Sunday 28 January 2018

வாழ்த்து

ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி
உணர்வுகளை மதித்து ,உரிமைக்கு இடம் அளித்து
அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி
பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி
வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி
வந்து விழுந்த துன்பங்களை வளைத்தெடுத்து வாளிப்பாக்கி
வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து,
வாழ்வின் நோக்கத்தை தேர்ந்தெடுத்து,
மனம்போல் மகிழ்வோடும்,அழகான மகவோடும்
வாழ்க்கையை உங்கள் வசமாக்கி
வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி
இல்லறத்தில் மகத்தான வாகை சூடி....

No comments:

Post a Comment