Thursday 11 January 2018

ஒரு அகங்கார வரலாறு :-
பேர் அலங்காரம் ....குணம் அகங்காரம் ...
--------------------------------------------------------------
என்னது வரலாறா புவியியலா ...என்ன சப்ஜெக்ட்ஸ் அய்யா ...
கோளாறு எப்பவோ நடந்து முடிஞ்சி போன கத ..இது நெறைய பேருக்கு ...
அவங்களுக்கு வரலாறு மூலம் நாம் எவ்வளவு தெரிஞ்சுக்க முடியும் எனும் ஞானம் ...''சூன்யம்''..
எனக்கோ வரலாறு மட்டுமல்ல ...வாய்ப்பும் வாசிப்புமே ...''அல்வா''... சாப்பிடற வேலை...
பத்து வயசில் சாண்டில்யன் நூல்கள் வாசிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு ....
( படித்த பல்லாயிரம் புத்தகங்களில் .... சில ஆயிரம் நூல் ஆசிரியர்களில் எனக்கு இன்றைக்கும் பிடித்த முதல்வர் ''சாண்டில்யனே'')
.... வரலாற்று நிகழ்வுகள் பிடித்துப்போய் ஒன்பது/ பத்தாம் கிளாசிலேயே ... வாத்தியாருக்கே நான் வாத்தியார் ஆக விளங்கியதை என் நண்பர்கள் இன்றும் சொல்வார்கள்...
ஐந்தாம் கிளாசில் படிக்கும்போதே ...
அசோகர் கலிங்கப்போரில் வென்ற கலிங்க மன்னர் யாருங்கோ என நான் கேட்டு வாத்தியாரே கலங்கி போனார்....
இன்றுவரை எனக்குத் தெரியவில்லை...தெரிஞ்சவுக சொல்லுங்க...
பேக் டு பாய்ன்ட்....ஒருமுறை குவைத்-கத்தார்-திருவனந்தபுரம் வரும்போது கார்ல் டேவிஸ் .....ஒரு அமெரிக்கன் என் கூட பயணித்தார்...
அவரை அறிமுகம் செய்துகொண்டு பேச்சுக்கொடுத்து மொக்கை போட்டேன்...
அரிசோனா தொடங்கி வயோமிங் வரை 50 அமெரிக்க ஸ்டேட்ஸ் பேரை சொல்ல சொன்னேன்...அவனுக்கு சொல்ல தெரியல்ல....
அதுசரி 50 பெரிய நம்பர் 1513-ல "மே ஃப்ளவர்...கப்பலில் வந்து குடியேறினார்கள் அல்லவா உன்னோட முப்பாட்டன்ஸ் ...
அந்த 13 காலனிகள் ...அதையாச்சும் சொல்லுப்பா ....ம்ஹூம் உதட்டை பிதுக்கிட்டான்....
A-யில் பெயர் தொடங்கும் மாகாணங்கள் ...ம் ஹூம் ..
சரி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகச்சிறிய மாகாணம்...'நோ'....
அமெரிக்க கொடி உருவாக்கியோர்கள் வரலாறு
...நாணய வரலாறு...
ஒரேஒரு நாள் ஜனாதிபதி ஆக இருந்தவர்....
நான் அடுக்கடுக்காக கேட்ட சுமார் 50 கேள்விகளில் ...ஆணித்தரமாய் ஒரு பதில் ...
ம்ஹூம்..ஏதோ சுமாரா அறைகுறையான சமாளிபிகேஷன்ஸ்...
நமக்கு வெள்ளைக்காரன்ஸ்ன்னு சொன்னாலே அவுனுவ ஏதோ பெரிய்ய?!!!!...ன்னு ரொம்ப பேருக்கு நெனைப்பு ...
எனக்கு அவனுவள அறிவுக் கொழுந்தை வைச்சு சூடு போட்டு அவனுவ அலறுவதை ரசிக்கப் பிடிக்கும்...ரொம்ப ரொம்ப பிடிக்கும் ...
நெறைய வைச்சு செஞ்சுருக்கேன் ....
நம்மாளுங்க பொறுத்த வரை அவனுங்க காது கொடுத்தே என்னோட பேச்ச கேட்க மாட்டானுவ ..அதனால அவனுவளை கண்டுக்குறதில்ல ...வாசிப்பும் அவனுவளுக்கு அவ்வளவா இருக்குமா ...என்பது...
ஐயமில்லை ....வெள்ளிடைமலை உண்மை ...
அதனாலே ஆடாம ஜெயிச்சொம்மடா...கத தான் ..
...அப்புறமா நான் எல்லாத்துக்கும் பதில் சொல்லி...வழக்கம் போல அசத்தினேன்...
ஒரு இந்தியன் / அதிலும் தமிழன் புட்டு புட்டு வைத்து செவிட்டில் அடித்த நினைவு /ஞாபகம் ...அந்த அமெரிக்கனுக்கு ஏழேழு ஜென்மமும் மறக்காது ...
...ஏர்போர்ட்டில் இறங்கிப்போகையில் கட்டிப்பிடித்து பாராட்டி சென்றார்....அவர் குடித்த மது போதை .....பூராவும் தெளிந்து போயிற்று...
இன்றைக்கும் எண்ணி எண்ணி சிரிப்பேன்...
பலமுறை எனது நண்பர்களுடன் பகிர்ந்துள்ளேன்...
நம்ம மக்களுக்கு இங்க்லீஷ் பேசினா அதுவே 'அறிவுடைமை' என்னும் தப்பான எண்ணம்....
படித்தால் எனக்கு மட்டும் அல்ல ... எல்லோருக்கும் நிறைய நிறைய தெரியும்....
அமெரிக்கன் காங்கிரஸ் , பிரிட்டிஷ் கவுன்சில்,கன்னிமாரா மற்றும் தேவநேயப்பாவாணர் சென்னை மைய நூலகங்கள் ...
எனக்கு பொழுது போக்கு மைதானங்கள்...பல்லாயிரம் நூல்கள்,பத்திரிகைகள்...வாசிப்பு...
சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர்கள் ???!!!!(அன்றைக்கு (1979 -82) அறிவில் அவங்க ஒரு வெண்ணையும் கிடையாது ...
ஒரு சிலர் ஏதோ கொஞ்சம் தெரிஞ்சு வைச்சுருக்கலாம்...பெரும்பாலும் நோ GK)
அங்கேயே 20+ வருட அனுபவசாலிகள்...பேராசிரியர்களை கிண்டி நொங்கு எடுத்த மாவீரன் ...
அந்தக் கதைகளையே ஒரு சிறப்புப் பதிவாய் போட்ருவோம் ..
லயோலா கல்லூரி விரிவுரையாளர் / பேராசிரியர் ன்னா ஒண்ணும் கொம்பன்ஸ் கிடையாது...
வாசிக்கும் பழக்கம் இருந்தா ...நல்ல நினைவுத் திறன் ....விளக்கி சொல்லும் ஆற்றல்...பேச்சுத் திறமை இருக்கும் எல்லோருமே கொம்பன்ஸ் தான் ...நானு பெரிய்ய்ய...கொம்பன் ...
பேர் அலங்காரம் ....குணம் அகங்காரம் ...
சொல்ல எனக்கு வெட்கம் / பயம் லேது ....
எனது வகுப்புதோழர்கள் எனக்கு கொம்பு சீவி விட்டு ...லயோலா விரிவுரையாளர்கள் /பேராசிரியர்கள் ...எனது காமெர்ஸ் டிபார்ட்மென்ட் ...மட்டுமல்ல பிற டிபார்ட்மென்ட் ஆட்களிடமும் தேவையின்றி முட்டி ...
அவர்கள் பலரது அறியாமையோடு கலந்த அகந்தை ....எனும் ...குடலைக் கிழித்த முரட்டுக்காளை...அய்யா !!!!!!!!
இப்போதும் அப்படித்தான்னு வைச்சுக்குங்களேன் ...
யாரேனும் வரீங்களா ...
ஒரு கை பாத்துடலாம் .....!!!!!!!

No comments:

Post a Comment