Saturday 18 August 2018

கவிதை மழை

தேவரே வந்திங்கு
இவளைக் கண்டால்
திரும்ப மாட்டார் தேவலோகம்
விழி பார்ப்பார் விழிப்பார்
விளித்து வினவுவார்
மலரே வருவாயா தினமும்
இவர் வாசலுக்கு கோலமிட
உனைக்கண்டாலே உதிரம்
உற்சாகமாகும் என்பார்
உடலில் வசந்தம் பூக்கும்
பட்டாடை புத்தொளியில் மிளிரும்
உயிரே
இவர் இதயத்தில் என்றும் நீ
தங்கியிருக்கும் வரம்
தருவாயா
தாவரம் செழித்த பூமியில்
தா ‘வரம்’ என தவம்
கொண்ட குழந்தை ஞானி எனை
கொங்கையோடு சேர்த்தணைத்து
கொள்கைப் பிடிப்புடன்
தோழமை கொள்ளுவாய் நீ
‘கொள்’ என்றால் வாய் திறக்கும்
அசுவம் ...
நீ கொள்ளாவிடில் எனக்கு
அசுபம் அன்றைய தினம்
ஆரஞ்சு வண்ண அப்சரஸ்
நெஞ்சில் எண்ணம் விதைத்தாய்
பஞ்சில் நெருப்பென பற்றினாய்
பைங்கரம் பற்றுவேனோ
பயங்கரம் பற்றுமோ
காரிகையே பதில் சொல்வாய்
எம்பாவாய் !!!!
3

No comments:

Post a Comment