Sunday, 10 June 2018

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் என்போர் பொறியாளர்கள்-
ஆம்:-
மாணவர்களை கட்டமைப்பதில்,
அவர்தம் வாழ்வில்
ஒருங்கிணைந்த
ஆளுமையை கட்டமைப்பதில்,
அவர்களுக்கான வாழ்வை
சிறந்தமுறையில் சீராக்குவதில்… …
ஆசிரியர்கள் என்போர் உருவாக்குபவர்கள்-
ஆம்:-
மாணவர் தம் வாழ்வில்
நல்லொழுக்கத்தை வார்த்தெடுப்பதில்,
கல்வியாளராக
அவர்களை செதுக்குவதில்,
அறநெறிக்கோட்பாட்டில்
தமக்கான வாழ்வை நிலைநிறுத்துவதில்……………….
ஆசிரியர்கள் என்போர் கலைஞர்கள்-
ஆம்,
மாணவரின் சிந்தனையை
இரம்மியமாக்குவதில்,
அவர்களின் இளம்பருவத்தில்
அழகியல் சிந்தனையால்
வாழ்வை ரசனையோடு கவர்சியூட்டுவதில்……………
ஆசிரியர்கள் என்போர் தலைவர்கள்-
ஆம், கற்போரை
உயர்ந்த குறிக்கோளுடன்
நேர்மையான வழிகளில் வழிகாட்டிட,
தம் மாணாக்கரை
உண்மையின் உச்சத்தை
தொட்டு ரசிப்பதற்கு ,
அன்பின் ஆழத்தை
நேசத்தோடு கடப்பதற்கு………………
ஆசிரியர்கள், என்போர் அன்பை பூண்டவர்கள்-
ஆம் அவர்களுடைய மாணவர்கள்
நல்லவராயினும்-அல்லவராயினும்
மேதையாயினும்- முட்டாளாயினும்,
உள்ளவராயினும்- இல்லாதவராயினும்
படிப்பவராயினும், நடிப்பவராயினும்
ஏற்றத்தாழ்வெனும் அளவுகோலின்றி
தம் பிள்ளைகளாய் நேசிப்பதால்……………….
ஆசிரியர்கள், என்போர் விவசாயிகள்-
ஆம் விநயமான வார்த்தைகளால்,
கருணையான அபிநயத்தால்,
இளஞ்சிறார்களின் சிந்தனையை உழுது,
வசந்தத்தின் அறுவடைக்கு
அவர்களை கொண்டுசெல்வதால்……………
ஆசிரியர்கள் என்போர் விதைப்பவர்கள்,
ஞானம் எனும் விதைகளை
நீதி-சாந்தம்-அன்பு
எனும் நல்வித்துக்களை
மாணவர் சிந்தனையில் விதைப்பதால்
ஆசிரியர்கள் என்போர் அறுவடையாளர்கள்
ஆம் மாணவர்களின் இதயங்களில்
குடிமைச் சமூக கூட்டமைப்பில்
நற்சிந்தனைகளை கதிராக்கும்
கருணையுள்ளம் கொண்ட மனிதாபிமானிகள்
ஆசிரியர்கள் என்போர் தூதுவர்கள்
சாந்தம்-சகிப்புத்தன்மை
சமூக நீதி – கண்ணியம்
மறத்தல்-மன்னித்தல்
பாராட்டுதல்- விழுமிய உருவாக்குதல்
என உலகளாவிய மாணவ சமூகத்துக்கு……..
ஆசிரியர்கள் ஆணும் பெண்ணுமாய்
தங்களுடைய நேரத்தை
தமது மாணவர்களிடையே
தங்களுடைய ஆற்றலை
தங்களுடைய பொறுமையை
தங்களுடைய கோபத்தை
தங்களுடைய ஆவேசத்தை
மூலதனமாக்கி
எதிர்கால குடிமக்களை உருவாக்குகின்றனர்…..
ஆசிரியர்கள் என்போர் முதன்மையானவர்கள்…..
தங்களுடைய நம்பிக்ககைகள்
தங்களுடைய ஆளுமைகள்
தங்களுடைய கண்ணியமென
மற்றவரால் சிதைக்கப்பட்டாலும்
மற்றவரின் செயல்பாட்டுக்கு
மரியாதை தருவதில்
ஆசிரியர்கள் என்போர்
தங்களின் மாணவர்கள்
தனிநபர் சாதனையாளராக்க
கூட்டு செயல்பாட்டுக்கான தலைவராக்க
பொறுப்புகளை செயல்படுத்துபவராக
நேரத்தை மூலதனமாக்கி
அறிவை ஆயுதமாக்கும்
அதீத திறமைசாலிகள்

No comments:

Post a Comment