Tuesday 16 January 2018

வியப்பு Vs வினோதம்
*******************************
உலகத்தைச் சுற்றிவிட்டு திரும்பிய நாரதரிடம் பிரம்மா, "உலகில் நீ பார்த்த ஆச்சரியமான விஷயம் ஏதாவது உண்டா?' என்று கேட்டார்.

"உண்டு. எல்லோரும் பாவத்தின் விளைவை எண்ணி பயப்படுகிறார்கள்.

அப்படி இருந்தும் பாவம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் புண்ணியத்தின் விளைவை கண்டு அதன்மேல் விருப்பம் கொள்கிறார்கள்.

ஆனால் புண்ணியச் செயல் செய்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். இதுதான் எனக்கு வியப்பாக இருந்தது!' என்றார் நாரதர்.

No comments:

Post a Comment