Tuesday 16 January 2018

கோல்மால்

மால் Vs கோல்மால் !
*****************************
“ஏயேய் ! மச்சி புதுப்பட ரீலிஸ் சீ.டி வந்திருக்கு… வரியா எங்க ஹோம் தியேட்டர்ல பாக்கலாம்.”
“ நா வரலடா ! அந்த படம் நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன். அதனால தியேட்டர்ல போய் பார்க்க போறேன். அதுமட்டுமில்ல, சீ.டி பாக்குறது அடுத்தவங்க உழைப்ப திருடுறதுக்கு சமம்”
“அடபாவி ! என்னடா நல்லவன் மாதிரி பேசுற. இரண்டு வாரம் முன்னாடி தான் நம்ப எல்லோரும் சேர்ந்து புது நடிகர்கள் நடிச்ச படத்த சீ.டியில பாத்தோம்.”
“அது மொக்கப்படம். சீ.டியிலாவது படத்த பார்த்தது பெரிய விஷயம்”
நண்பனிடம் பேசி முடித்து புது மாப்பிள்ளை அளவுக்கு டிரெஸ் போட்டுக் கொண்டான் சவுண்ட் சந்தோஷ். யார் கண்டது அங்க கல்யாணத்துக்கு பொண்ணுக் கூட கடைக்கலாம். ஸாரி… கிடைக்கலாம்.
[‘சவுண்ட்’ சந்தோஷ் எதையுமே சவுண்டாக ஒரு முறை சொல்லுவான். அது அப்புறம், மற்ற குடிமகன் போல் மனதுக்குள் குமுறிக் கொள்வான். வேறென்ன செய்ய முடியும் ? சராசரி இந்தியர்களைப் போல் அவனும் சராரரி குடிமகன் தான்.]
நண்பர்கள் அனைவரும் அந்த படத்தை பார்த்து விட்டதால் தனியாக சென்றான்.
முதல் தடவையா மால்ல சினிமா பாக்க போறோம். பஸ்லைய போவாங்க…!! ஓ.சி பைக்கில...... ஏ.சி மாலுக்கு நுழைந்தேன். பார்கிங்கில் நுழையவிடாமல் செக்யூரிட்டி நிறுத்தினான்.
வண்டி நம்பரை பார்த்து எதோ டைப் செய்து ஏ.டி.எம் கார்ட் ஒன்று கொடுத்தான். பார்க்கிங்க்கு பணம் கூட வாங்கல…!!
“ அட ! இந்த மாலில் செலவு பண்ணுறதுக்கு ஏ.டி.எம் கார்ட் தராங்க…! இப்ப தெரியுது இங்க ஏன் இவ்வளவு கூட்டமா இருக்கு !!
“சார் வண்டி பார்க்கிங் டோக்கன்” என்றான்.
“பராவாயில்லையே ! டோக்கன் பச்ச, சிவப்பு, கலர் டோக்கனா கொடுப்பாங்க… பிட்டு பேப்பர் தருவாங்க. இப்போ கார்ட்டுல தரீங்களே… முன்னேற்றம் தான் ”
“இல்ல சார் ! இந்த கார்ட்ல நீங்க வந்த டைம் இருக்கும். வண்டியில வெளியே எடுக்கும் போது மணிக்கணக்கு படி பணம் கொடுக்கனும்”
“ஏய் ! என்ன பார்த்தா உனக்கு என்ன மாதிரி தெரியுது. வாடகை சைக்கில் கடையில காசு கொடுத்து சைக்கில் எடுப்போம். இங்கே பார்க்கிங்கில என் வண்டிய வைக்கிறதுக்கு ஹவர் கணக்கு எதுக்குடா பணம் தரனும்”
“சார் ! மால்னா அப்படி தான்” என்றான்.
‘போங்கடா’ என்று வண்டிய வைத்தேன். அடுத்த வாட்டி வரும் போது கண்டிப்பா வண்டிய வெளியே பார்க் பண்ணணும்...... நினைத்துக் கொண்டேன்.
நுழையும் போது பை ....உடை ....எல்லாம் பரிசோதனை நடந்தது. இப்போ எல்லாம் தீவிரவாதி எங்க குண்டு வைக்கிறாங்கனு யாருக்கு தெரியும். நம்ப நல்லது பேக் செக் பண்ணுறாங்க…!
ஒரு பெண்மணி பையில் இருந்து உணவு பொருள் எல்லாம் வெளியே எடுத்து, “ உள்ளே எடுத்துப் போக அனுமதியில்லை” என்றனர்.
“அடப்பாவிங்களா! வெடிகுண்ட உள்ளவிட்டுடுங்க. சாப்பாடு பொருள எடுத்து போகக்கூடாது சொல்லுங்க..”
ஸ்டைல்லா பெப்ஸி வாங்கி குடிச்சு பொண்ணுங்க சைட், ஒரு புட் ஷாப்பில் பெப்ஸி கேட்டேன். பெப்ஸி டின் வாங்கி திறந்தார். “பிப்டி ரூபிஸ்” என்றான். “என்ன பார்த்தா முட்டாளா தெரியுதா... 300 ml ரூ.18, ரூ.20 தான் இருக்கும். இங்க என்னடா ரூ.50 சொல்லுறீங்க…”
அவன் எதுவும் பேசாமல் சிரித்தான். டின்னில் எவ்வளவு இருக்குனு பார்த்தா… அட திருட்டு பசங்களா…. நீங்க சொல்லுறது தான் விலை..!!!
இவன் கிட்ட பேசுனதுல 15 நிமிஷம் போச்சு. அவசரப்பட்டு ஓபன் பண்ணிட்டேன். இரண்டு பிகரு நம்மைய பாத்திட்டு இருக்கு. மனசு இல்லாம அம்பது ரூபா கொடுத்து தொலைச்சேன்.
நம்மக்கிட்ட இருந்து கொள்ளை அடிக்கிறது அவங்களுக்கு கூச்சமாயில்ல. ....நம்ம பணத்த திருப்பிக் கேட்டா மட்டும் ஒரு மாதிரியா பாக்குறாங்க. என்ன மாலுடா இது !!
அவங்கல ஸ்டைல்லா லுக் விட்டு ஒவ்வொரு கடையா வெடிக்கை பாத்து… தியேட்டர் க்குள்ளே போலானும் இருக்கும் போது… “சார் ! பெப்ஸியை தியேட்டர் காம்ப்ளேக்ஸ்குள்ள எடுத்து போகக் கூடாது” என்றான்.....கேட் கீப்பர் லொள்ளன்.....
“ டேய் ! பெப்ஸிய மால்ல தான் வாங்குனேன் ..... எதுக்கு வெளியே இருந்து தான் எடுத்து வரக் கூடாது. இங்க வாங்குனது கூடவா ?”
“ தியேட்டர்ல புட் வொர்ல்ட் இருக்கு. உங்களுக்கு வேணும்னா அங்க வாங்குங்க…”
ஆமாடா ! மறுபடியும் ரூ.20 பெப்ஸிய ரூ.50 வாங்குவாங்க… போடா …ங்கோ… என்று மனதில் திட்டிக் கொண்டேன். மால்க்குள்ள இந்தியா - பாகிஸ்தான் பார்டர் எப்படி பிரிச்சு வச்சிருக்காங்க. அங்க இருந்து இங்க கொண்டுப் போகக் கூடாதுனு, இருங்க இருந்து அங்க போகக் கூடாதுனு.
இவங்க இஷ்டத்துக்கு நாம நடந்துக்குறதுக்கு நா எதுக்கு பணம் தந்து மால்க்குள்ள வரணும் ?
படத்துக்கு நேரமாச்சு. அரை மணி நேரம் பொறுமையா குடிக்கலாம் இருந்தா, இவனால அவசர அவசரமா குடிக்க வேண்டியதா இருக்கு.!
செக்யூரிட்டி கூட பண்ண அக்கப் போரால ஹீரோவோட இன்ட்ரோ பாட்டை கோட்டைவிட்டேன். ஜாலியா படம் போச்சு. இன்ட்ரவல் வந்ததே தெரியுல.
முதல் முதல்லா மால்ல படம் பாக்க வர அவசரத்துல எதுவும் சாப்பிடல. வெளியே வந்து ஏதாவது பிரியாணி சாப்பிடலாம் பார்த்தா… கொய்யால எல்லா பீசா, பர்கர் மட்டும் தான் இருக்கு. ஆனா, சிக்கன் பிரியாணி விக்கிற விலையில விக்குறாங்க.
பசி தாங்க முடியில. ரூ.200க்கு பர்கர் காம்போ ஒன்னு வாங்கி ..... கொடுக்குற காசுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும்னு நினைச்சா. ஐஞ்சு நாள் முன்னாடி வச்ச ஏதோ பன் மாதிரி ஒண்ண கொடுக்குறான். உள்ள காய்கறி வெட்டி வச்சு இவ்வளவு அநியாய விலைக்கு கொடுக்குறாங்க. நம்ப உருளைக்கிளங்க அழகா வெட்டி ப்ரை பண்ணாததால… பிரெஞ்சு நாட்டுல சேத்துட்டாங்க. அதான் பிரெஞ்சு ப்ரை.
மனசு வராம கொடுத்த ரூ.200 க்கு ரூ.20க்கு தான் சாப்பிட்டேன். இவ்வளவு செலவு பண்ணி மால்ல பார்த்ததுல… படம் நல்லாவே இருந்துச்சி.
படம் மட்டும் கொடுமையா இருந்திருந்து… அவ்வளவு தான். டைரக்டர் வீட்டுக்கு போய் செலவு பண்ண காச திருப்பிக் கேட்டுருப்பேன்.
மொக்கப்படத்த தியேட்டர்ல பார்க்குறவங்களோட கோவம் இப்ப புரியுது.
வெளியே கூட்டத்துல வண்டிய எடுத்து வரும் போது வேலை செய்யுறவன் கொடுத்த ஏ.டி.எம் கார்ட கேட்டான். கொடுத்தேன். மிஷின்ல போட்டு…கொஞ்ச நேரத்துல ரூ.80 சொன்னான்.
ரூ.120 கொடுத்து படம் பார்த்தேன். என் வண்டிய வைக்குறதுக்கு ரூ.80 வா ?? ஹவருக்கு ரூ.20 என்றான்.
“அங்க… ரூ.15 போட்டிருக்கே ?” “அது வார நாள்ல… இது விக்கென்ட். ஹவருக்கு ரூ.20 பா” என்றான்.
“ மூனு மணி நேரப் படத்துக்கு கொஞ்ச முன்னாடி வந்ததால ரூ.20 'பைன்'னாடா. பன்னாட .....ரொம்ப ....நல்லா இருப்பீங்க. இது மால்லா … கோல்மால்லா…”
அடுத்தவன் .... உழைப்ப நாம திருடக்கூடாதுனு காசுக் கொடுத்து தியேட்டர்ல படம் பாக்க வந்தா… நம்ப உழைப்ப திருடுறாங்க. ....
இப்ப தெரியுது ஏன் எல்லா படத்தையும் சீ.டியில பாக்குறாங்க… பேசாம நானும் சீ.டியில படம் பார்த்திருக்கனும்.....கண் கெட்ட பொறவு ன்னு ஏதோ சொல்வாங்களே ......!!!!

No comments:

Post a Comment