Sunday 28 January 2018

மீண்டும் துளிர்க்கும் மரங்கள்...

மரணமல்ல மரத்துக்கு
இலையுதிர் காலம்..
அது
அழகு அடைகாக்கும்
அஞ்ஞாதவாச காலம்..
மாறுதல் என்பது
மன்னுயிர்கெல்லாம்
மாறாத விதி..
ஆம்,
மாறுது காலம்,
மாற்றம் மரத்திலும்தான்-
அடைகாத்த அழகு
அரங்கேறுகிறது
துளிர்க்கும் இலையாய்,
தொடரும் பூவாய்..
மீண்டும் துளிர்த்தன மரங்கள்-
இயற்கையின் முகவரியாய்...!

No comments:

Post a Comment