Tuesday 31 July 2018

தெரிந்து செயல் வகை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!
ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.
இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??
குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் “சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்” என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.
அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் ” கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது” என்றும் சொன்னாள் !!
அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.
நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!

கதைகள்

http://worldkovil.com/?page_id=58

வேதாளம்

https://archive.org/stream/orr-3577/orr-3577_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88#page/n0

சிலந்தியும் ஈயும் வில்ஹெல்ம் லீப்நெஹ்ட்

http://www.tamilcircle.net/document/MarxistBookCollections/m000065.pdf

Sunday 29 July 2018

பணமதிப்பிழக்கமும் வங்கிகளும்

 நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல...இதனை முதலிலேயே நான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் இந்தப் பதிவில் நுணுக்கமான பொருளாதார கோட்பாடுகளையோ அல்லது அதன் விமர்சனங்களையோ நீங்கள் எதிர்பார்த்தீர்களே என்றால், நிச்சயம் நீங்கள் ஏமாற்றமடையக் கூடும். எனவே நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல என்ற ஒரு விடயத்தை உங்களிடம் முதலிலேயே சொல்லியாகத்தான் வேண்டியிருக்கிறது. எனவே, ஒரு சாமானிய மனிதனான எனது வாழ்வில் நான் கண்டறிந்த விடயங்களை அடிப்படையாக வைத்தே இந்தப் பதிவு அமையப்பட்டிருக்கும். சரி, இப்போது நாம் இரண்டு நிகழ்வுகளைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.
2001ஆம் ஆண்டு. நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த காலம். முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் என்று வரலாற்றுப் பாடத்தில் (மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம்) யுத்தங்களுக்கு மத்தியில் உலாவிக் கொண்டிருந்த ஒரு காலமது.
"ஹிட்லரின் ஆட்டம் அதிகமாக இருக்கிறதே, இரு இரு அமெரிக்கா மட்டும் போரினுள் இறங்கட்டும்...அப்புறம் பார் ஹிட்லரின் கதியை" என்று ஒரு கதாநாயகனின் வருகைக்காக காத்திருப்பது போல் யுத்தத்தில் 'அமெரிக்காவின்' வருகையை எதிர்பார்த்திருந்த ஒரு காலமது. யுத்தங்களில் வெற்றி பெற்றவர்கள் கதாநாயகர்களாவது இயல்பு தானே. அமெரிக்காவும் அவ்வாறுதான் எங்கள் முன் ஒரு கதாநாயனாக அப்பொழுது உருவாகி இருந்தது.
ஆனால் போர் எங்களுக்கு எளிதாகப் புரிந்தது போல், பொருளாதாரம் எங்களுக்குப் புரியவில்லை. 'என்னடா இவன், வரலாறு...போர் அப்படி இப்படின்னு ஆரம்பிச்சிட்டு திடீர்னு பொருளாதாரம் பற்றி பேசுகிறான்' என்ற எண்ணம் இங்கே வரலாம். ஏனென்றால் எங்களது பாடப் புத்தகத்தில் இரண்டு உலகப் போர்களுக்கு இடையில் 'அமெரிக்காவின் பெரும் பொருளாதார சரிவு (The Great American Depression)' என்று வந்த அந்தப் பகுதியைக் கண்டதும் எங்களுக்கும் அதே எண்ணம் தான் வந்தது.
முதலாம் உலகப் போரில் பெரிய வெற்றியினைப் பெற்று மாபெரும் இலாபங்களை அடைந்த அமெரிக்கா திடீரென்று ஒன்றுமில்லாதப் பஞ்ச பரதேசியாக மாறி விட்டது என்று அதில் கூறி இருந்தார்கள். கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் தெருவுக்கு வந்து விட்டார்கள் என்றார்கள். வேலையில்லாமல் அமெரிக்கர்கள் அனைவரும் வாடினார்கள் என்று கூறினார்கள். புதுப் பணக்காரனாக அமெரிக்கா அழிந்து விட்டது என்று இங்கிலாந்து மற்றும் ஏனைய உலக நாடுகள் கருதின என்று கூறினார்கள்.
எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
எங்கும் தோற்கவில்லை, யுத்தத்தில் வென்றுதான் இருக்கிறார்கள், இயற்கை பேரழிவுகள் ஒன்றுமில்லை, அப்படி இருக்கும் போது எப்படி அந்த நாடு திடீரென்று ஒன்றுமில்லாத நாடாக மாற முடியும்? கோடிக்கணக்கான பணத்தினை வைத்திருக்கும் மனிதன், அவனிடம் இருந்து யாரும் கொள்ளையடிக்காமல் எவ்வாறு திடீரென ஒன்றுமில்லாதவனாக முடியும்?
என்னிடம் 1000 ரூபாய் இருக்கின்றது என்றால், அதனை நான் செலவழிக்காமல் இருக்கின்ற வரையோ அல்லது என்னிடமிருந்து அதனை யாரும் திருடாத வரையோ, அந்த ஆயிரம் ரூபாய் என்னிடம் தானே இருக்கக்கூடும். எதுவுமே நடக்காமல், அந்த 1000 ரூபாய் என்னிடம் இருக்கின்ற போதே நான் எவ்வாறு பிச்சைக்காரனாக முடியும்?
இது எனக்கு அன்று புரிந்திருக்கவில்லை. நீண்ட காலம் புரிந்துக் கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அதன் தேவையும் அப்பொழுது இருந்திருக்கவில்லை. சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் 2008 ஆம் வருடத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது.
 2008 ஆம் ஆண்டு...மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிப் புரிந்து கொண்டிருந்த காலம். 'அமெரிக்காவில் பூம்...பூம் (Boom - அதாவது அமெரிக்காவின் பொருளாதாரம் பிச்சுக் கொண்டு போகின்றது என்று அர்த்தம்)' என்று கூறி மென்பொருள் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆட்களை எடுத்துக் கொண்டிருந்த காலம்.  அந்த நிறுவனம் இந்த நிறுவனத்தை வாங்கியதாம், அவனுக்கு இவ்வளவு சம்பளமாம் என்று எங்கு திரும்பினாலும் அதே பேச்சு.
ஆனால் திடீரென்று ஒரு நாள், 'அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமாகி வருகின்றது...புதிய வேலைகளை அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் எளிதாக வழங்க மறுக்கின்றன, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..அனைவருக்கும் வேலை போனாலும் போகலாம்' என்ற செய்தி பரவலாக வெளிவர ஆரம்பித்தது. சில நாட்களிலேயே அமெரிக்காவின் முன்னணி வங்கிகள் மண்ணைக் கவ்வுகின்றன...தினமும் 'அந்த வங்கி திவாலானது' 'இந்த வங்கி திவாலானது' என்ற செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கேற்றார்ப் போல், மென்பொருள் நிறுவனங்களிலும் வாராவாரம் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். வேலைக்காகத் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேருவதற்காக காத்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கோர் தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும், 'வேலைக்கு கூப்பிடுவார்களா இல்லையா?' என்பதனை அறியாமலே தொடர்ந்து காத்துக் கொண்டிருந்தனர். ஏற்றுமதி முற்றுலுமாக படுத்துக் கொண்டது.

இம்முறையும் இந்த நிலை எதனால் வந்தது என்று புரியவில்லை. அமெரிக்காவின் பொருளாதாரம் அமோகமாக இருக்கின்றது என்று கூறிய ஒரு சில தினங்களிலேயே, அங்கே மாபெரும் பொருளாதார நெருக்கடி நேருகின்றது. இலட்சக்கணக்கானோர் வேலை இல்லாமல் இருக்கின்றனர், பெரிய பெரிய நிறுவனங்கள் இழுத்து மூடப்படுகின்றன...1930களில் நடந்ததை விட மோசமான ஒரு நிலையில் அமெரிக்கா தள்ளப்படுகின்றது. ஆனால் இம்முறை பாதிப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் அதன் தாக்கம் இருக்கின்றது...ஆஸ்திரேலியாவிலும் இருக்கின்றது...உலக முழுவதும் இருக்கின்றது.

இந்தியாவிலும் எந்தெந்த துறையெல்லாம் அமெரிக்காவைச் சார்ந்து இருந்ததோ, அந்த துறையெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது....அந்த துறைகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தன. மற்ற ஏனைய துறைகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டுதான் இருந்தன. 2008 ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய அந்த நெருக்கடி இந்தியாவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஏன் இந்த நிலைமை? எதனால் இவ்வாறு நிகழ்கின்றது? என்ற கேள்விகளுக்கு அப்பொழுதும் எனக்கு தெளிவான விடை கிட்டவில்லை. சரி இருக்கட்டும், இப்பொழுது, 'பணமதிப்பிழக்கமும் வங்கிகளும்' என்று தலைப்பை வைத்து விட்டு அவற்றைப் பற்றி ஒன்றுமே கூறாமல், ஏதேதோ சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டுப் போகின்றானே என்றே நீங்கள் எண்ணலாம். ஆனால் நான் சம்பந்தமில்லாமல் பேசவில்லை...நான் கூறிய நிகழ்வுகளுக்கும் நமது நாட்டில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கின்றது. அந்தத் தொடர்பினைத் தான் நாம் இன்று காண வேண்டி இருக்கின்றது.

அதுவும் குறிப்பாக பணமதிப்பிழக்கம் என்ற ஒற்றை நடவடிக்கையின் மூலமாக மக்களது ஒட்டுமொத்த பணத்தையும் வங்கிகளுக்கு கொண்டு வந்து விட்ட இந்த காலத்தில் நாம் இதனைப் பற்றி கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

முதலில், கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை என்றார்கள்...ஆனால் கருப்பு பணமே நாட்டில் இல்லை என்ற முடிவினைத் தான் இப்பொழுது அவர்களது புள்ளி விவரங்கள் தருகின்றன...ஒரு கருப்பு பணத்தையும் அவர்கள் பிடித்த பாடில்லை. பிடிக்கவும் மாட்டார்கள் என்பது வேற கதை.

ஆனால் வெற்றிகரமாக அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றால், மக்களது பணத்தை வங்கிகளுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்...மேலும் இனிமேல் பணம் சார்ந்த பரிவர்த்தனைகளும் வங்கிகளின் மூலமாகவே நடைபெறும் வண்ணம் இருக்கின்ற ஒரு அமைப்பினை நடைமுறைப்படுத்த அவர்கள் விரும்புகின்றனர்.

அவர்களின் இந்த நடவடிக்கைகளினாலேயே தான் நாம் மேலே உள்ள விடயங்களை காண வேண்டியதாயிற்று. ஏனென்றால் இரண்டுக்கும் தொடர்பு இருக்கின்றது. இப்பொழுது உங்களிடம் முதலில் கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்கிறேன்...

என்னிடம் 1000 ரூபாய் இருக்கின்றது என்றால், அதனை நான் செலவழிக்காமல் இருக்கின்ற வரையோ அல்லது என்னிடமிருந்து அதனை யாரும் திருடாத வரையோ, அந்த ஆயிரம் ரூபாய் என்னிடம் தானே இருக்கக்கூடும். எதுவுமே நடக்காமல், அந்த 1000 ரூபாய் என்னிடம் இருக்கின்ற போதே நான் எவ்வாறு பிச்சைக்காரனாக முடியும்?

முடியாது தானே. சரி, இப்பொழுது அந்த ஆயிரம் ரூபாயை நான் வங்கியில் போட்டு வைத்திருக்கின்றேன்...அந்த வங்கிக்காரன் வங்கியை இழுத்து சாத்திவிட்டு போய் விட்டான் என்றால், ஆயிரம் ரூபாய் என்னிடம் இருந்தும் கூட நான் பிச்சைக்காரனாகி விடுகின்றேன் தானே...!!!

அமெரிக்காவிலும் அதேதான் நடந்தது. ஒரே நாளில் இலட்சக்கணக்கானோர் அமெரிக்காவில் பிச்சைக்காரர்களானது இப்படித்தான். அமெரிக்காவில் இருப்பவை அனைத்தும் தனியார் வங்கிகள்...ஒரே நாளில் அவை கடையை சாத்த, அந்த வங்கியில் பணத்தினை வைத்திருந்த மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து விட்டார்கள். அரசாங்க வங்கி என்றால் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கலாம், தனியார் வங்கிகள் என்றால் யாரைக் கேள்வி கேட்பது...? 

மகாபாரதம்

மகா பாரதம் - காப்ஸ்யூல் வடிவில் :-
================================
குரு வம்சம் ஆண்ட ஹஸ்தினாபுரத்தின் மன்னன் சாந்தனு மகனும் இளவரசனுமான பீஷ்மர் தன் தந்தைக்காக மணவாழ்க்கையையும் அரசுரிமையையும் துறந்தார். அவர் தந்தை தான் விரும்பிய ஒரு மீனவப் பெண்ணை மணந்தார்.
மீனவப் பெண் சத்யவதியின் இரு மகன்களும் குழந்தைகள் இல்லாமலே இறந்து போனார்கள். அவர்களின் இரு விதவை மனைவிகளும் ( அம்பிகை & அம்பாலிகை ) வியாச முனிவர் மூலமாக கருவுற்றார்கள். இரு குழந்தைகள் பிறந்தன.
ஒன்றுக்கு பார்வையில்லை - திருதராஷ்டிரன். மற்றொன்றுக்கு வெளிறிப் போன தோல் - பாண்டு.
பாண்டு மன்னரானார்… இரு மனைவிகள்…குந்தி & மாத்ரி . குழந்தைகள் இல்லை. விதிவசத்தால் ஒரு முனிவரிடம் எந்தப் பெண்ணைத் தொட்டாலும் மரணம் நேரும் என்கிற சாபம் பெற்றிருந்தார். அதனால் துறவறம் பூண்டு கானகம் சென்றார்.
பார்வையற்ற திருதராஷ்டிரர் அரசாட்சிக்கு வந்தார். மனைவி காந்தாரி கணவனுக்குப் பார்வையில்லை என்பதற்காக தானும் கண்களைக் கட்டிக் கொண்டாள்.
பாண்டுவின் முதல் மனைவி குந்தி வரமாய் முனிவர் துர்வாசரிடம் பெற்ற ஒரு மந்திரத்தைப் பயன்படுத்தி, 3 கடவுள்களிடம் 3 மகன்களைப் பெற்றாள். தருமன் ,பீமன் ,அர்ச்சுனன் & அதே மந்திரத்தால் 2வது மனைவி மாதுரி 2 மகன்களைப் பெற்றாள். நகுலன் சகாதேவன்.
குழந்தை பிறக்கும் வரை பொறுமையில்லாத காந்தாரி தன் வயிற்றில் அடித்துக் கொள்ள, ஒரு சதைப் பிண்டம் வெளியே வந்து விழுந்தது. அதை 100 குழந்தைகளாக மாற்றினார் வியாசர்.
திருதராஷ்டிரரின் பிள்ளைகளான 100 கௌரவர்கள் அரண்மனையில் வளர்ந்தனர். பாண்டுவின் 5 பிள்ளைகளான பாண்டவர்கள் வனத்தில் வளர்ந்தனர். தான் பெற்ற சாபம் மறந்து வசந்தகாலப் பொழுதில் காமம் முற்றிய பாண்டு மாதுரியைத் தொட இறந்து போனான். மாதுரியும் தன்னை மாய்த்துக் கொண்டாள்.
ஆதரவற்ற பாண்டவர்களும் குந்தியும் அரண்மனைக்குத் திரும்பினார்கள்…
கௌரவர்களின் கோபத்தை எதிர்கொண்டபடி வளர்ந்தார்கள். பீஷ்மர் அவர்களுக்கு துரோணரை ஆசிரியராக நியமித்தார்.
போர்க்கலை கற்றுக் கொடுத்ததற்கு குருதட்சணையாக, தன் பழைய சபதத்தின் பொருட்டு, பாஞ்சால தேசத்தில் பாதியை தனக்கு வென்று தருமாறு கேட்டார் துரோணர். நிறைவேற்றினார்கள் பாண்டவர்கள்.
பாண்டவர்களின் வெற்றிக்கு அரக்கு மாளிகையைப் பரிசளித்தார் பெரியப்பா. கௌரவர்கள் அதில் தீ வைக்க, மயிரிழையில் உயிர் தப்பி காட்டுக்குள் ஒளிந்தார்கள் பாண்டவர்கள்.
காட்டில் பாண்டவர்களில் பலசாலியான பீமன், அரக்கர்கள் பகாசுரனையும் இடும்பனையும் கொன்றான். இடும்பனின் தங்கை இடும்பியை மணந்தான். அவர்களுக்கு கடோத்கஜன் பிறந்தான்.
தன் ராஜ்ஜியத்தில் பாதியை இழந்த பாஞ்சால மன்னன் துருபதன், தன் மகள் திரௌபதி, மகன்கள் சிகண்டி திருஷ்டத்யும்னன் மூலமாக பழி வாங்க முடிவெடுத்தான்.
அரச வம்சத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதாலும், தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்பதாலும் திறமைசாலியான கர்ணன் பாஞ்சாலத்தில் நடைபெற்ற வில் வித்தைப்போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்தான்.துரியோதனன் அவனை அங்கதேச அரசனாக்கி கௌரவித்து அவனை தனக்கு செஞ்சோற்று கடனாளி ஆக்கினான்.
பாஞ்சாலத்தில் திரௌபதி சுயம்வரம் ...
அந்தணராக மாறுவேடம் பூண்டிருந்த பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் போட்டியில் வென்று திரௌபதியை பரிசாகப் பெற்றான். குந்தியின் ஆணைப்படி அவள் ஐவருக்கும் மனைவியானாள்.
பாஞ்சாலத்தில் தங்கள் மைத்துனன் கிருஷ்ணனை சந்தித்த பாண்டவர்கள் அவனுடன் நட்புறவு கொண்டார்கள். மாறுவேடத்திலிருந்து தங்களை வெளிப்படுத்தி அவன் ஆதரவையும் பெற்றார்கள். கிருஷ்ணன், மாமனார் துருபதன் துணையுடன் தைரியமாக ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பினார்கள் பாண்டவர்கள். தங்களுக்குரிய அரசுரிமையை வேண்டினார்கள்.
ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டது.
பாண்டவர்கள் காண்டவ வனத்தைப் பெற்றார்கள். அதை எரித்து, அழித்து இந்திரபிரஸ்தம் என்கிற அழகிய நகரத்தை உருவாக்கினார்கள்.
திரௌபதியின் தனிமைக்கு பங்கம் விளைவித்த காரணத்தால் அர்ஜுனன் குறிப்பிட்ட காலத்துக்கு நாடு கடத்தப்பட்டான். அந்தப் பயணத்தில் உலூபி, சித்ராங்கதா, கிருஷ்ணனின் தங்கை சுபத்ரா ஆகியோரை சந்தித்து மணம் செய்து கொண்டான்.
கிருஷ்ணனின் உதவியோடு ஜராசந்தனைக் கொன்றான் பீமன். பாண்டவர்களின் புகழால் ஈர்க்கப்பட்டு யுதிஷ்டிரரின் முடிசூட்டு விழாவில் எல்லா அரசர்களும் கலந்து கொண்டனர்.
பொறாமையுற்ற கௌரவர்களில் மூத்த துரியோதனன் மாமன் சகுனியின் தூண்டுதலால் பாண்டவர்களை சூதுக்கு அழைத்தான். அதில் ராஜ்ஜியத்தையும் தன்னையும் திரௌபதியையும் பணயம் வைத்து இழந்தான் யுதிஷ்டிரன்.
பாண்டவர்களை அவமதிக்க திரௌபதியின் துகிலை உரிந்தான் கௌரவர்களில் ஒருவனான துச்சாதனன். கிருஷ்ணனின் அற்புதத்தால் திரௌபதியின் மானம் காப்பாற்றப்பட்டது.
துச்சாதனனின் ரத்தத்தால் குளித்த பிறகே கூந்தலை முடிவேன் என சபதமேற்றாள் திரௌபதி. பதட்டமடைந்த கௌரவர்கள், பாண்டவர்கள் அரசைத் திரும்பப் பெற வேண்டுமெனில் மீண்டும் விளையாடி ஜெயிக்கச் சொன்னார்கள்.
பாண்டவர்கள் மீண்டும் தோற்றனர். 13 ஆண்டுகள் வனவாசம் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
கடைசி வருடம் தாங்கள் யார் என்று பிறர் அறியாமல் வாழ வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டது.
வனவாசம் முடிந்தது. பாண்டவர்களின் பங்கைக் கொடுக்க கௌரவர்கள் மறுத்தார்கள். கிருஷ்ணனின் தூதும் பலன் தரவில்லை. 7 அக்ரோணி படைகளுடன் பாண்டவர்கள் போருக்குத் தயாரானார்கள். கௌரவர்களிடம் இருந்தது 11 அக்ரோணி படைகள்.
குருஷேத்ரத்தில் படைகள் மோதத் தயாராயின. போர்க்களத்தில் அர்ஜுனன் மனோபலம் அற்று நம்பிக்கையிழக்க, கிருஷ்ணர் அவனுக்கு கீதோபதேசம் செய்தார். 18 நாள் போர் ஆரம்பமானது.
தான் இறக்கும் வினாடியை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர் பீஷ்மர்… அவர் வெற்றிக்குத் தடையாக நின்றார். திருநங்கை சிகண்டி எதிரே வர தன் வில்லைத் தாழ்த்தினார். அந்த கணத்தில் அர்ஜுனனின் அம்புகளுக்கு வீழ்ந்தார்.
அடுத்த படைத்தளபதியானார் துரோணர். இரக்கமின்றி எல்லா போர் விதிகளும் மீறப்பட்டன. இரவில் போர்… அபிமன்யுவும் கடோத்கஜனும் கொல்லப்பட்டனர்.
அஸ்வத்தாமன் என்கிற யானை இறந்த செய்தி தவறாக பரப்பப்பட, தன் மகன்தான் என்று நினைத்து வில்லை கீழே போட்டார் துரோணர். திருஷ்ட்த்யும்ன்ன் அவர் தலையைக் கொய்தான்.
குந்திக்குப் பிறந்து, கைவிடப்பட்ட முதல் குழந்தை தான் என்பதை அறிந்திருந்தும் கர்ணன் கௌரவர் படைக்குத் தளபதி ஆனான். இதை அறியாத பாண்டவர்கள் கர்ணனின் தாழ்ந்த நிலையை கேலி செய்தார்கள்.
மண்ணில் புதையுண்ட தேர்ச் சக்கரத்தை தூக்க முயற்சித்த, நிராயுதபாணி கர்ணனை கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் அர்ஜுனன் யுத்த தர்ம விரோதமாக கொன்றான். பின்னால் அதற்காக குற்றவுணர்ச்சி அடைந்தான்.
எல்லா கௌரவர்களையும் பீமன் கொன்றான். துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்து, திரௌபதியின் கூந்தலையும் கழுவி முடியச் செய்தான். துரியோதனனின் துடையைப் பிளந்து கொன்றான்.
பாண்டவர்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள். இரவில், ஓய்வாக எல்லோருமே உறங்கிக்கொண்டிருந்த பாசறை கூடாரத்துக்கு அஸ்வத்தாமன் தீ வைத்தான். அதில் பாண்டவ வாரிசுகளான திரௌபதியின் மக்கள் இறந்து போனார்கள்.
யுதிஷ்டிரர் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். போரில் உயிர் பிழைத்த ஒரே வாரிசு அபிமன்யுவின் மகன் பரிக்‌ஷித்… தாய் உத்தரையின் கருவிலிருந்தது.
குந்தி, திருதராஷ்டிர, காந்தாரி அனைவரும் இறுதி மூச்சை விட வனத்துக்குச் சென்றார்கள்.
வெற்றிகரமான நீண்ட கால ஆட்சிக்குப் பிறகு, கிருஷ்ணரின் மரணத்தையும் யாதவ குல நாசத்தையும் தூது மூலம் கேட்டு அறிந்த யுதிஷ்டிரர் மனம் உடைந்து ராஜ்ஜியத்தை துறந்தார்.
பாண்டவர்களும் திரௌபதியும் தேச சஞ்சாரம் செய்து இறுதியாக இமயமலை செல்கிறார்கள். மலையில் ஒவ்வொருவராக இறந்து போகிறார்கள். யுதிஷ்டிரருக்கு மட்டும் சரீரத்தோடு செல்ல சொர்க்க வாசல் திறக்கிறது.
சொர்க்கத்தில் முதலில் கௌரவர்களை காண்கிறார் யுதிஷ்டிரர். முதலில் கடுங் கோபமடைந்தார்… பிறகு, நீண்ட நெடுங்காலமாக பழி வாங்கும் உணர்ச்சியோடு தான் இருந்ததால் சொர்க்கம் ஒருபோதும் அவருக்கு கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்டார்.
மானிட குளம் வாழ ஒரு கையேடு போல பயன்படும் மகாபாரதம் படிப்போம். முக்தி பெற்று பேரின்பம் பெறுவோம்.
குரு வம்சம் தலைமுறை அட்டவணை -
காண்க படம்

Saturday 28 July 2018

ஞான உரைகள்

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில் சக்கிலியன் ஒருவன் வசித்து வந்தான். அவன் திருமணமாகி நெடு நாளாய் புத்திரன் இல்லாமல் இருந்தான். சக்கிலியன் ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான். அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக புத்திரன் உண்டாவான் என தேற்றினார்.
சக்கிலியன் எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால் அவர்களுடைய ஆசியால் புத்திரன் உண்டாகும் என்றார்.
தான் தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான். ஒருநாள் ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தன் தொழிலில் ஈடுபட்டான்.
பக்தியில் மேம்பட்ட அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார். அது சமயம் வெயில் காலமாதலால் வெப்பத்தால் துடிதுடித்துச் சென்று கொண்டிருந்தார்.
வழியில் ஒரு மரத்தடியில் வைத்திருந்த குடை, செருப்பு, விசிறி இம் மூன்றையும் கண்டார். அதை மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு அம் மூன்றையும் வைத்தவனை வாழ்த்திக் கொண்டே சென்றார். அந்தணர் காசிக்குச் சென்று திரும்பி வரும் வழியில் உயிர் துறந்தார்.
மூன்று பொருட்களையும் தானஞ் செய்த சக்கிலியன் வீட்டில் மகனாகப் பிறந்தார். சக்கிலியன் தனக்கு மகப்பேறு உண்டானது கண்டு மகிழ்ந்தான். குழந்தை பிறந்து பேச ஆரம்பித்த பருவத்தில் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்தது. அது கண்டு பெற்றோர்கள் கவலைப் பட்டனர். குழந்தை ஞான நெறிக்கேற்ப வளர்ந்து பதினாறு வயது அடைந்தது.
காசி அருகிலுள்ள ஊரில் கள்வர்கள் பயம் அதிகமாக இருந்தது. மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை.அவ்வூர் அரசனிடம் சென்று அனைவரும் முறையிட்டனர். அரசன், நாள் தோறும், தினம் ஒருவராக ஊர் சுற்றி வந்து நான்கு ஜாமங்களும் பறை கொட்டி வரும்படி ஆணை பிறப்பித்தார். அவ்வாறே மக்களும் வீட்டிற்கு ஒருவராகப் பறை கொட்டி வந்தனர்.
ஒரு நாள் சக்கிலியன் முறை வந்தது. அன்று அவன் முக்கியமாக வெளியில் செல்ல நேர்ந்தது. மனைவியிடம் ஊமை மகனை பறை அடிக்க அனுப்பும் படிச் சொல்லி விட்டுச் சென்றான். அன்றிரவு தாய் மகனை அழைத்தாள். அவன் கையில் பறையைக் கொடுத்து சாம சாமத்திற்கு அடிக்கும் படி ஜாடை காட்டினாள். ஊமைச் சிறுவன் பறையை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்திலிருந்து அடித்துக் கொண்டே சென்றான்.
பிறந்தது முதல் பதினாறு பிராயம் வரையிலும் பேசாமல் இருந்தவன் முதல் ஜாமம் முடிந்ததும் பறையை நிறுத்தி வடமொழியில் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னான். அந் நாட்டு அரசன் அதைக் கூர்ந்து கேட்டார். இவ்வாறு சிறுவன் நான்கு ஜாமங்களுக்கும் பறை கொட்டி நான்கு ஸ்லோகங்கள் சொல்லி முடித்தான்.
பொழுது புலர்ந்தது. வீட்டிற்குச் சென்றான். பறையை வைத்தான். பழைய படி மௌனமாயிருந்தான். அன்றிரவு முழுவதும் விழித்திருந்து அச் ஸ்லோகங்களைக் கேட்ட அரசன், அவைகளின் பொருளை ஆராய ஆவல் கொண்டான்.
விடிந்ததும் தந்தை [சக்கிலியன்] வீட்டிற்கு வந்தான். மகன் தன் கடமையை ஆற்றினானா என்பதைப் பற்றி மனைவியிடம் விசாரித்தான்.
அரசனும் காலையில் அரசவைக்கு வந்தார். மந்திரியிடம் நேற்றிரவு பறை கொட்டியவனை அழைத்து வரும்படி ஆணையிட்டார். அவர்கள் சேவகர்களுக்குக் கட்டளையிட்டனர். அவர்கள் சேரியில் சென்று சக்கிலியனை அழைத்து அரசர் முன் நிறுத்தினர்.
சக்கிலியன் அரசரைக் கண்டு நடுக்கமடைந்தான். அரசன் சக்கிலியனை ஆசனத்தில் அமரச் செய்து, “நேற்றிரவு பறை கொட்டும் போது நான்கு ஜாமத்திற்கும் நான்கு ஸ்லோகங்கள் சொன்னீர்களே அதன் பொருள் என்ன?” என ஆவலுடன் கேட்டார். சக்கிலியன் வியப்புடன், “அரசே! நேற்றிரவு பறை கொட்டியவன் என் மகன் அவன் பேச மாட்டான் ஊமையன்!” என்றான்.
உடனே அரசன் அச் சிறுவனை அழைத்து வரும் படிச் சொல்லச் சேவகர்கள் அவனை அழைத்து வந்தனர். அரசனது மனம் பக்குவம் பெற்றிருந்தது.
சக்கிலியன் மகனைக் கண்ட அரசன் தம் சிம்மாசனம் விட்டிறங்கினார். அச்சிறுவனை எதிர் கொண்டு அழைத்தார். ஆசனத்தில் அமரும் படி பணிவுடன் சொன்னார். இக் காட்சியைக் கண்ட அனைவரும் பிரமித்தனர். அரசர் சிறுவனை உணர்ந்தார். அவனது உள்ளக் கிடக்கையை அறிய அவாக் கொண்டு நேற்றிரவு நான்கு ஜாமங்களிலும் சொன்ன ஸ்லோகங்களின் பொருளை விளக்கும் படி வேண்டினன்.
சிறூவன் முதல் ஸ்லோகத்தைச் சொல்லி விளக்கம் செய்தனன்
“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி
தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத
ஜாக்ரதா!”
சரீரத்தில் மதிப்பிடற்கரிய ரத்தினம் போன்ற மணிகள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. காமம், குரோதம், லோபம் ஆகிய திருடர்கள் ஞானமாகிய ரத்தினத்தை அபகரிக்கும் பொருட்டு சரீரத்தில் வசிக்கிறார்கள். ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.
சிறுவன் ஞான நெறியில் ஈடுபட்டு அந்தரங்கத்திலுள்ள ஆன்மாவை அறிந்தவன். அவ் ஆன்மாவைக் கொண்டு பரமாத்மா தரிசனம் காண முயற்சிப்பவன். ஆதலால் அவன் பார்வையும், சொற்களும் மன்னன் மதிக்கும் நிலையில் இருந்தது. மன்னன் மேலும் கேட்க அவாக் கொண்டான்.
சிறுவன் இரண்டாம் ஸ்லோகம் சொல்லி பொருள் கூறினன்
“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந:
சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா:
ஜாக்ரதா”
“பிறத்தல் மிகவும் துன்பம். பின்பு விருத்த பருவம் பெருந்துன்பம். இதனிடையில் வாலிப காலங்களில் மாதரின் மோகத்தால் அடிக்கடி உண்டாகும் துன்பங்கள் மிகப் பெரியதாகும். இவையன்றி ஜனன, மரண சம்சாரமாகிய சமுத்திரத்தில் படும் துயரம் அளவிறந்தனவாம். ஆகையால் ஆன்மாக்களே ஜாக்கிரதையாக இருங்கள்”
இரண்டாம் ஸ்லோகத்தின் மூலம் சம்சார சாகரம் தீராத துக்கம் என்றும் இதனின்று விலக அறிவு தனித்திருக்க வேண்டும் என்றும் தெளிந்தார் மன்னர். சிறுவன் சொன்ன மொழிகளைக் உபதேசமாகக் கொண்டு வாழ்நாளில் அடைய வேண்டிய மெய்ப் பொருளை அடைய ஆவல் கொண்டு அடுத்த ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்டினார்.
“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”
“ஈன்று வளர்த்த அன்னையும், தந்தையும் அநித்தியம். இவையன்றி தனக்குரிமை என்றெண்ணும் பொருள்களும் அநித்தியம். தனக்குச் சொந்தம் என்றெண்ணும் வீடு முதலியவைகளும் அநித்தியம். ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள்! எச்சரிக்கையாய் இருங்கள்!!
அரசன் சிறுவன் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு ஆனந்தம் அடைந்தார். நான்காம் ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்ட, அவ்வாறே சிறுவன் கூறினன்.
“ஆயசா பத்தே லோகே கர்மணா பஹு
சிந்தையா
ஆயுக்ஷீணம் நஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா
ஜாக்ரதா”
“இந்த உலகில் மனிதர்கள் நானாவித சிந்தைகளாகிய கர்ம சம்பந்தமான ஆசைகளினாலே கட்டுப்பட்டுள்ளார்கள். இதனால் தனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிகின்றதில்லை. ஆகையினால் எச்சரிக்கையாய் இருங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். கர்மாவை வெல்ல முயலுங்கள்”
சிறுவனின் ஞான உரைகளைக் கேட்ட மன்னர் மிக வியந்தார். சிறுவனின் தந்தையை அழைத்து, “உன் மகன் ஊமையன் அல்லன். பெரிய ஞானி நான் அவன் ஞான மொழிகளைக் கேட்கும் பேற்றைப் பெற்றேன்” என்று ஆனந்தமடைந்தார்.
நம்முள் இருக்கும் திருடர்களை கவனியாது புறத்தேயிருக்கும் திருட்டுகளைப் பற்றி கவலைப்பட்டு காலத்தை வீணாகக் கழிக்கின்றோம் என்பதை இக்கதை வலியுறுத்துகிறது.

அட்சய பாத்திரம்



download (2)
பல யுகங்களுக்கு முன்னால் காசியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. உண்ண உணவும் பருக நீரும் இல்லாமல் மக்கள் மிகவும் அவதியுற்றனர். அதைக் கண்டு சகிக்க முடியாத மலைமகள் அன்னபூரணியாக அவதாரம் எடுத்தாள். தனக்கென்று ஒரு மாளிகையை ஏற்படுத்திக்கொண்டு பரிவார தேவதைகளின் உதவியோடு மக்களின் பசிப்பிணி தீர்த்தாள். யார் எப்போது வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் உணவு வழங்கிக்கொண்டே இருந்தாள்.ima
ஒரு நிலையில் அன்னையும் அவளது பரிவாரங்களும் களைத்துப்போய்விட்டனர். அவர்களுக்கு உதவவும் அன்னபூரணியின் பெருமையை உலகறியச் செய்யவும் திருவுளம் கொண்டார் எம்பெருமான் ஈசன். பிட்சாடனர் வேடம் பூண்டு மனைவின் மாளிகைக்குப் போய் தன் பசியைத் தீர்க்கும்படி வேண்டினார். அன்னையும் நிறைய அன்னம் காய்கறிகள் பழங்கள் என உணவிட்டுக்கொண்டே இருக்க அவரும் அனைத்தையும் உண்டுகொண்டே இருந்தார்.download
மாளிகையில் இருந்த அரிசி பருப்பு காய்கறி முதலிய பொருட்கள் அனைத்தும் தீரும் நிலை என்ன செய்வாள் அன்னை/ உடனே காசியில் பிந்து மாதவன் என்ற பெயரில் சேவை சாதிக்கும் தன் அண்ணனாம் திருமாலை நினைத்து வழி கேட்டாள். தங்கையின் துயர் தீர்க்க தயாபரன் தானும் ஒரு பிச்சாண்டி போல உருக்கொண்டு மகாலட்சுமியின் அருளால் கிடைத்த பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்.download (1)
வந்தவரை வரவேற்று அன்னம் படைத்தாள் அன்னபூரணி. அவற்றை அந்த பாத்திரத்தில் இட்ட மகாவிஷ்ணு ‘அட்சய” என்ற வார்த்தையைக் கூறி அப்பாத்திரத்தைத் தொட்டார் அன்றுமுதல் அதிலிருந்து குறைவின்றி பலவகையான உணவுப்பொருட்கள் தோன்றின. முதல் முதல் அட்சய பாத்திரம் தோன்றிய நாள் அட்சய திருதியை. தன்னால்தான் பிட்சாடனாக வந்த சிவனின் பசியையும் தீர்த்தது அட்சய பாத்திரம். உடனே தன் சுயரூபத்தில் தோன்றி அன்னபூரணியின் பணி தடையின்றி நடக்கவும் அவள் புகழ் திக்கெட்டும் பரவவும் வரம் அளித்தார் ஈசன்.images
மகாவிஷ்ணுவும் அப்பாத்திரத்தை தங்கையின் கையில் கொடுத்து “ உமா இதுதான் அட்சய பாத்திரம் இதிலிருந்து வரும் பொருட்கள் என்றுமே குறையாது. இதைக் கொண்டு நீ உன் பணியைச் செவ்வனே நிறைவேற்றுவாயாக இதன் தேவை தீர்ந்தபின் இப்பாத்திரம் தானே வைகுண்டம் வந்து சேர்ந்துவிடும்” என்று கூறி மறைந்தார். அதன் பிறகு பஞ்சம் தீரும் வரை அப்பாத்திரத்தைக் கொண்டு அன்னை அன்னபூரணி மக்களின் துயர் தீர்த்தாள். பஞ்சம் தீர்ந்து அன்னபூரணி விசாலாட்சியாக மறியதும் அட்சயப் பாத்திரம் மகாலட்சுமியைச் சென்று சேர்ந்து விட்டது.

இறைவன் கணக்கு:



 
ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு   வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்…, பெருத்த மழை வேறு…, அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.   வந்தவர் “நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.  சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?   என்றார் வந்தவர்.   இருவரில் முன்னவர் சொன்னார்,   என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்.   இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர், ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள், இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.  மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார். ( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)    நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்.   இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்…ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்…
பொழுது விடிந்தது, மழையும் நின்றது.   மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி, என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து, நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.மூன்று ரொட்டிகளை கொடுதவர், அந்த காசுகளை சமமாகப்பிரித்து, ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.  மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.   ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(3:5)    மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை, என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும், நான் பங்கிட சம்மதித்தேன்…நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது, என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்.   சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது. 
அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை.   நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றான். மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது…மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து, தீர்ப்பும்,விளக்கமும் தந்தார். கடவுள் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.   அடுத்த நாள் சபை கூடியது. மன்னர் இருவரையும் அழைத்தார்.   மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.  ஒரு காசு வழங்கப்பட்டவர், “மன்னா…!  இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொன்டார்” என்றார்.  அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள்.  அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது. ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. இதற்கு இதுவே அதிகம் . 
அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள். ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்(1:7) என்றார்…ஆம் ! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகதான் இருக்கும்…நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு…எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு. இது கடவுளின் கணக்கு…இது கடவுளின் ஏட்டு கணக்கு இல்லை…தர்ம புண்ணிய கணக்கு…! நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள். முழுமையாக தன்னை சேவைக்கு அர்பணித்துக் கொண்டவர்களை இறைவன் அறிவான். வாழ்க வளமுடன் மிகவும் நலமுடன். வாழ்த்துக்கள்.

Friday 27 July 2018

தாய்ப்பால்



உலகிலேயே குழந்தைகளுக்கு ஏற்ற... சத்தான... கலப்படம் இல்லாத சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால் தான். அதை புகட்டும் "தாய்"மார்கள் முதலில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை சரியாக புகட்ட முடியும்.
தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் போன்ற அனைத்து வகையான உயிர்ச் சத்துக்களும் உள்ளன. அதனால் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.
முதலில் நீங்கள் சத்தான... ஆரோக்கியமான உணவுகளைசாப்பிடுங்கள். அதிகப் புரத உணவுகள், பயறு வகைகள், பால், முட்டை, கீரை, பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். சுறாப் புட்டும், வெள்ளைப் பூண்டும் அதிகமாக சாப்பிட்டால் பால் அதிகமாக சுரக்கும். கிழங்கு வகை உணவுகளை குறைவாக சாப்பிடவும்.
அதிகமான காரம், மசாலா சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். எண்ணையில் பொரித்தவை மற்றும் எசன்ஸ் மற்றும் ரசாயனக் கலவை உணவுகள்... குறிப்பாக பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடக் கூடாது. முக்கியமாக குளிர்பானங்களை சாப்பிடவே கூடாது.
ஓட்டல்களில் பிரியாணி மற்றும் சிக்கன் 65 போன்ற நான்வெஜ் அயிட்டங்களை சாப்பிட வேண்டாம். ஐஸ்க்ரீம், மில்க்ஷேக் போன்ற அயிட்டங்களையும் சாப்பிட வேண்டாம். குறிப்பாக சீதாப் பழத்தை தொடவே வேண்டாம்.
சில நேரங்களில் வேறு காரணத்திற்காக அதாவது... ஈரம் மற்றும் இறுக்கம் காரணமாக குழந்தைகள் அழலாம். பசிக்காகத் தான் குழந்தை அழுகிறது என்பதை அறிந்து பால் கொடுக்கவும்.
குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு ஒரு முறை என்று நீங்களாகவே கணக்கிட்டு பால் கொடுக்க வேண்டாம். குழந்தை பசிக்காக அழுதால் கணக்கில்லாமல் பால் கொடுக்கவும்.
மார்பகப் புற்று நோய் உள்ளவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாஸிட்டிவ் ஹெபடைட்டிஸ் ஏ, பி, குஷ்டம், காலரா, வெறிநாய்க் கடியால், அல்லது ரேபிஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகப்படியான காய்ச்சலில் அவதிப்படுபவர்கள் ஆகியோரும் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது.
மன நோயால் பாதிப்படைந்த பெண் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.
தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம். குறிப்பாக முதல் நான்கு நாட்களுக்கு கொடுக்கும் சீம்பால், மூளைக்காய்ச்சல், போலியோ, வயிற்றுப் போக்கு, மலேரியா போன்ற நோய்களை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
தாய்ப்பால் அதிகமாக கொடுக்கும் தாய்மார்களுக்கு பிற்காலத்தில் அவர்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மன நிம்மதியுடன்... வசதியாக அமர்ந்து கொடுத்தால் பால் சுரப்பு அதிகமாகி... குழந்தைக்கு திருப்தியாக பால் கிடைக்கும். சில குழந்தைகள் பால் குடித்தபடி தூங்கிவிடும். அப்போது மார்பு காம்பிலிருந்து வெடுக்கென்று குழந்தையின் வாயை எடுக்கக் கூடாது. மெதுவாக எடுக்கவும்.
ஒவ்வொரு குழந்தையும்... ஒவ்வொரு முறையும் பால் குடிக்கும் அளவு மாறும். எவ்வளவு பால் குடிக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் குழந்தை பால் குடித்தவுடன் நன்கு தூங்கினாலோ, ஆரோக்கியமாக இருந்தாலோ...சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலோ... குழந்தையின் உடலமைப்பில் வித்தியாசம் தெரிந்தாலோ... குழந்தையின் எடை கூடினாலோ... குழந்தைக்கு தேவையான பால் கிடைக்கிறது என்று அர்த்தம்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், தாய்ப்பால் குடிக்காத குழந்தையின் மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


உலகிலேயே குழந்தைகளுக்கு ஏற்ற... சத்தான... கலப்படம் இல்லாத சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால் தான். அதை புகட்டும் "தாய்"மார்கள் முதலில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை சரியாக புகட்ட முடியும்.
தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் போன்ற அனைத்து வகையான உயிர்ச் சத்துக்களும் உள்ளன. அதனால் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.
முதலில் நீங்கள் சத்தான... ஆரோக்கியமான உணவுகளைசாப்பிடுங்கள். அதிகப் புரத உணவுகள், பயறு வகைகள், பால், முட்டை, கீரை, பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். சுறாப் புட்டும், வெள்ளைப் பூண்டும் அதிகமாக சாப்பிட்டால் பால் அதிகமாக சுரக்கும். கிழங்கு வகை உணவுகளை குறைவாக சாப்பிடவும்.
அதிகமான காரம், மசாலா சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். எண்ணையில் பொரித்தவை மற்றும் எசன்ஸ் மற்றும் ரசாயனக் கலவை உணவுகள்... குறிப்பாக பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடக் கூடாது. முக்கியமாக குளிர்பானங்களை சாப்பிடவே கூடாது.
ஓட்டல்களில் பிரியாணி மற்றும் சிக்கன் 65 போன்ற நான்வெஜ் அயிட்டங்களை சாப்பிட வேண்டாம். ஐஸ்க்ரீம், மில்க்ஷேக் போன்ற அயிட்டங்களையும் சாப்பிட வேண்டாம். குறிப்பாக சீதாப் பழத்தை தொடவே வேண்டாம்.
சில நேரங்களில் வேறு காரணத்திற்காக அதாவது... ஈரம் மற்றும் இறுக்கம் காரணமாக குழந்தைகள் அழலாம். பசிக்காகத் தான் குழந்தை அழுகிறது என்பதை அறிந்து பால் கொடுக்கவும்.
குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு ஒரு முறை என்று நீங்களாகவே கணக்கிட்டு பால் கொடுக்க வேண்டாம். குழந்தை பசிக்காக அழுதால் கணக்கில்லாமல் பால் கொடுக்கவும்.
மார்பகப் புற்று நோய் உள்ளவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாஸிட்டிவ் ஹெபடைட்டிஸ் ஏ, பி, குஷ்டம், காலரா, வெறிநாய்க் கடியால், அல்லது ரேபிஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகப்படியான காய்ச்சலில் அவதிப்படுபவர்கள் ஆகியோரும் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது.
மன நோயால் பாதிப்படைந்த பெண் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.
தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம். குறிப்பாக முதல் நான்கு நாட்களுக்கு கொடுக்கும் சீம்பால், மூளைக்காய்ச்சல், போலியோ, வயிற்றுப் போக்கு, மலேரியா போன்ற நோய்களை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
தாய்ப்பால் அதிகமாக கொடுக்கும் தாய்மார்களுக்கு பிற்காலத்தில் அவர்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மன நிம்மதியுடன்... வசதியாக அமர்ந்து கொடுத்தால் பால் சுரப்பு அதிகமாகி... குழந்தைக்கு திருப்தியாக பால் கிடைக்கும். சில குழந்தைகள் பால் குடித்தபடி தூங்கிவிடும். அப்போது மார்பு காம்பிலிருந்து வெடுக்கென்று குழந்தையின் வாயை எடுக்கக் கூடாது. மெதுவாக எடுக்கவும்.
ஒவ்வொரு குழந்தையும்... ஒவ்வொரு முறையும் பால் குடிக்கும் அளவு மாறும். எவ்வளவு பால் குடிக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் குழந்தை பால் குடித்தவுடன் நன்கு தூங்கினாலோ, ஆரோக்கியமாக இருந்தாலோ...சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலோ... குழந்தையின் உடலமைப்பில் வித்தியாசம் தெரிந்தாலோ... குழந்தையின் எடை கூடினாலோ... குழந்தைக்கு தேவையான பால் கிடைக்கிறது என்று அர்த்தம்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், தாய்ப்பால் குடிக்காத குழந்தையின் மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தையின் மூளை

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள்.
கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை.
கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக்கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக்கவனமாக ஏற்படுத்தப்பட்டவை.
குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ "வெறுமையானது". அதாவது எதையுமே கற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால் காணுவதும், காதுகளால் கேட்பதும், தொடுகையினால் உணருவதும், நாக்கினாலே ருசிக்கின்றதும் அவர்களது "புதிய" மூளையில் பதிந்து மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நியூரோன்களின் கோர்வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள்.
குழந்தையின் மூளை கற்றுக் கொள்வதற்கு வசதியான கருவியாகும். குறுகிய காலத்தில் குழந்தை எல்லாம் கற்றுக் கொள்ளும்.
தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே போகும். எதிலும் தேடல் ஆர்வம் என கல்வி வாழ்க்கை வரை இது நீளும்.
நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி, விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும். இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கி வந்து விளையாட வேண்டும்.
சிக்கலான நடப்புகளையும், சுற்றுச் சூழலையும் குழந்தைகள், தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர்.
அவர்கள் 12-18 மாத வயதை எய்தும் போது, கண்பார்வை. திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம் நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில் நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில் இருத்திக் கொள்வார்கள். அதே வேளையில் நாம் வெளிப்படுத்தும் சந்தேகங்களையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, ஏதோ ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும் போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக் காட்டி அதன் பெயரென்ன என்று குழந்தை கேட்கும் போது நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொண்டால், அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்புபடுத்தாமல் இலகுவாக மறந்து விடும்.
பிள்ளைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்று ஆண்டுகள் வேகமாக இருக்கும். குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும், அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும்.

யானைத் தலை

குறும்பு, லீலைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தெய்வங்கள்தானோ என நினைக்கும் அளவுக்கு பகவத் சிலுவிஷமங்கள் புராணங்களில் நிறைந்து கிடக்கின்றன
சரி... சிவன் இங்கு என்ன செய்கிறார்? பார்வதி தேவி தண்ணீர் கொட்டிக் கொட்டி குளித்துக் கொண்டிருக்கிறாள். சிவனுக்கு ஒரு நப்பாசை. நம் தேவி எப்படி குளிக்கிறாள் என்பதை அவள் அறியாமல் பார்க்கவேண்டும். அதாவது... ஒருபெண் குளிப்பதை அவளுக்குத் தெரியாமல் இன்னொரு ஆண் (கணவனே என்றாலும் தெரியாமல் பார்க்கிறானல்லவா?) பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டார் சிவன்.
அதுபோலவே பார்வதி தேவி ஜலக்கிரீடை செய்யும்போது மறைந்து மறைந்து நின்று தேவியின் தரிசனத்தை அவருக்கே தெரியாமல் பெற்றுக் கொண்டிருந்தான் பரமசிவன்.
‘சகல லோகங்களையும் கண்காணிக்கும் சக்தி பெற்ற’ பராசக்திக்கு தான் குளிப்பதை இரண்டு கண்கள் திருட்டுத்தனமாக பார்ப்பது தெரிந்திருக்காதா என்ன?உணர்ந்தாள்.
தான் தன்னந்தனியாக குளித்துக் கொண்டிருப்பதை யாரோ ரசம் சொட்ட பார்த்துக் கொண்டிருப்பதை தன் சக்தியால் தெரிந்துகொண்ட பார்வதி திடுக்கிட்டாள். பெண் தெய்வம் என்றாலும் பெண் தானே?
உடனே... அவசரமாக தனது கச்சைகளையும், வஸ்திரங்களையும் பதறியபடியே உடுத்திக்கொண்ட பார்வதி, தன்னைப் பார்த்தவனை தேடினாள். டேய்... யாரங்கே? பராசக்தியின் ஸ்நானத்தை ஒளிந்து பார்க்கும் அளவுக்கு துணிச்சல்காரன் யார்?
என கோபத்தில் பார்வதிதேவி சத்தம்போட... பட்டென்று வெளியே வந்த சிவன்... ‘தேவி... யாம்தான் ஒரு சின்ன திருவிளையாடல்... அதற்குப் போய் ஏன் இப்படி கோபப்படுகிறாய்? சாந்தம்... சாந்தம்...’ என்கிறார்.
எது ஸ்வாமி திருவிளையாடல் ஒரு பெண் குளிப்பதை இன்னொரு ஆண் மறைந்து நின்று கண்களால் சுகிப்பது உங்கள் திருவிளையாடல் என்றால்... என் திருவிளையாடலையும் கொஞ்சம் பாருங்கள்.
சக்தியும் தன் திருவிளையாடலை அரங்கேற்றினாள். “மனைவியென்றும் ‘பாராமல்’ நான் குளித்ததைப் பார்த்த நீர்... யானைத் தலையனாகவும், மனித உடம்பாகவும் மாறக் கடவுவது...” என கோபத்தால் சாபமிட்டாள்.
அந்த க்ஷணத்திலேயே பரமசிவன் அவ்வாறே ஆனார். அதாவது யானை முகத்துடனும் மனித உடம்பாகவும் புது வடிவம் பெற்றார். அதாவது... விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன்தான் என்கிறது இக்கதை.
இன்றும் ஆற்றங்கரை, குளத்தங்கரைகளில் எல்லாம் விநாயகர்கள் நிறைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.அது எதற்கு என்றால்...?
‘டேய்... குளிப்பது உன் பத்தினியாக இருந்தாலும் எட்டிப் பார்க்காதே. பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று பரமசிவன் ஆண்களிடம் சொல்வதற்குத்தான். இது கதை.

பதிவிரதை

ஒரு நாள் சிவன் பெண்டாட்டியிடம் நாரதர் இரும்புத் துண்டுகளைக் கொடுத்து இதை கடலையாக வறுத்துக் கொடு என்றானாம். இரும்பை எப்படி கடலையாக வறுக்க முடியும் என்று அவள் கூறிவிட்டாளாம். பிறகு விஷ்ணு பெண்டாட்டியிடமும், பின் பிரம்மாவின் பெண்டாட்டியிடமும் அதுபோலவே அந்த இரும்பைக் கொடுத்து வறுத்துத் தரும்படி கூறினான். இரும்பையாவது வறுப்பதாவது, இது எப்படி முடியும் என்று கூறிவிட்டார்கள்.
அதற்கு நாரதர், நான் வறுத்து வருகிறேன்; பார் என்று கூறிவிட்டு பூலோகத்திலுள்ள அனுசுயா என்ற பத்தினியிடம் கொடுத்து வறுத்துக் கொடு என்று கூற, அவள் அது என்னவென்று கூடப் பார்க்காமல் சட்டியில் போட்டு வறுத்தாளாம். அது கடலையாகப் பொரிந்து வந்ததாம். அதை நாரதர் சிவன், விஷ்ணு, பிரம்மா முதலியோருடைய பெண்டாட்டிகளிடம் போய், பார் பார் நான் இரும்பை கடலையாக வறுத்து வந்துவிட்டேன் என்றானாம்.
அதற்கு அவர்கள் ஆச்சரியப்பட்டு அது எப்படி முடிந்தது என்று கேட்க, அதற்கு நாரதர், அந்தம்மாள் பதிவிரதை - அதனால் வறுக்க முடிந்தது என்றானாம். உடனே அவள் பதி விரதையானால் எங்கள் சங்கதி என்ன என்று கோபம் வந்து விட்டதாம் அவர்களுக்கு. பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று பேர்களுடைய பெண்டாட்டிகளும் விசனப்பட்டார்களாம்.
இதற்குப் பரிகாரம் காண வேண்டுமென்று அவர்கள் புருஷன்கள் வந்ததும், ``நீ கடவுள்! கடவுள் பெண்டாட்டி நாங்கள். எவனோ காட்டி இருக்கிற ஒரு ரிஷியின் மனைவி பெரிய பதிவிரதையாம்; இரும்பை வறுத்து விட்டாள். அவள் பதிவிரதையானால் எங்கள் சங்கதி என்ன?'' என்று கேட்டார்களாம்.
சரி இப்போ என்ன பண்ணச் சொல்லுகிறீர்கள் என்று கடவுள்கள் கேட்க, ``நீங்கள் போய் அவளையும் அபசாரியாக ஆக்கிவிட்டு வா'' என்றார்களாம். ``பதிவிரதைத் தன்மையை போக்கிவிட்டு வா'' என்றார்களாம். இந்த மூன்று பேரும் (சிவன், விஷ்ணு, பிரம்மா) சாமியார் வேடம் போட்டுக் கொண்டு அந்த ரிஷிபத்தினியிடம் போய், அம்மா பசிக்குது சோறு போடு என்று கேட்டார்கள். அவளும் இவர்களை உட்கார வைத்து இலை போட்டு உணவு பரிமாறினாள்.
இவர்கள், ``சாப்பிடுகிறோம்; ஆனால், சாப்பிடுவதற்கு முன் ஒரு பூசை செய்வது வழக்கம். அது செய்துவிட்டுத்தான் சாப்பிடுவோம்'' என்று கூறினார்கள். அந்தம்மாள், ``அப்படியா, அதற்கு என்ன வேணும்? தேங்காய், பழம், சூடம் என்ன தேவை கூறுங்கள்'' என்று கேட்டாள். அதற்கு இவர்கள் ``அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்; நீ உன் சேலையை அவிழ்த்துவிட்டு நிற்கணும்; நாங்கள் அதைப் பார்த்துவிட்டு சாப்பிடுவோம்'' என்றார்கள்.
இவர்கள் சொன்னதுதான் தாமதம், அவள் சிறிதும் தயங்கவில்லையாம். உடனே சேலையை அவிழ்க்க ஆரம்பித்து விட்டாள். அவள் அவிழ்க்க அவிழ்க்க இந்த கடவுள்கள் மூவரும் குழந்தைகளாக மாறிவிட்டார்களாம். அவளுடைய பதிவிரதாத்தன்மை அப்படியே அழிவில்லாமல் இருந்துவிட்டதாம்.
உடனே அந்தக் குழந்தைகளை எடுத்துப் பால் கொடுத்து தொட்டிலில் போட்டு ஆட்டினாள். அவளுடைய புருஷன் வந்தான், பார்த்தான் குழந்தையை. ``நான் போகும்போது சும்மாயிருந்தாய்; வருவதற்குள் ஏது குழந்தை? எப்படி பெற்றெடுத்தாய்?'' என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டான். அவள், ``மூன்று பேர் வந்து பிச்சை கேட்டார்கள்; போட்டேன். நான் அம்மணமாக நிற்கணும் என்றார்கள். அப்படியே செய்தேன். அவர்கள் குழந்தைகளாக மாறிவிட்டார்கள்'' என்று நடந்ததைக் கூறினாள்.
அவன் ரிஷியாயிற்றே. உடனே ஞானக்கண்ணால் பார்த்து விஷயம் தெரிந்து கொண்டானாம். ``நல்ல வேலை செய்தாய். இவர்கள் யார் தெரியுமா? சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகும். உன்னைக் கெடுக்க வேண்டுமென்று வந்திருக்கிறார்கள்! நீ நல்ல வேலைதான் செய்தாய்'' என்று கூறி அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டான்.
இப்படி உலகத்தில் காத்தல், அழித்தல், பிறத்தல் வேலை பார்க்கிற கடவுள்கள் இவள் வீட்டு தொட்டியில் குவா குவா கொட்டிக் கொண்டிருந்தது. உலகத்தில் வேலைகள் எல்லாம் நின்று போயிற்றாம். மக்கள் தேவர்கள் எல்லாம் திண்டாடுகிறார்கள். ஒன்றும் புரியவில்லை. எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. அப்புறம் விஷயம் தெரிந்தது. ரிஷியிடம் ஓடிவந்து ``உலகத்தில் எல்லா வேலையும் நின்று போச்சு, நாங்கள் திண்டாடுகிறோம். மூன்று தேவர்களையும் விட்டு விடுங்கள்'' என்று கேட்டார்கள். ``அதற்கு என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்! அவளைப் போய்க் கேளுங்கள்'' என்று கூறினார்.
அந்த ரிஷி பத்தினியிடம் போய், ``புத்தி வந்தது, தேவர்களைவிடு'' என்று கெஞ்ச அவளும் சரி என்று தேவர்களாக பழைய உருவாக்கி அனுப்பி விட்டாளாம்.

குடி குடியைக் கெடுக்காது!


ஒரு கணவர் கூறுகிறார்:
முந்தைய நாள் அதிகம் குடித்ததால், பயங்கரத் தலைவலியுடன் ஒரு நாள் காலை கண் விழித்தேன். படுக்கைக்கு அருகே, 2 ஆஸ்பிரின் மாத்திரைகளும், குளிர்ந்த நீரும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்! அத்துடன், சலவை செய்யப்பட்ட எனது மாற்றுத் துணிகள் டேபிளில் இருப்பதையும் கண்டேன்! எனது அறையும் ஒழுங்காக்கப்பட்டு மிக சுத்தமாக இருந்தது! மொத்த வீடுமே படு சுத்தமாக இருந்தது!
மாத்திரைகளை விழுங்கும்போது, டேபிளில் ஒரு குறிப்பைப் பார்த்தேன்: "டார்லிங், உங்கள் காலை உணவு அடுப்பின் மேல் சூடாகவே இருக்கும், சாப்பிடுங்கள், நான் ஷாப்பிங் செல்கிறேன், ஐ லவ் யூ"
சமையலறைக்குச் சென்றால், என் மனைவியின் குறிப்பு சொன்னது போலவே, சூடான காலை உணவோடு, பத்திரிகையும் தயாராகவே இருந்தது.
என் மகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என் மகனைப் பார்த்து, "நேற்று இரவு என்ன தான் நடந்தது?" என்று வினவினேன்.
என் மகன், "அப்பா, நீங்கள் அதிகாலை 3 மணிக்கு மிக அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தீர்கள், நாற்காலியை உடைத்தீர்கள், கூடத்திலேயே வாந்தி எடுத்தீர்கள், தடுமாறி கதவின் மீது மோதி நெற்றியில் அடிபட்டுக் கொண்டீர்கள்!" என்றான்.
குழப்பத்தின் உச்சத்துக்குச் சென்ற நான், "பின் எப்படி வீடே அலம்பி விட்டது போல சுத்தமாகவும், என் காலை உணவு தயாராகவும் உள்ளது ? நியாயமாக, என்னுடன் பெரிய சச்சரவுக்கு அல்லவா உன் அம்மா தயாராக இருந்திருக்க வேண்டும் ?" என்றேன்.
என் மகன் அமைதியாக, "அப்பா, நேற்றிரவு அம்மா உங்களை தரதரவென்று படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, உங்கள் உடைகளையும், காலணிகளையும் களைந்தபோது, நீங்கள், 'விடு என்னை, நான் திருமணமானவன், என் மனைவியை மிகவும் நேசிப்பவன்' என்றீர்கள்" என்றான் !!!!!!!!
*****************************