நாளைய திருவிழவிற்கு வந்த
கம்பீர யானையொன்று
இன்றே நகர்வலம் வந்தது
பாகனின் வருவாய்க்காக!
தெருவில் நுழைந்ததும்
"ஐ! யானை"என்று
யானையை நோக்கி
உற்சாகமாய் ஓடினர் சிறுவர்கள்!
"ஐ! யானை"என்று
அதே உற்சாகத்தோடு
வீட்டை நோக்கி ஓடினார்
எதிர்வீட்டு தாத்தா,
யானையை பார்த்த
குழந்தைகளின் உற்சாகம்
இயல்பானது!
தாத்தாவின் உற்சாகம்
சற்றே விநோதமானது!
விநோதத்தின் விடையாய்
கையில் பேத்தியுடன்
சிரித்து வந்த
தாத்தாவை நோக்கி
உற்சாகமாக வந்துகொண்டிருந்தது யானை!
கம்பீர யானையொன்று
இன்றே நகர்வலம் வந்தது
பாகனின் வருவாய்க்காக!
தெருவில் நுழைந்ததும்
"ஐ! யானை"என்று
யானையை நோக்கி
உற்சாகமாய் ஓடினர் சிறுவர்கள்!
"ஐ! யானை"என்று
அதே உற்சாகத்தோடு
வீட்டை நோக்கி ஓடினார்
எதிர்வீட்டு தாத்தா,
யானையை பார்த்த
குழந்தைகளின் உற்சாகம்
இயல்பானது!
தாத்தாவின் உற்சாகம்
சற்றே விநோதமானது!
விநோதத்தின் விடையாய்
கையில் பேத்தியுடன்
சிரித்து வந்த
தாத்தாவை நோக்கி
உற்சாகமாக வந்துகொண்டிருந்தது யானை!
No comments:
Post a Comment