Sunday 28 January 2018

1967 ஜூலை மாதம் Rocco morabito எடுத்த புகைப்படம் இது.

அவர் பத்திரிகையில் வேலை பார்த்தபோது ஒரு நாள் காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர் சாலையோரத்தில் மின் கம்பத்தில் கண்டு பதைபதைத்த காட்சி இது.

இரண்டு மின் ஊழியர்கள் பராமரிப்பு பணியை செய்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் நிலைகுலைகிறார்.

அப்போது அவரை காப்பாற்ற இன்னொருவர் மவுத் டூமவுத் உயிர் காற்றை செலுத்தி அவரை பிழைக்க வைக்க போராடியபோது Rocco எடுத்த படம் இது. இப்படி காப்பாற்றப்பட்டவர் மேலும் 35 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.

1968ல் புலிட்சர் விருது பெற்ற இப்புகைப்படம் பின்னர் 'The Kiss of Life'

என்று இன்றளவும் பாராட்டுகள் பெற்று வருகின்ற - மனித நேயத்தை பதிவு செய்த மகத்தான புகைப்படம் இது!

No comments:

Post a Comment