Friday 1 June 2018

ஆலயமும் செபித்தலும்

1960- களில் நான் என்னுடைய ஐந்து வயதில் இருந்து என் அம்மாவோடு எங்கள் ஊரின் புனிதர் ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் அதிகாலை ஜெபம் - காலை 5 மணிக்கு போகும் வழக்கம் . பெரும்பாலும் முதிய வயது பாட்டிகள் ஒரே குரலில் ஜெபங்கள்,ஜெபமாலை சொல்வது ...காதுக்கு மிக இனிமையாக ....அதுவே ஒருவகை மோட்ச பேரின்ப அனுபவமாய் இருந்தது.
....எனது 5 வயது முதல் 10 வயது வரை அதனை ஆனந்தமாக அனுபவித்து உள்ளேன்.....
ஆனால் இன்றோ ....ஒவ்வொருவரும் தனித்தனி குரலில் அபஸ்வர சுருதியோடு ஜெபங்கள் சொல்லும்போது ....."உதடுகள் போற்றுகின்றன...உள்ளமோ வெகுதொலைவில்"- திருவிவிலியத்தில் அன்றே எழுதப்பட்டது ....நாம் வாசிப்பது நினைவில் வருவதை தடுக்க இயலவில்லை .....என்ன ஒரு முன் கூட்டியே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம்....
இது ஆலயத்தில் ஜெபிப்பதா...
ஒரே நாரசாரம்....
ஆலயத்தில் இருந்து ஆண்டவரும் புனிதர்களும் ஒரே ஓட்டமாய் ஓடிப்போய்டுவாங்களே அய்யா .....
இன்னொரு வருத்தம் தரும் விஷயம் திரு விவிலியம் பொது மொழி பெயர்ப்பு எனும் 'செட்' டப்பில் அடிக்கடி வார்த்தைகள் மாற்றப்பட்டு ...(கடவுளின் வார்த்தையில் கை வைப்பது பாவம் இல்லியா?) ஜெபங்கள் பலப்பல உருமாற்றங்கள் பெற்று பக்தி உணர்வே சிதைந்து....
இது முதலில் மாற வேண்டும். ஜெபங்கள்,திருவிவிலியம் ஓரெழுத்து கூட மாறாமல் அப்படியே இருக்க வேண்டும்...இதை செய்ய வேண்டும்....
அப்புறம் ஆலய திருப்பலி பிரசங்களில் கிறிஸ்தவம் / திருவிவிலியத்தில் உள்ளவைகளை பற்றி மட்டும் உபதேசம் செய்ய வேண்டும்...
மக்களை கவர வேண்டிய நோக்கில் மலிவான சினிமா , தொலைக்காட்சி மற்றும் அரசியல் வகைகள் பற்றிய பேச்சு தேவையா?
இன்று நான் கேட்ட/கேட்கும் பிரசங்ககள் பெருமளவில் முகநூலில் இருந்தே குறிப்புகளுடன் இருக்கும் சோகம்...
மீட்பராம் இயேசு சொல்லியது போல மக்களை மனம் திருப்ப வேண்டும்....அவர்களின் மலிவான ரசனைக்காக இயேசுவின் உண்மையான பிரதிநிதிகள் ஆன குருக்கள் மனம் மாறக்கூடாது.....!!!!!!!!!
எழுத எழுத ....பக்கங்கள் நீளும் ...போதும்!!!!!!
பி . கு: நான் இப்போதெல்லாம் ஆலயம் செல்லும் வழக்கம் வெகு குறைவே .....வருத்தம் ஏதும் இல்லை

No comments:

Post a Comment