Tuesday 16 January 2018

நெட்டில் சுட்டு என் கைவண்ணத்தில் மிளிர வைத்து உங்கள் உள்ளம் குளிர வைக்கும் உன்னத பதிவு !!!!!
--------------------------------------------------------------------------------
....அய்யகோ ''என்ன கொடுமை சரவணன் இது''....
என்பது போல் பரங்கிமலை ஜோதி தியேட்டர் இப்படி மாறும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை.
மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்பதற்க்கு ஜோதி தியேட்டர் நல்ல எடுத்துக்காட்டு ஆகும்
இனி ....
'கனவில் கில்மா', ' சாரி ஆண்ட்டி', ' வெடக்கோழி' Vs நாட்டுக்கோழி ' , 'பருவ வயது பாவை ','பருவ சிட்டு', 'இன்பக்கேணி', 'ஏங்குகிறாள் எல்லம்மா ''....... போன்ற ""சதையாழமிக்க"" ....
மலையாளப் படங்களே டைட்டில்களின் ஆரம்ப சுழி ...இன்பத்தின் எல்லை...இன்ப தாகம், ரதி நிர்வாணம் ,மாமானாரின் இன்ப வெறி,உல்லாசப்பறவைகள் (கமல் படம் நஹி)....போன்ற
மதன்மித்ரா தேட வைக்கும் தேன் தடவிய தெம்மாங்கு ...கில்மா / குஜிலி குல்ஸா.... படங்களை எங்கு காண்போம்.
''ஷகிலா''....கண்ணாடி மேனியை காட்டி குளிக்கும் காட்சியை காட்டியே கரண்ட் பில் கட்டிய தியேட்டர் அல்லவா அது.....
வெள்ளிக்கிழமை தோறும் விடலைகளின் கைலிகளையும் ஜட்டிகளையும் வியர்வையில்!!!!
...... நனைய வைத்த குலக் கோவில் அல்லவா அந்த இடம்....
11 மணிக்காட்சிக்கு போய் 12.30 டிக்கட் கொடுத்து கதவை திறந்து திறந்து வந்து வெறுப்பில் உட்கார்ந்து இருக்கும் நம்மிடம் '''பிட்''' ஏதாவது ஓடியதா என 60வது வயசு கிழஆள் ?!!!!....(இதை இன்று வன்மையாக ஆட்சேபிக்கிறேன்)...
ஹி ஹி எனக்கு ஐம்பத்தாறு முடியும் வரும் மார்ச்சில் ....மீண்டும் ஹி ஹி ....
......கேட்கும் போது பற்களை ''நற நற'' என கடித்த இடம் அல்லவா.
எத்தனை எத்தனைஎதிர்கால சந்ததியினர் அழிந்த அல்லது அழித்த இடம் அது.
எதிர்கால டாக்டர்களும்,வக்கீல்கள்,முதலமைச்சர்கள், ரவுடிகள்...மற்றும் இன்னோரன்ன பலரும் ஓன்று கூடி ஜோதியில் ஐக்கியமாகி ... தியேட்டர் மற்றும்
பாடாவதி ...கேவலமான ..... இருக்கைகளில் ...சத்தி'முத்த'ப்புலவர் போஸில் சரணாகதி அடைந்த இடம் அன்றோ அது.
சத்திமுத்தப்புலவர்....நாராய் நாராய் செங்கால் நாராய் ...பாடல் புகழ் ...அதை வேறு பதிவில் பார்ப்போம் ...இங்கு பிளந்த கிழங்கு எனும் வர்ணனனை மட்டும் போதுமே ...
விடலைகளின் ஏக்கத்துக்கும் பாலின தூண்டல்களுக்கு தீர்வான தியேட்டராக இருந்தததால் எதிர் விட்டு தையல்கார அக்கா, பக்கத்து விட்டு பம்ப்ளிமாஸ் ஆண்ட்டி எல்லோரும் கற்போடு தப்பிக்க உதவிய தியேட்டர் அல்லவா பரங்கிமலை ஜோதி.....காமத் தீ விடாமல் எரிந்து கதகதப்பு ஊட்டிய ....
கைரேகை ஜோசியர்களை குழப்பிய இடம்
எத்தனையோ ரசிகர்களின் கைரேகை அழிந்து போக காரணமாக இருந்த தியேட்டர் அல்லவா.(பரங்கிமலை ஜோதி பற்றி எழுதும் போது இந்த மாதிரி படம் கூட போடலன்னா எப்படி? அந்த தியேட்டரை அசிங்க படுத்துவது போல் இருக்காதா?)
எல்லா வயதுகாரர்களின் பாலின வெடிமருந்து கிட்டங்கியும் / வடிகாலும் இரட்டை வேட அவதரிப்பும் இந்த மாதிரி தியேட்டர்கள்தான்.
இந்த மாதிரி 'பிட்' பட தியேட்டர்களில் டிக்கெட் கொடுத்து கொண்டே இருப்பார்கள், அதே போல் படம் ஆரம்பிக்க அரை மணிநேரம் விட்டத்தை பார்த்தபடி உட்கார்ந்து இருக்க வேண்டும் எந்த பாடலும் போட மாட்டார்கள். எங்கேயோ கிரிஸ் இல்லாத ஃபேன் லோடக்கு லொடக்கு என்று ஓடிக்கொண்டு இருக்கும்.

தியேட்டரில் அந்த காட்சிக்கு பிட் போடவில்லை என்றால் அந்த தியேட்டர் ஆப்பரேட்டர் அம்மா வாழ்வு குறித்து சந்தேகப்படுவார்கள், மனைவியை ரோட்டுக்கு இழுப்பார்கள். பாவம் அவர் என்ன செய்வார்.
அரும்பு மீசையோடு உள்ளே வந்த பதினெட்டு வயது பயல்கள் இன்டெர்வெல்லின் போது பொம்பளைங்க பாத்ரூம் பக்கம் அல்லது டிக்கெட் கவுன்டரில் ஒதுங்கி யார் கண்ணி்லும் படாமல் இருப்பார்கள்.
பொதுவாக எல்லா ஆண்களுக்கும் பொம்பளைங்க பாத்ரூம் எப்படி இருக்கும் என்பது ஆங்கில செக்ஸ் படங்கள் போடும் போதுதான் தெரிய வரும்.
அப்பா மகன் இருவரும் ஒரே தியேட்டருக்கு வந்து தலையில் அடித்துக்கொண்டு போன சோகக்காட்சியை பார்த்து இருக்கிறேன். அதே போல் அண்ணன் தம்பி உறவுக்காரர்கள் போன்றவர்களை நேருக்கு நேர் பார்த்து அசடு வழிந்த நிகழ்வுகள் அதிகம்.
பிட்படம் ஓடும போது தியேட்டர் ''பின்டிராப்'' சைலன்டாக இருக்கும்.
யாரவது ஒருவர் மிக பச்சையாக கமெண்ட் அடிப்பார்.
உதாரணத்துக்கு ஜாக்கெட் கொக்கி அவுக்கவே இவ்வளவு நேரமா ?விடிஞ்சிரும். சீக்ரம் அவுத்து வேலைய ஆரம்பிப்பா.... எங்களுக்கு வேற பொழப்பு இருக்கில்ல என்பார்கள்.
மிகுந்த எதிர்பார்புடன் வந்த படத்தில் ஏதும் இல்லாமல் வெளியே வெறுத்து போய் வரும் போது டிக்கெட் கவுண்டரில் இருக்கும் சில ஆர்வ கோளாறுகள் படத்துல சீன் எப்படி என்று கேட்க நான் குடும்பத்தோட பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன்
படம் பார்த்தவர்களின் அறியாமையால் லேசாக கை நடுங்கினால் கூட ஆண்மை போய்விட்டதாக நினைத்து சிட்டுக்குருவி லாட்ஜ் டாக்டர்களை மனைவி பிள்ளளைகளுடன் சந்தோஷமாக வாழ வைத்த தியேட்டர்.
பதினைந்து நிமிட பிட்டுக்காக ஆவடி தாம்பரத்தில் இருந்து எல்லாம் வந்து தங்கள் சக்தியை தியேட்டரில் செலவழித்தவர்கள் ஏராளம் ஏராளம்
அறிவியல் வளர்ச்சியினால் வீசிடியில் ஒருமணி நேரமாக சாமி படம்...திருவிளையாடல் ...வினை தீர்த்த வினயன் ...போன்ற ..... பார்க்கும் பழக்கம் வந்தபோது இந்த மாதிரி தியேட்டர்களில் கூட்டம் குறைய தொடங்கியது எனலாம் .
அதன் பிறகு டிவிடி யில் தொடந்து நாலுமணி நேரம் பிட் படம் பார்த்த காமரசிகர்கள், ஜோதி தியேட்டர் கேண்டீன்காரரை வட்டிக்கு பணம் வாங்க வைத்தார்கள்.
இன்டெர்நெட் வந்ததும் தியேட்டரில் ஸ்கூல் யூனிபார்ம் பசங்கள் காலைகாட்சியை தியாகம் செய்ய....சோகம் துரத்தியது ....
சமீப காலமாக 2010 களில்கத்திப்பாரா பாலம் கட்ட வந்த வட இந்திய இளைஞர்களை வைத்து கொஞ்சம் நாட்களாக கல்லா கட்டினார்கள்.
பாலம் வேலை முடியவும் ''சாய் மீரா'' லீசுக்கு எடுக்கஅப்புறம் என்ன ஆச்சோ தெரியலை அந்த போர்டு ஓரம் போயிடுச்சி...
அய்யகோ!!!!கொஞ்சம் அழுது தீர்ப்போம் ...
இப்ப ஜோதி தியேட்டர் டிடீஎஸ் சவுண்டு மாட்டிக்கினு தின்டுக்கல்சாரதி படம் ஓடுது....
இது சென்னையின் சினிமா பாரடைஸ் ...மோட்சம் / மினி மோட்சம் பெயரில் தான் ...நிஜ மோட்ச பேரின்பம் இது மட்டுமே ... என்றால் அது மிகையாகாது....
*****ஒரே ஆறுதல் ''ஜோதிமகால்'' என்று பெயர் மாற்றம் செய்து கல்யாண மண்டபம் ஆகாமல் அது இன்னம் தியேட்டராகவே இருப்பது மனதுக்கு பெரிய ஆறுதல்....!!!!

No comments:

Post a Comment