Tuesday 16 January 2018

அவளின் செந்தேகம்
பெண்ணால் ஆனதா
இல்லை
பொன்னால் ஆனதா
எனக்கோ சந்தேகம்
அவள் மரத்தின்
அருகே நடந்தால்
அதுதான் மரபுக்கவிதை
அவள் புது உடை
அணிந்தால்
அதுதான் புதுக்கவிதை
கடவுள்கூட
கண்திறக்கின்றது
அவள் கருவறையில் நிற்கும்போது
இவள் கிளின்டன் வீட்டில்
வளர்ந்த கிளி அல்ல
கிளியோபாட்ரா வீட்டில்
வளர்ந்த கிளி
இவளை சுற்றினால்தான்
தற்கால ஞானப்பழம் கிட்டும்

No comments:

Post a Comment