Tuesday 23 January 2018

புரிபடாத
புலன்படாத
புதிராய் ஓர்
புன்னகை உதிர்த்து
நகர்கிறாய்
அந்த சாலையில்
வெகுநேர காத்திருப்பாய்
நான் காத்திருந்தும்
ஏதோ அனிச்சையாய்
எனை பார்ப்பது போன்ற
பாவனை காட்டி
அநாயசமாய் கடந்து செல்கிறாய்
இன்றாவது என் இதயத்தின்
கோரிக்கைகள் நிறைவேறும்
என்ற ஆவலில் இருந்தும்
நிராகரிப்பாய் நகர்கிறாய்
நானும் நம்பிக்கையுடன்
நாளைய பொழுதிலாவது
அங்கீகரிப்பு கிடைக்கும்
என நகர்கிறேன்

No comments:

Post a Comment