Tuesday 16 January 2018

தவைத் தாளிட முடியாமல் கயிறு தடுத்தது. "கயிறு இருக்குற வரைக்கும் நாம பிழைச்சுக்கலாம் தம்பிங்களா" என்றார் தணிகாசலம். "நல்ல வேளை.. கதவைத் தொறந்து என்னை உள்ளே விட்டீங்க.. இல்லைன்னா இன்னிக்கு உங்க அத்தினி பேர் கதியும் அதோகதி தான்"

"இதை சொல்லத்தான் ஓடி வந்தீங்களா? எங்க கதி அதோகதின்றதுல அப்படி ஒரு சந்தோசமா?" என்றான் ரமேஷ்.

"இல்ல தம்பி.. குடிச்சுட்டு படுத்திருந்தனா? திடீர்னு.. எந்திரிடா வந்திருச்சு.. எந்திரிடா வந்திருச்சுனு ஒரு குரல்.. ஏதோ எம்பொஞ்சாதி அதுக்கு ஒண்ணுக்கு வந்திருச்சு, எந்திரிக்க சொல்லுதுனு நான் கண்டுக்காம படுத்தினுருந்தனா.. தடால்னு எம்மூஞ்சில ஒரு அறை விட்டுச்சு.."

"யாரு, பொஞ்சாதியா?"

"சேசே.. எம்பொஞ்சாதி செருப்பெடுத்து வீசுமே தவிர என் மேலே கை வக்காதுபா.. தங்கம். நான் சொல்றது எங்க பேயாத்தாபா"

அருகிலிருந்த மர நாற்காலிகளை வேகமாக இழுத்துக் கதவின் பின்னே பாரமாக அடுக்கிய ரகுவும் நானும் "தணிகாசலம்.. விஷயத்தைச் சொல்லுங்க" என்றோம்.

"பேயாத்தா என்னை எயுப்பி உங்களைக் காப்பாத்தச் சொல்லிச்சுபா.. அதுக்கு உங்க வீடுனா ரொம்ப இஷ்டம்.. உங்கம்மாவும் தங்கச்சிங்களும் வெள்ளிக்கெயமை மாவெளக்கு போடுவாங்கள்ள? அத்த துன்னது துர்கையம்மன்னு உங்கூட்டுல நெனச்சினுகிறாங்க.. துன்னதெல்லாம் எங்க பேயாத்தாபா! இப்பதான் சொல்லுது.. அதனால உங்களை காப்பாத்த சொல்லி ஐடியா குடுத்து என்னை அனுப்பிச்சு.. ஒரு பேயைப் பத்தி இன்னொரு பேய்க்குத்தானே தெரியும்?"

"கரெக்டு.. பேயின் கால் பேயறியும்னு ஔவையாரே சொல்லியிருக்காங்க" என்றான் ஸ்ரீராம்.

"பேயின் பல் பேயறியுமா? இது பல்கொட்டியாச்சே?" கடித்தான் ரமேஷ்.

"சொம்மா இருங்கப்பா. இதப்பாருங்க.. வெள்ளாட்டா இருந்தா வினையாயிரும். பல்கொட்டி உச்ச நிலைக்கு வர ஒரு மணியாவுமாம்.. அதனால தயாராவுங்க. உச்ச நிலை வந்துச்சுனா அத்தனை பேரையும் தலைகீழா தொங்கவச்சு நடுமண்டைல பல்லால கொத்தி விட்டுருமாம்.. ரத்தம் அத்தினியும் கொட்டி வடிஞ்ச பிறவு.. இதா இப்பப் பாத்தமே.. அது போல காட்டேறிப் பல்லுங்களை அப்படி மொத்தமா துப்பி ஊதி உடம்பு அத்தினியும் கூறு போட்டு கிழிச்சுருமாம்.. பிறவு சாவுற மட்டும் சுத்தி சுத்தி வருமாம்.. செத்த பிறவு எலும்புங்களை பல்லுங்களா மாத்தி வாயுல போட்டுகினு போயிருமாம்"

வவ்வாலாய்த் தொங்கிச் செத்தாலும் சரி, பேய்க்குப் பல்செட்டாவதில்லை என்றுத் தீர்மானித்தோம். "என்ன செய்யணும் பூசாரி?" என்றான் ரகு.

"உங்கள்ள யாரு போணிப் பொணம்?" என்று தணிகாசலம் கேட்டதும் திடுக்கிட்டோம். "என்னங்க இது.. என்ன சாவுக் கடையா வச்சிருக்கோம்? போணிப் பொணம் போட?"

"அதுக்கில்லே தம்பிங்களா.. போணிப் பொணத்தை வச்சுதான் உங்களைக் காப்பாத்த முடியும்.. பேயாத்தா திட்டமா சொல்லியிருக்கு.."

"அப்ப ரமேஷ் தான் போணி" என்றான் ரகு.

"ஏண்டா? எங்கம்மாவுக்கு நான் ரெண்டாவது பையன்.. எங்கப்பாம்மா இரண்டுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம் கட்சி.. நீ இரேன் போணி? உங்க வீட்டுல உன்னை எதுக்கும் லாயக்கில்லாத அராத்துனு சொல்றதா நீயே சொல்லியிருக்கே?"

"தம்பிங்களா.. உங்கள்ள ஒருத்தர்தான் போணிப் பொணம் ஆவ முடியும். பல்கொட்டி எச்சில் பட்டவங்க நிச்சயமா தொங்கல் கேஸ்.. எச்சல் படாதவங்கதான் போணி.. போணிப் பொணம்ன்றது பல்கொட்டி குடுக்குற காவாட்டம்.. போணியோட எலும்புங்களை பல்கொட்டி எதுவும் செய்யாது.. ஆனா போணி சுறுவா இருந்தா அத்தினி பேரையும் காப்பாத்திறலாம்.. உங்கள்ள யாரு பல்கொட்டி எச்சில்?"

"எச்சிலா? சேசே, நாங்கலாம் பாப்பார பசங்க தணிகாசலம்.. ரொம்ப ஆசாரம்.. உனக்கு தெரியாதா?" என்றான் ரமேஷ்.

No comments:

Post a Comment