருக்கிறது என்பது தான் நான் அறியும் நீதி,'என்றாள் அவள்.

No comments:

Post a Comment