Friday 1 June 2018

1965 வல்லவனுக்கு வல்லவன்

நேற்று இரவு ''வல்லவனுக்கு வல்லவன் '' 1965-ல் வெளியான தமிழ் திரைப்படம் ..எத்தனையாவது முறை ?!!!! இணையத்தில் பார்த்தேன் ...
'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்' & 'மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது' -
இரண்டு பாடல்களுமே கேட்ட பள்ளி வயது முதல் இன்று வரை எனக்கு காதில் இனிக்கும் மனதில் சுவைக்கும் வாழும் திரைப்படப்பாடல்கள்...
---------------------------------------------
வாழும் திரை இசை கவிஞர் கண்ணதாசன்
.................................................................................
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
குயில் ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
இசை ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
குயில் ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
தமிழ் காவிரி நீராடி
இரு விழிகளில் காதல் மலர் சூடி
வண்ணப் பூச்சரம் போலாடி
உடலழகில் பொன்னுடன் விளையாடி (தமிழ்)
சிலை ஒன்று நேரில் வந்து.. உயிர் கொண்டு ஆடுது
கலைத் தென்றல் வீசுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
இசை ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
விழி மேலொரு விழி சேர்த்து
பருவக் களை மேனியில் கை சேர்த்து
கனி இதழுடன் இதழ் சேர்த்து
வெண்ணிலவின் இரவுக்குச் சுவை சேர்த்து (விழி)
சிலை ஒன்று தேரில்... எனைக் கொண்டு சென்றது
துணைத் தென்றல் ஆனது
யார் வந்தது.. அங்கே யார் வந்தது
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
இசை ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது

No comments:

Post a Comment