Wednesday 31 January 2018

திருப்பாடல்

திருப்பாடல் 17
1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
2 உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும்.
3 என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்; என் வாய் பிழை செய்யக்கூடாதென உறுதி கொண்டேன்.
4 பிற மானிடர் செய்வது போல் அல்லாமல், நீர் உரைத்த வாக்கிற்கிணங்க, வன்முறையாளரின் வழிகளை விட்டு விலகியுள்ளேன்.
5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.
6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.
7 உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!
8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
9 என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும் என்னை மறைத்துக் கொள்ளும்.
10 அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள். தங்கள் வாயினால் இறுமாப்புடன் பேசுபவர்கள்.
11 அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்; இதோ! என்னை வளைத்துக் கொண்டனர்; அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு, வைத்த கண் வாங்காது காத்திருக்கின்றனர்.
12 பீறிப்போடத் துடிக்கும் சிங்கத்திற்கும் அவர்கள் ஒப்பாவர்; மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.
13 ஆண்டவரே, எழுந்து வாரும்; அவர்களை நேருக்குநேர் எதிர்த்து முறியடையும்; பொல்லாரிடமிருந்து உமது வாளால் என்னைக் காத்தருளும்.
14 ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து-இவ்வுலகமே தங்கள் கதியென வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து- உமது கைவலிமையினால் என்னைக் காப்பாற்றும். அவர்களுக்கென நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால் அவர்கள் வயிற்றை நிரப்பும்;; அவர்களின் மைந்தர் வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்; எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்லட்டும்;
15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.

R D G





Tuesday 30 January 2018

கொய்யா பூசணி


மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல; பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாப்பழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும். இதில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவையாகும்.கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘பி‘ மற்றும் ‘சி‘ ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன.
* கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
* மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.
* கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்களும், ஈறுகளும் வலுவடையும்.
* ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி சிறிது நேரம் கழித்து வாயை கொப்பளித்தால், வலி மற்றும் ஈறு வீக்கம் குறையும்.
* மழைக்காலத்தில் பெரும்பாலானோருக்கு இருமல் மற்றும் தொண்டைப்புண் வரக்கூடும். இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி, வாயை கொப்பளித்தால் விரைவில் குணமாகும்.
* ரத்த சோகை இருப்பவர்களும் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
* மது போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும். இதன்மூலம் மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெற முடியும்.
* கொய்யாப்பழத்தில் லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன. இவை புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொண்டவை.
* ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள பொட்டாசியம் அவசியமானது. கொய்யாப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. எனவே இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.
* கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கலாம்.
* கொய்யாப்பழத்தின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே இதன் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் நீக்காமல் சாப்பிட்டால், முகத்திற்கு பொலிவும், அழகையும் தருவதோடு, தோல் வறட்சியை நீக்கும். மேலும் முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக வைத்திருக்கும்.
குறிப்பு
* பல்வேறு மருத்துவ குணம் உள்ள கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், வயிற்று வலி உண்டாகும்.
* கொய்யாப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட்டால், பித்தம் அதிகரித்து, வாந்தி மயக்கம் ஏற்படக்கூடும். எனவே ஒரு நாளைக்கு 2 கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.
* வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடக்கூடாது.
பூசணியின் மகத்துவம்: பூசணி கொடியில் காய்க்கும் காய். அதிக செலவு இல்லாமல் வீட்டு தோட்டத்திலேயே செழிப்பாக வளரக்கூடியது. இதில் விட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைவாக உள்ளன. பூசணிக்காயை சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்கும். ஆஸ்துமா, சர்க்கரை நோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்றவையும் வராமல் தடுக்கும் தன்மை உள்ளது.பூசணி சாறு சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்தலாம். இதில், பொட்டாசியம் அதிகளவில் உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

பூசணியில் உள்ள ‘ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்‘ என்ற சத்து உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் 23 சதவிகிதம் அதிகரிக்கும்.சூரிய வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், சரும புண்களை ஆற்றவும், தழும்புகளை மறைய செய்யவும் பூசணிக்காயை சாப்பிட்டு வந்தால் பயனடையலாம். உடல் எடையை குறைக்க பூசணிக்காயை சாப்பிடலாம்.உடலில் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், எந்த வயதினரும் பூசணிக்காயை சமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் நீரின் அளவினை சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும்

Graviola / Custard Apple



"SHARE THIS INFORMATION FIRST AND READ AFTERWARDS.....SAVE LIFE Share this as much as you can.

"10000 times stronger killer of CANCER than Chemo".. do share it.. can save many lives, fill up hopes and build confidence in the patients...

The Sour Sop or the fruit from the graviola tree is a miraculous natural cancer cell killer 10,000 times stronger than Chemo.

Why are we not aware of this? Its because some big corporation want to make back their money spent on years of research by trying to make a synthetic version of it for sale.

So, since you know it now you can help a friend in need by letting him know or just drink some sour sop juice yourself as prevention from time to time. The taste is not bad after all. It’s completely natural and definitely has no side effects. If you have the space, plant one in your garden.
The other parts of the tree are also useful.

The next time you have a fruit juice, ask for a sour sop.

How many people died in vain while this billion-dollar drug maker concealed the secret of the miraculous Graviola tree?

This tree is low and is called graviola ! in Brazi l, guanabana in Spanish and has the uninspiring name “soursop” in English. The fruit is very large and the subacid sweet white pulp is eaten out of hand or, more commonly, used to make fruit drinks, sherbets and such.

The principal interest in this plant is because of its strong anti-cancer effects. Although it is effective for a number of medical conditions, it is its anti tumor effect that is of most interest. This plant is a proven cancer remedy for cancers of all types.

Besides being a cancer remedy, graviola is a broad spectrum antimicrobial agent for both bacterial and fungal infections, is effective against internal parasites and worms, lowers high blood pressure and is used for depression, stress and nervous disorders.

If there ever was a single example that makes it dramatically clear why the existence of Health Sciences Institute is so vital to Americans like you, it’s the incredible story behind the Graviola tree..

The truth is stunningly simple: Deep within the Amazon Rainforest grows a tree that could literally revolutionize what you, your doctor, and the rest of the world thinks about cancer treatment and chances of survival. The future has never looked more promising.

Research shows that with extracts from this miraculous tree it now may be possible to:
* Attack cancer safely and effectively with an all-natural therapy that does not cause extreme nausea, weight loss and hair loss
* Protect your immune system and avoid deadly infections
* Feel stronger and healthier throughout the course of the treatment
* Boost your energy and improve your outlook on life

The source of this information is just as stunning: It comes from one of America ‘s largest drug manufacturers, th! e fruit of over 20 laboratory tests conducted since the 1970's! What those tests revealed was nothing short of mind numbing… Extracts from the tree were shown to:

* Effectively target and kill malignant cells in 12 types of cancer, including colon, breast, prostate, lung and pancreatic cancer..
* The tree compounds proved to be up to 10,000 times stronger in slowing the growth of cancer cells than Adriamycin, a commonly used chemotherapeutic drug!
* What’s more, unlike chemotherapy, the compound extracted from the Graviola tree selectivelyhunts
down and kills only cancer cells.. It does not harm healthy cells!

The amazing anti-cancer properties of the Graviola tree have been extensively researched–so why haven’t you heard anything about it? If Graviola extract is

One of America ‘s biggest billion-dollar drug makers began a search for a cancer cure and their research centered on Graviola, a legendary healing tree from the Amazon Rainforest.

Various parts of the Graviola tree–including the bark, leaves, roots, fruit and fruit-seeds–have been used for centuries by medicine men and native Indi! ans in S outh America to treat heart disease, asthma, liver problems and arthritis. Going on very little documented scientific evidence, the company poured money and resources into testing the tree’s anti-cancerous properties–and were shocked by the results. Graviola proved itself to be a cancer-killing dynamo.
But that’s where the Graviola story nearly ended.

The company had one huge problem with the Graviola tree–it’s completely natural, and so, under federal law, not patentable. There’s no way to make serious profits from it.

It turns out the drug company invested nearly seven years trying to synthesize two of the Graviola tree’s most powerful anti-cancer ingredients. If they could isolate and produce man-made clones of what makes the Graviola so potent, they’d be able to patent it and make their money back. Alas, they hit a brick wall. The original simply could not be replicated. There was no way the company could protect its profits–or even make back the millions it poured into research.

As the dream of huge profits evaporated, their testing on Graviola came to a screeching halt. Even worse, the company shelved the entire project and chose not to publish the findings of its research!

Luckily, however, there was one scientist from the Graviola research team whose conscience wouldn’t let him see such atrocity committed. Risking his career, he contacted a company that’s dedicated to harvesting medical plants from the Amazon Rainforest and blew the whistle.

Miracle unleashed
When researchers at the Health Sciences Institute were alerted to the news of Graviola,! they be gan tracking the research done on the cancer-killing tree. Evidence of the astounding effectiveness of Graviola–and its shocking cover-up–came in fast and furious….

….The National Cancer Institute performed the first scientific research in 1976. The results showed that Graviola’s “leaves and stems were found effective in attacking and destroying malignant cells.” Inexplicably, the results were published in an internal report and never released to the public…

….Since 1976, Graviola has proven to be an immensely potent cancer killer in 20 independent laboratory tests, yet no double-blind clinical trials–the typical benchmark mainstream doctors and journals use to judge a treatment’s value–were ever initiated….

….A study published in the Journal of Natural Products, following a recent study conducted at Catholic University of South Korea stated that one chemical in Graviola was found to selectively kill colon cancer cells at “10,000 times the potency of (the commonly used chemotherapy drug) Adriamycin…”

….The most significant part of the Catholic University of South Korea report is that Graviola was shown to selectively target the cancer cells, leaving healthy cells untouched. Unlike chemotherapy, which indiscriminately targets all actively reproducing cells (such as stomach and hair cells), causing the often devastating side effects of nausea and hair loss in cancer patients.

…A study at Purdue University recently found that leaves from the Graviola tree killed cancer cells among six human cell lines and were especially effective against prostate, pancreatic and lung cancers Seven years of silence broken–it’s finally here!"

பனை



 
 புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.

தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை..

பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக
பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.

சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.

பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.

பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.

பயன் தரும் பாகங்கள் . . .

நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.


மருத்துவப் பயன்கள். . .

பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.

வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.

புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.

அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.

தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

இலவங்கப்பட்டையும், தேனும்

இலவங்கப்பட்டையும், தேனும்  நமது நல்வாழ்வுக்கு எவ்வளவு 

உறுதுணையாக இருக்கிறது என்பதை  இதன் மூலம் அறியலாம். 

                                                              இலவங்கப்பட்டை


                                                                      தேன்

                                           இதயத்தை பாதுகாக்க....

                             * இலவங்கப்பட்டை பொடி- ஒரு தேக்கரண்டி
                          
                              * தேன் - இரண்டு தேக்கரண்டி
                          
                                  இவ்விரண்டையும் கலந்து,

                                 தினமும் காலையில் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வந்தால்,

                     இதய நோய் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.


                                                  முடக்கு வாதத்திலிருந்து விடுபட...

                              * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி

                              * தேன் - இரண்டு தேக்கரண்டி

                              இவற்றை ஒரு  டம்ளர் வெந்நீரில் கலந்து,

                             தினமும் காலை, இரவு  குடித்து வர,

                            ஆர்த்ரிரைட்டீஸ் என்கிற முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டு,

                            நடக்க முடியாமல் சிரமப்படுகிறவர்கள் குணம் பெறுவார்கள்.


                                     சிறுநீர்குழாய் கிருமித் தொல்லையை இல்லாமலாக்க...

                              * இலவங்கப்பட்டைப் பொடி - இரண்டு தேக்கரண்டி

                              * தேன் - ஒரு தேக்கரண்டி

                              மேற்குறிப்பிட்டவைகளை,
                   
                            இளஞ்சூடான வெந்நீரில் கலந்து குடித்துவர,

                          சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும்.

                         கோடைக்காலத்தில் இது அருமருந்தாகும்.


                                          கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த...

                               *  இலவங்கப்பட்டைப் பொடி - ஒரு தேக்கரண்டி

                               *  தேன் - இரண்டு தேக்கரண்டி

                                    இவ்விரண்டையும்,  மிதமான வெந்நீரில்  கலந்து,

                                  ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வர,

                                  கொலஸ்ட்ரால் குறையும்.


                                   ஜலதோஷத்திலிருந்து விடுதலையாக...
                                                   
                              * இலவங்கப்பட்டைப் பொடி - கால் தேக்கரண்டி

                              * தேன் - ஒரு தேக்கரண்டி

                              சூடான தண்ணீரில் கலந்து  மூன்று நாட்கள் குடிக்க,

                              சைனஸ், சளி, இருமல் அனைத்தும் தீரும்.

                              நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.


                                                   வயிற்று உபாதைகளை போக்கிக் கொள்ள...

                                  * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி

                                   * தேன் - இரண்டு தேக்கரண்டி
               
                                    இவ்விரண்டையும் கலந்து உண்டு வர,

                                  வயிற்றுவலி, அல்சர்  குணமாகும்.

                                   வாயுத்தொல்லை மறையும்.


                                        அஜீரணம் சரியாக...

                                      * இலவங்கப்பட்டைப் பொடி-  கால் தேக்கரண்டி.

                                       * தேன் - இரண்டு தேக்கரண்டி கலந்து,
                                       
                                         உணவுக்கு முன் சாப்பிட,

                                      உண்ணும் உணவு சுலபமாக சீரணமாகும்.

             சாப்பிட்டவுடன் வயிறு பெருத்து சிரமப்படுகிறவர்களுக்கு நலம் தரும்.


                                             நீண்ட ஆயுளுக்கு.....

                                       * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி

                                        * தேன் - நான்கு தேக்கரண்டி

                 மூன்று கோப்பை மிதமான சூட்டிலுள்ள தண்ணீரில் கலந்து அதை,

                ஒரு நாளில் மூன்று அல்லது இரண்டு முறையாக பருகி வர,

               வயதான தோற்றம் மறைந்து, இளமை ததும்பும்.

                சருமம் மிருதுவாகும். ஆயுள் நீடிக்கும்.

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா


இராஜ ராஜ சோழன்

இராஜராஜ சோழன் - தஞ்சை பெரிய கோயில்


'உதகையைத் தீ உய்த்த உரவோன்..'
'என்னது ஊட்டியை எரித்தார்களா?' என்று மேலே உள்ள வரியைப் படித்ததும் அதிர்ச்சியும், கோபமும் எழுந்தது. ஆனால் எரித்தது யார் என்றும், எதற்கு என்றும் அறிந்ததும் ஆச்சரியமும் பரவசமும் ஏற்பட்டது.
இராஜராஜ சோழன் சேரர்களிடம் நட்பு நாடி தூது விட்டிருக்கார். தூதுவனை குடமலை நாட்டு மன்னர் கைது செய்து உதகையில் சிறை வைத்து விட்டார். அது அனுமார் வாலில் நெருப்பு வைத்த கதையாகி விட்டது. தூதுவனை மீட்க சோழரின் போர்ப்படை கிளம்பியது. உதகையை எரித்து, தூதுவனை மீட்டது. அத்துடன் நில்லாமல் பாண்டியன அமரபுஜங்கன், சேரன் பாஸ்கர ரவிவர்மன் ஆகிய இருவரையும் போரில்  வென்றார். வ.பி. 1023ஆம் ஆண்டு பாண்டிய மண்டலம் சோழப் பேரரசோடு இணைந்தது. பாண்டியன் அமரபுஜங்கனை வென்றதால் இராஜராஜ சோழனுக்கு பாண்டிய குலாசினி என்ற விருதுப் பெயர் ஏற்பட்டது. இது இராஜராஜ சோழனின் முதல் போர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போரிலேயே சும்மா அதகளப்படுத்திட்டார்ல!! 'வீண் சண்டைக்குப் போறதில்லை; வர சண்டையை விடுவதில்லை' என்ற நம் தமிழ் சினிமா ஹீரோக்களின் கொள்கை இராஜராஜ சோழனிலிருந்து தான் தொடங்கி இருக்கும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் போரிற்கு, "காந்தளூர்ச்சாலைப் போர்" என பெயர். அது வரை இருமுடிச் சோழர்களாக இருந்தவர்கள், இராஜராஜ சோழனால் மும்முடிச் சோழர்களாக உயர்ந்தனர். மூவேந்தர்களின் முடியையும் தன் வசமாக்கிய முதல் சோழன் இராஜராஜ சோழன். பின் புலி வாலைப் பிடித்த கதையாக வேங்கி (ஆந்திரா), கன்னட நாடு, சாளுக்கிய நாடு, இலங்கை, கலிங்க நாடு என ஒரு கை பார்த்த இராஜராஜ சோழனின் இறுதிப் போர் வ.பி. 1044ல் நிகழ்ந்தது. பாணராஜா, போகதேவன் என இரு மன்னர்களை வ்ரட்டி, "முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்" என்றழைக்கப்பட்ட தற்போதைய மாலத்தீவு (Maldives)-ஐக் கைப்பற்றினார் இராஜராஜ சோழன். கப்பற்படையில் சிறந்து விளங்கிய பிற்கால சோழர்களின் (அதாவது கடாரம் கொண்ட இராஜேந்திர சோழன் காலம்) முன்னோட்டமாக இப்போர் அமைந்தது. சீனா,  சுமத்ரா, இலங்கை, நிக்கோபர் போன்ற நாடுகளுடன் சீரான வாணிபத்தை மேற்கொண்டுள்ளது சோழ நாடு. சீனாவுடன் கடல் வாணிபம் செய்வதற்காக, இராஜராஜன் பல உயர்ந்த பொருள்களைப் பரிசாக அனுப்பியது குறித்து சீன நூல்களும் தெரிவிக்கின்றன.
"வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து"
சோழர்கள் பற்றி சொன்னால் இந்தப் பாடலை கண்டிப்பாக மேற்கோள் காட்டியே ஆகணும். சோழர்கள் நீரின் மகத்துவம் உணர்ந்தவர்கள். அதனாலேயே சோழ நாடு சோழ வளநாடு என்று புகழப்பெற்றது. நீர்வரத்தை சேமிப்பதற்கான கரிகால சோழனின் கல்லணை மற்றும் ராஜாதித்தனின் வீரநாராயணன் (வீராணம்) ஏரி ஆகிய இரண்டும் காலத்திற்கு சோழர்களின் புகழ்பாடும். அப்பரம்பரையில் வந்த இராஜராஜ சோழன் ஒரு படி மேலே போய், நீர்நிலைகளின் நிர்வாக நடவடிக்கைகளைக் கவனித்து கொள்ள "ஆயக்கட்டுச் சபை" என நீர்ப்பாசனத்திற்காக கிராமசபை அமைப்பு ஒன்றினையே உருவாக்கினார். இராஜராஜன் காலத்தில் சுமார் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்பட்டன. தூர் வாறுவதும், மதகுகளை சரி செய்வதும் நீர்வாரியத் துறையின் முக்கிய பணிகளாக தொடர்ந்தன. இராஜராஜனின் தேர்ந்த நிர்வாகத்திற்கு இது ஒரு சான்று. இன்னொரு சான்று,  ராஜ ராஜேசுவர உடையார் பெரும்பண்டாரம். பண்டாரம் என்றால் என்னவென்று பார்க்கும் முன் இன்னொன்னு பார்த்துடலாம் (பண்டாரம் என்ற சொல்லுக்கு பரதேசி, ஆண்டி என்ற பொருள் தான் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும். ஆனால் பண்டாரம் என்பதற்கு கருவூலம் என்றொரு பொருளும் உண்டு).
இராஜராஜ சோழன் எவ்வளவோ செய்திருந்தாலும்.. அவர் பெயரைக் கேட்டதும் முதலில் நினைவிற்கு வருவது வ.பி. 2041-ல் ஆயிரமாவது பிறந்தாண்டைக் கொண்டாடிய தஞ்சை பெரிய கோயில். 'ராஜராஜீஸ்வரம்' என்ற அந்தக் கலைப் பொக்கிஷத்தை இராஜராஜன் ஆன்மீகத் தளமாக  உருவாக்கவில்லை. சோழ மண்டலத்தின் நிர்வாகக் கேந்திரம் அது. சோழர் காலத்து இலக்கியம், கலை, அரசியல், வாழ்வியல் முறைகள், பொருளாதாரம் என சகலமும் பெரிய கோயில் மூலமாகவே நமக்கு தெரிய வந்தது. கோயில் விளக்குகளை ஏற்ற தினமும் நெய் அளிப்பதற்கு பதிலாக இராஜராஜ சோழன் கால்நடைகளை மக்களுக்கு தானமாக வழங்கினார். மக்கள் பதிலுக்கு பால், நெய் என கோயிலுக்கு தானமாக அளிக்க வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் கெட்டிக்காரர் இராஜராஜன். அதே போல் கோயிலுக்கென்றும் ஏராளமான கொடை வழங்கினார் இராஜராஜ சோழன். அதன் ஒரு பகுதியை மக்களின் பயன்பாட்டுக்கென ஒதுக்கினார். அதை நிர்வகிக்க தான் ராஜ ராஜேசுவர உடையார் பெரும்பண்டாரம் தொடங்கப்பட்டது. அதாவது இன்றைய வங்கி போல. ஊர் சபைகள், வணிகக்குழுவினர், விவசாயிகள், தனி நபர்கள் எனப் பலரும் அந்த வங்கியில் கடன் பெற்றார்கள். ஆண்டொன்றுக்கு 12.5% வட்டியைக் கோயிலுக்கு செலுத்தினார்கள்.
வ.பி. 1037ல் தொடங்கப்பட்டது பெரிய கோயிலின் கட்டுமானம். வ.பி.1041ல் கோயிலுக்கு குடமுழுக்கு நடந்தது. கோயிலுக்கான கற்களை சுமார் 75 கி.மீ. தொலைவிலிருந்து எடுத்து வரப்பட்டது. ஆக இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டி முடிக்க பலரை அடிமைகளாக கசக்கி பிழிந்திருப்பார் என போகிற போக்கில் கருத்து சொல்லும் பலர் உள்ளனர். ஆனால் இராஜராஜ சோழன் கோயில் கட்டுமானம் பற்றிய ஒவ்வொன்றையும் ஆவணத்தை அதீத கவனத்துடன் கல்வெட்டுகளில் பதிந்துள்ளார். கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிரந்திர ஊழியர்கள், சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள், 118 ஊர்களிலிருந்து நியமிக்கப்பட்ட மெய்க்காவலர்கள், ஓதுவார்கள், உடுக்கை கொட்டி மத்தளம் வாசிப்போர்கள், பெருந்தச்சர்கள், ஆடல்மகளிர், பக்திப் பாடலிசைத்த பிடாரர்கள், நிவந்தம் அளித்த ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை என சகலரின் பெயரையும் கல்வெட்டுகளில் பதிந்துள்ளார். இராஜராஜ சோழன் "அன்பே சிவம்" என உணர்ந்த ஞானி. சாதி அது இது என சக மனிதனை மதிக்காத சம காலத்து சாதாரணர்கள் முதல் தினவெடுத்த அரசியல்வாதி வரை அனைவரும் அந்தத் தஞ்சை கல்வெட்டில் தலையை மோதி கொண்டு சாகலாம்.
சரி மும்முடிச் சோழனான இராஜராஜ சோழனின் தஞ்சை அரண்மனை எங்கே? மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் வெஞ்சினத்தில் தஞ்சை நகர் சிதலமடைந்தது. ஆனால் அவரின் கோபத்திற்கு பெரிய கோயில் இலக்காகவில்லை. பத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களையும் கம்பீரமாக சமாளித்தது. ஆனால் வ.பி. 1342-ல், மாலிக்காபூர் படையெடுப்பில் தான் பெரிய கோயிலுக்கு அதிகச் சேதாரங்கள் ஏற்பட்டன. வ.பி. 1886-ற்கு பிறகு மராட்டிய வம்ச தலைமை ராணியான காமாட்சியம்பா பாய் சாஹேப், பரோடா கெய்ஹ்வாட் மன்னர் குடும்பத்துடன் சம்பந்தம் செய்தார். "ஊரான் வீட்டு நெய்யே புருஷன் கையே!!" என சொல்வது போல் தஞ்சை பெரிய கோயிலில் இருந்த மதிப்புமிக்க ஐம்பொன் சிலைகளையும் சீதனமாக அனுப்பிவிட்டார். அதில் ராஜராஜன் வழிபட்ட பஞ்சதேக மூர்த்தி செம்புச் சிலையும் பரோடாவிற்கு போய் விட்டதாம்.
கல்வெட்டியலின் தந்தையான கே.வி. சுப்ரமணிய ஐயருக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
அற்புதமான ஒருவன்;
அற்புதத்தில் ஒருவன்*.
இரண்டும் ஒருவனே
அவன்,
இராஜராஜ சோழன்.

அர்த்த சந்த்ராசனம்:

அர்த்த சந்த்ராசனம்:
சமஸ்கிருதத்தில் அர்த்த என்றால் பாதி என்று பொருள். சந்திரா என்றால் நிலா என்று பொருள். இந்த ஆசனம் பாதி நிலா வடிவில் இருப்பதால் இதனை அர்த்த சந்திராசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை:
முதலில் விரிப்பின் மீது காலை அகற்றி வைத்து நேராக நின்று கொள்ள வேண்டும்.
வலது கையை தோள்பட்டைக்கு நேராக நீட்டி உள்ளங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
வலது கையை மேல்புறமாக நோக்கி உங்களது இடதுபுறத்தில் நேராக கொண்டு செல்லவும். அப்போது உங்களது இடது கையை இடது காலின் முட்டியைத் தாங்கிக் கொள்ளும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் மூச்சானது சாதாரண நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு ஒருசில நிமிடங்கள் இருந்து விட்டு பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
அதுபோல் இடது கையை நீட்டி வலது புறமாகக் கொண்டு வந்து வலது கால் முட்டியை வலது கையால் தாங்கி மூச்சை சாதாரண நிலையில் இருக்க வேண்டும்.
பயன்கள்:
* உடலின் முதுகுத் தண்டு இடப்புறமும், வலப்புறமும் மாறி, மாறி வளைவதால் உடலுக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் நரம்புகள் வலுப்பெறும்.
* கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்குவதுடன் உடல் பலமடையும்.
* தொப்பையைக் குறைக்கும். இடுப்பு பகுதி வலுப்பெறும்.
* நன்கு பசியைத் தூண்டும், அஜீரணத்தைப் போக்கும்.
* உடலில் உள்ள தேவையற்ற நீர்களைப் போக்கும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும்.
இவ்வாசனத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்

ஒரு ஓகோ பதிவு


Chaappa Kurishu - கிளு கிளு கில்மா மலையாள சினிமாவா? ஒரு பார்வை 


சில சினிமாக்களை வெறும் இரண்டு மணி நேரப் பொழுதுபோக்கு எனக் கடந்துவிட முடிவதில்லை. அப்படி கடக்க முடியாத ஒரு படம் மலையாளத்தில் வெளியான 'சப்பா குரிசு'. படம் பார்த்துவிட்டு படம் குறித்து ஃபேஸ்புக்கில் சில வரிகள் எழுதியிருந்தேன். "படம் நல்லாருக்கா?" என்ற உரையாடல்களில், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது "நெஜமாகவே நெட்ல அப்படி இருக்குதா?" என்ற இருவரின் கேள்விதான். 
"நெட்ல இண்டியன் ஸ்கேண்டல் வீடியோனு தேடிப்பாருங்க, அப்ப புரியும்!" என்றேன். 
கேட்டவர்கள் இருவரும் பெண்கள் என்பதால், ஒருவேளை அவர்கள் தேடியிருந்தால் அதுகுறித்து மேற்கொண்டு என்னிடம் கேட்கவோ பேசவோ ஏதும் இல்லாமல் போயிருக்கலாம். அதற்கு முக்கியக் காரணம் அவர்களுக்கு கிடைத்த வீடியோ காட்சிகளில் பெரும்பாலும் பெண்களே பலிகடாக்களாக இருந்திருக்கும் சாத்தியம் அதிகம் என்பதே. 
காமம் நிதர்சனமானது. வெகு இயல்பானது. வெகு அழகானதும் கூட. தெரிந்தோ தெரியாமலோ அது குறித்த விழிப்புணர்வை, கல்வியைக் கொடுக்காமல், அதைப் பொத்திவைத்து ஒரு எட்டாப் பொருளாக, பாவமாக, குற்றமாக பாவனைகள் ஏற்படுத்தி, எட்டாப் பொருள் கிட்டினால் ஏற்படும் பரவசத்தில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறோம். 
ஒரு காலத்தில் வயது வந்தவர்களுக்கான படங்கள், காட்சிகள் கிடைப்பது அரிதினும் அரிது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒன்றோ இரண்டோ திரையரங்குகள் மட்டுமே தீனி போடும். இன்றைக்கு இணையத்திலும், எம்எம்எஸ் வழியாகவும் வேண்டிய நொடியில் கிட்டுகின்றன. முன்பெல்லாம் அதெற்கென நடிகர்கள் நடித்து, இயக்கிய படம், காட்சிகள் மட்டுமே கிடைக்கும். 
ஆனால் இன்றைக்கு கிடைப்பவை 90 சதவிகிதம், நிஜமாய் நிகழ்ந்தேறிய காட்சிகள். இருளும் ஒளியுமாய், சில சமயம் தலையைப் திருப்பிப் பார்க்க வேண்டிய கோணத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 
மிக மிக அரிதாக அதற்கென நடிப்பவர்கள், வெகு அரிதாக கணவன் மனைவியாக இருப்போர், பெரும்பாலும் காதல் இணைகள், அதைவிடப் பெரும்பாலும் பிறன்மனை உறவுகள் என இணையத்தின் காம வெளியெங்கும் நிரம்பிக் கிடக்கின்றனர். "எப்படி, ஏன் இவை பதிவாகின்றன?" என்பதற்கு மிகமுக்கியமான பதில் - ஆர்வம், அதீத ஆர்வம், ஆர்வக் கோளாறு, கொஞ்சமே கொஞ்சமேனும் எதிர்காலத்தில் தன் பாதுகாப்பிற்காக அல்லது அவர்களை சமாளிக்க அல்லது மிரட்டுவதற்கான வக்கிரம் என்பது மட்டுமே. 
வெப்கேம் உரையாடல்களின் போது பதிவு செய்துகொள்வது, கையில் செல்போனில் உள்ள கேமரா மூலம் சுயமாகப் பதிவு செய்துகொள்வது, செல்போனை ஒரு இடத்தில் பொருத்தி பதிவு செய்து கொள்வது என சுயமாக, விரும்பி, தெரிந்து, நம்ம போன் தானே என்னவாகிவிடப்போகிறது என்ற அசட்டு நம்பிக்கையில்தான் நிறைய நடக்கின்றன. அப்படியான காணொளிகளில், பெரும்பாலும் அதில் தென்படும் பெண்கள் ரொம்பவும் தயங்குவார்கள், அய்யே இதெல்லாம் வேணாம் என பலகீனமாக எதிர்ப்பார்கள். ஆனாலும் அவர்களின் கண்களில் பயம், எச்சரிக்கை உணர்விற்குப் பதிலாக அந்த ஆடவனுடன் அந்த நேரத்தில் கொண்டிருக்கும் பிரியத்தால், மீட்டிவிடப்பட்ட மோகத்தால், நம்மையே கொடுக்கிறோம் இதனால் என்னவாகிவிடப் போகிறதென்ற ஆழ்ந்த அசட்டு நம்பிக்கையால், தன்னைப் பகிர்ந்ததோடு தன்னை அல்லது தங்களைப் பதிவுசெய்யவும் அனுமதித்து விடுகிறாள். 
 
சில காணொளிக் காட்சிகளில் மட்டுமே அதில் ஈடுபடும் ஆடவனும் தெரிவான், மற்றபடி முழுக்க முழுக்க அதில் பெண்ணே வியாபித்திருப்பாள். இன்னொரு வகை, தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமென்று ஆழ்ந்திருக்கும் தருணத்தில், அதைக் காணும் ஏதோ ஒரு ஜோடி விழிகள் தன் செல்போன் வழியே அதை பதிவு செய்வதும் நடக்கின்றது. இப்படிப் பதிவு செய்யப்படுவதற்கு காரணம், பெரும்பாலும் அதை மீண்டும் மீண்டும் ரசிக்க வேண்டும் என்பது மட்டுமே! 
'சப்பா குரிசு' படத்தில் வரும் இரண்டு பேர் ஒரு பெருநகரத்தில் சமகாலத்தின் இரண்டு துருவங்களாக இருப்பவர்கள். நாணயத்தின் பூ, தலை என்பது போல மிக நெருக்கத்தில் அமைந்துவிட்ட துருவங்கள் என்றும் சொல்லலாம். 
கட்டுமானத்துறையை நிர்வகிக்கும், வசதிகளும், தோழிகளும் நிறைந்த அர்ஜூன் (ஃபகத் பாசில்) ஒவ்வொருவரும் இதுதான் சொகுசு என நினைக்கும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவன். தன்னிடம் பணிபுரியும் சோனியாவோடு (ரம்யா நம்பீசன்) மிக நெருக்கமாக இருக்கிறான். புதிய வியாபாரம் ஒன்று வெற்றிகரமாக நிறைவேறும் தருணத்தில் இருக்கிறார்கள். அவனுக்கு வேறொரு பெண்ணோடு திருமணம் உறுதியாகிறது. தனிமையாய் தனது வீட்டில், ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் எறும்புகளை தனது ஐபோனில் பதிவு செய்து கொண்டிருப்பவனின் அழைப்பு மணி அடிக்கிறது. வந்திருப்பது சோனியா என்பதால், கதவு திறக்கும் நொடியில் அவள் முக பாவனையைப் பதிவு செய்துகொண்டே உள்ளே அழைத்து, அணைப்பு முத்தமென ஐபோனில் பதிந்தபடி அடுத்தடுத்து முன்னேறுகிறான், அவள் ஓரிரு முறை தட்டிவிட்டு தடுக்கிறாள். அவளின் ஆசையும் நம்பிக்கையும் அதைவிடப் பெரிதாக இருக்கின்றது. அருகிலொரு பெட்டிமீது பதிவாகும் வகையில் வைத்துவிட்டு முன்னேறுகிறான். 
ரப்பர் பேண்ட் போட்டு சுற்றிய நோக்கிய 3310 போனை வைத்துக்கொண்டு, தனது அன்றாடங்களுக்கு போராடிக் கொண்டிருக்கும், ஒரு சூப்பர் மார்கெட் துப்புரவாளனான அன்சாரிக்கு (வினித் சீனிவாசன்) ஒரு சாலையைக் கடப்பதிலும், எதிரில் நடக்கும்போது யாரேனும் இடித்தால் அதைச் சமாளிப்பதிலும் கூட தடுமாற்றம் உண்டு. தினமும் சிக்கனமாய் மெஸ்ஸில் சாப்பிடும்போதும், பணியிடத்தில் அடிமையாக பாவிக்கும் மேலாளரிடமும் அவமானப்பட்டு நொந்துபோகிறான். அங்கிருக்கும் பெண்ணொருத்தி இவனையே நோக்குகிறாள், அவன் பார்வையை விரும்புகிறாள், இவனிடமே பேச விழைகிறாள், அவன் மீது பிரியம் காட்டுகிறாள். 
அர்ஜூன் சோனியா இடையே அர்ஜூன் திருமணம் குறித்து பிரச்சினை எழும் இக்கட்டான தருணத்தில் போன் தொலைந்து, அதை எப்படி இயக்குவதென்று கூடத்தெரியாத அன்சாரியின் கையில் கிடைக்கிறது. 
பயன்படுத்துவது எப்படியெனத் தெரியாமல் போனை அணைத்து வைத்திருக்கும் அன்சாரிக்கும், அந்த போனிற்குள் அந்தரங்கத்தின் வாயிலாக, மொத்த வாழ்க்கையும் அடமானம் வைத்துவிட்டு, போனை மீட்க தொடர்ந்து தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருக்கும் அர்ஜூனுக்கும் இடையே அவ்வப்போதான உரையாடல்கள் எனத் தொடங்குகிறது கண்ணாமூச்சி போராட்டம். 
 
சிங்கம் போல் இருந்தாலும், அந்த போனிற்காக அன்சாரி சொல்வதற்கெல்லாம் ஆடும் நிலைக்கு கீழே இறங்குவதும், போனிற்குள் என்ன இருக்கிறதென்று தெரியாமலே, எதுவும் செய்யத் தயாராக இருக்கும் அர்ஜூனை வைத்து தன்னை அவமானப்படுத்திய வாடிக்கையாளர், மேலாளரைப் பழிவாங்கும் அன்சாரி, தன்னையொரு சக்தி வாய்ந்தவனாகவும் உணர்கிறான். 
போனை திருப்பித் கொடுத்துவிடலாம் என தீர்மானிக்கும் சூழலில் போன் பேட்டரி தீர்ந்துவிடுகிறது. தெரிந்த மொபைல் கடையில் சார்ஜ் போட போனைக் கொடுக்கிறான். அன்சாரி போனைத் திருடி வந்திருக்கிறான் என நினைத்த கடைக்காரர் சார்ஜ் போட்டுவிட்டு திருப்பித் தந்த அடுத்த காட்சியில் அர்ஜூன் - சோனியா அந்தரங்கம் இணையத்திலும், எம்எம்எஸிலும் உலகத்திற்கு விருந்தளிக்கப்படுகிறது. அந்தப் புள்ளியில் திருமணம் நின்று, வியாபாரம் கெட்டு, தற்கொலை முனைக்குச் செல்லும் சோனியா என எல்லாம் சிதைந்துபோகிறது. 
இணையத்தில் எளிதாய்க் கிடைக்கும் ஒரு ஸ்கேண்டல் வீடியோவை ரசிக்கும் கண்களுக்கும், அதில் கிளர்ச்சியுறும் ஹார்மோன்களுக்கும், அப்படிப்பட்ட அந்தரங்கக் காணொளிகள், நிழற்படங்கள், உரையாடல்கள் எவ்வளவு பெரிய காதலில், கட்டாயத்தில் அல்லது நம்பிக்கையின் மேல் கட்டமைக்கப்பட்டிக்கும் என்பது தெரிந்திருக்க வாய்ப்புண்டா எனத் தெரியவில்லை. 
ஒரு குறுகுறுப்பிற்காக, விளையாட்டாக, ஆர்வக் கோளாறில், விஷமத்தனமாக என ஏதோ ஒரு காரணத்தினால் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வின்மேல் இருந்த காதல், பிரியம், நம்பிக்கை அல்லது கட்டாயம், எந்த வகையிலும் தொடர்பில்லாத எவரோ ஒருவரின் மூலம் கட்டவிழ்க்கப்பட்டு கடை பரப்பப்பட்டு, அதில் ஈடுபட்டிருந்தோரை நிலைகுலைய வைத்து சூன்யமாக்கிவிடுகிறது. 
 
கோயில் கருவறையில் பெண்களோடு அர்ச்சகர், கல்லூரி வளாகத்தில் தோழியோடு மாணவன், வகுப்பறையில் ஆசிரியையோடு தலைமையாசிரியர், நிறுவனப் பெண்களோடு உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் என சமீபத்தில் அதிர்வுகளை உண்டாக்கிய காணொளிகளில் அந்த அர்ச்சகர், மாணவன், தலைமையாசிரியர், அதிகாரி என அனைவருமே, தங்கள் முழு விருப்பத்தின் பேரில், சுய அறிவோடு, அந்தப் பெண்கள் அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ பதிவு செய்திருக்கின்றனர். அந்தக் காட்சிகளை அவர்களாகவே விருப்பட்டு வெளியிட்டிருக்க சாத்தியங்கள் மிகக் குறைவு. கைபேசி பழுது நீக்க கொடுத்த இடத்தில், கணினியோடு இணைத்து சார்ஜ் போடக்கொடுத்த இடத்தில் என அந்தக் காட்சிகள் உருவப்பட்டு, இணையத்தில் வெளியாகி, சில நிமிட இசைவுக்கு அவர்களின் தலைமுறையே எதிர்பார்க்காத அளவு, தாங்க முடியாத அளவுக்கு சேதாரங்களை, அவமானத்தை, காயத்தை அளித்துவிட்டுப் போய்விடுகின்றன.. 
நம் அந்தரங்கங்கள், தொடர்புகள், தனிப்பட்ட முக்கிய விபரங்கள், வியாபார விபரங்கள், வங்கிப் பரிமாற்றங்கள், பயணங்கள் உட்பட அனைத்துமே கையடக்க போன் அல்லது கணினியில் சுருங்கி அடைபட்டுவிட்ட சூழலில் அதைத் தொலைத்தால் எத்தனை ஆபத்து என்பதையும், அல்பத்தனமாய் ஆர்வக்கோளாறின் காரணமாய்ப் பதிவு செய்யப்படும் அந்தரங்கங்கள் எத்தனை கொடூரமான ஆபத்து என்பதையும் உணர்த்தும் பாடம் தொடர்ந்து தொடர்ந்து மக்களுக்கு நடத்தப்பட்டே தீரவேண்டும். 'சப்பா குரிசு' அப்படிப்பட்ட ஒரு பாடம் தான்.

பரிசு

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. ” மாமியாரின் அன்புப் பரிசு..”

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்.. “போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?”

மாமியார் செத்துட்டுது.. மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..” மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!
வாசகர்களின் கருத்துக்கள்  வரவேற்கப்படுகின்றன
விமர்சனங்கள்  இருந்தால்  நலம்.
போட்டுத்தாக்குங்க ....நண்பர்களே !!!!
அன்பன்
அலங்கார எஸ்  பெனடிக்ட்

கவலைகள் தீர்க்க தேர்ந்தெடுத்த தலைமை......
கவலைகளை தீர்க்காதது தவிர்க்க முடியாத உண்மை.....!!
நாடாளும் செயலுக்கு பெயர் அரசாட்சி.....
நாட்டினை முன்னேற்ற தூண்டுமா அவர்களின் மனசாட்சி....???
சலுகைகள் கூடுவது தொழிற்சாலைகளுக்கு.....
வலிகள் கூடுவது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு.....!!
தேர்தல் களத்தில் வாக்களிப்பது எங்களின் வழக்கம் ஆச்சு.....
பின்பு ஏமாற்றங்களை சந்திப்பது எங்களுக்கு பழகிப் போச்சு.....!!
ஆறம் செய்ய தேர்ந்தெடுத்தோம் ஒன்று சேர்ந்து.....
இன்று ஏமாற்றத்தில் சிரம் சாய்க்காது போகிறோம் நொந்து.....!!
வெள்ளித்திரையில் மட்டும் காண்கிறோம் அறம் செயல்....
நிஜத்தில் நாங்கள் அனுபவிப்பது அரசியல்....!!
ஓட்டுரிமை தெளிய வைக்க சீரும் பேச்சுகள்....
ஒட்டு எண்ணியவுடன் வெளிச்சமாகும் அவை காகிதங்களில்
பேனா மையில் தீட்டிய தந்திரங்கள்....!!
அறம் செயல் காண வாழ்கிறோம்....
நாடு முன்னேற ஆசை கொள்கிறோம்.....
ஆண்டுகள் கடந்தும் மாற்றம் ஏற்பட காத்திருக்கிறோம்....
என தன்னுள்ளே எழப்படும் கேள்வி பதில்களை சுமந்தபடி...
வாழும் ஜனநாயக நாட்டு ஏமாந்த மக்களின் கூற்று....!!
காதல் என்பது பெறுவது இல்லை, தருவது இல்லை. அடைவதும் இல்லை. அது... நிகழ்வது!
”நீங்க எத்தனையோ பேரைக் காதலிச்சதா சொல்றீங்க. அதெல்லாம் உண்மையான காதலா? புனிதமான காதல்னா அது நிறைய பெண்கள் மேலே எப்படி வரும்?”னு என்கிட்ட கேட்டிருக்காங்க.
அவங்க, நான் பெண்களை காதலிக்கிறதா நினைச்சுட்டு இருக்காங்க. நான் அவங்களுக்குச் சொல்ல விரும்பறது இதுதான்.
நான் காதலைக் காதலிக்கிறேன்!
’வாழ்க்கை ரொம்ப போரடிக்குங்க!’ன்னு சொல்ற யாருமே, காதலிக்க தெரியாதவங்கதான். ஏன்னா, காதலிக்க தெரிஞ்சவுங்களுக்கு வாழ்க்கை போரடிக்கிறதில்லை. அதுக்கு நானும் ஒரு சாட்சி.
காதல் புனிதமானது’ன்னு சொல்றவனுக்கு அது புனிதம். காதல் அற்பமானது’ன்னு சொல்றவனுக்கு அது அற்பம். புன்னகையோ, கண்ணீரோ.. அதை நீங்க சந்திச்சே ஆகணும். நீங்க உங்க சொல்லாலும், செயலாலும் அழகாகணுமா? காதலைத் தேடுங்க. ஏன்னா, தேடல்தான் காதல்!
ஆனா, நிறைய காதல்கள், கல்யாணத்தன்னிக்கே செத்துப்போகுது. காரணம், காதலன் புருஷனாகிடுறான். காதலி பொண்டாட்டி ஆகிடுறா. கல்யாணம் பண்ணிக்கிட்டா காதலிக்கக் கூடாதுன்னு அவங்களாவே முடிவு பண்ணிடுறாங்க. அதான் வாழ்க்கை சீக்கிரம் போரடிக்க ஆரம்பிச்சுடுது.
நாட்டுப்புற கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது. ஒரு கிழவனும் கிழவியும் தள்ளாடுற வயசுல இருக்காங்க. சாகப்போற நேரத்துக்கு முன்னால, கிழவன் தன்னோட கிழவியிடம் ஒரு வேண்டுகோள் வைப்பான்.
அந்த இருட்டுக்குடிசையில் ஒரேயொரு விளக்கை மட்டும் ஏத்த சொல்றான். எரிகிற தீபத்துக்கு பக்கத்தில் அவளோட முகத்தை வைக்க சொல்றான். ’கிழவனுக்கு கிறுக்கு புடிச்சிடுச்சு’ன்னு பிள்ளைக சொன்னாலும், கிழவன் சொன்னபடி செய்யுறா கிழவி.
வெளிச்சத்தில் அவளோட முகத்தை பார்த்ததும், கிழவன் முகத்தில் ஒரு வெளிச்சம் வருது.
”இவளும் நானும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணோம். வீடு, உறவு, ஊருன்னு எல்லோரோட எதிர்ப்பையும் மீறி கல்யாணம் பண்ணினோம். நாப்பது வருஷ வாழ்க்கை. இதோ இப்போ சாகப்போறேன்.
இத்தனை வருஷ வாழ்க்கையில், என்னை காதலிச்ச காரணத்தால, தன்னோட வருத்தங்களைக்கூட இவ எங்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம். நான் இவக்கூட எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்தேன்னு என் மனசாட்சிக்கு நல்லா தெரியும். அவ என்னோட எப்படி வாழ்ந்தாள்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.
இருட்டுக்கு நடுவில் எரியுற விளக்கு பிரகாசமா இருக்கு. விளக்கு பக்கத்தில் என் காதலியின் முகம் அதைவிடப் பிரகாசமா இருக்கு. என்னோட அவளும் சந்தோஷமாதான் வாழ்ந்திருக்கா. இந்த சந்தோஷத்தோட நான் இனிமேல் செத்துப்போவேன்”ன்னு கிழவன் சொல்றதா கதை முடியும்.
அப்படி ஒரு கிழவனா வாழக்கிடைக்கிறது ஆசீர்வாதம்!
”நீங்க எத்தனையோ பேரைக் காதலிச்சதா சொல்றீங்க. அதெல்லாம் உண்மையான காதலா? புனிதமான காதல்னா அது நிறைய பெண்கள் மேலே எப்படி வரும்?”னு என்கிட்ட கேட்டிருக்காங்க.
அவங்க, நான் பெண்களை காதலிக்கிறதா நினைச்சுட்டு இருக்காங்க. நான் அவங்களுக்குச் சொல்ல விரும்பறது இதுதான்.
நான் காதலைக் காதலிக்கிறேன்!
---
🔷தயாரிப்பு தமிழகத்தில் ஆனால் செய்முறை விளக்கம் மலையாள மொழியில் மட்டும் மேலும் மலையாள மொழியையே முதன்மையாக பயன்படுத்தபட்டுள்ளது.
✴️எத்தனையோ வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் தாயரிக்கபடுகின்றன ஆனால் சீனமொழி கட்டாயம் இருக்க வேண்டும்.
கேரளாவில் நாம் தொழில் தொடங்க்கூட அனுமதிக்க மாட்டார்கள், இடம் வீடு வாங்க அனுமதிக்க மாட்டார்கள்
கேரளா மலையாளிகளுக்கு மட்டுமே ஆனால்
தமிழ்நாடு பொதுவானது இந்திய நாட்டில் உள்ள அனைவருக்கும் அது பொதுவானது
மலையாளிகள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து கொண்டு பல்வேறு தொழில் செய்யலாம்
பிழப்பு நடத்தலாம் இன்னும் ஒரு படி சென்று நம் மண்ணில் நம் தமிழ்மொழியை புறக்கணித்து அவர்கள் மொழியையும் திணிக்கலாம்

😢மொத்ததில் தமிழர்கள் ஏமாளிகள் அதனால் தமிழர்களை எவன் வேண்டுமானாலும் சுரண்டலாம்
ஆனால் அவர் மண்ணில் தமிழர்களுக்கு எந்த ஒரு உரிமையும் வழங்க மாட்டார்கள்.
இதை தமிழர்கள் என்றுதான் புரிந்து கொள்ளபோகிறார்களோ
🔶✴️தமிழ்நாட்டில் தயாரிக்கும் எந்த ஒரு பொருளிலும் தமிழ் கட்டாயம் இருத்தல் வேண்டும் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் விற்பனை செய்யபடும் பொருகள்களில் தகவல்கள் தமிழில் கட்டாயம் இருத்தல் வேண்டும் அப்படி செய்யதவறும் நிறுவனங்களை முடக்கினால் தன்னால் வழிக்கு வருவார்கள்.✴️🔶
பிற மொழி மாநிலம் எல்லாம் தன் மாநிலம் தன் மொழி என்று இருக்கும்போது
தமிழ்நாடு மட்டும் அனைவருக்கும் பொதுவாக இந்திய நாடாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
😢தமிழர்களுக்கு ஒரு சொட்டு தண்ணிர் கொடுக்க மாட்டோம் என்று ஒரு மாநிலமே சொல்லுமானால் எந்த அளவுக்கு இனவெறியோடு இருக்கிறார்கள்
என்பது புரியும் அதுபோதாது என்று தமிழர்களை அடித்து அம்மணமாக்கி தமிழர்களின் வண்டிகளை தீயிட்டு கொளுத்தி தமிழர்கள் மேல் வன்முறைவெறியாட்டம் நடத்தினார்கள்
😢ஒரு சிறு பூனைகூட தன் இனத்தை பாதுகாக்க புலி எதிர்த்து சீறும் ஆனால் தமிழர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்
😢எட்டி உதைப்பவனின் காலை நக்கி கொண்டு அலைகிறார்கள் அதுதான் பண்பு என்று சொல்லி மூலை சலவை செய்யபட்டவனாய் அலைந்து கொண்டிருக்கிறான்
அதனால்தான்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்க முடியாது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்ப்பது எங்கள் மரபு அல்ல என்று ஒரு கூட்டத்தால் சொல்லி கொண்டு தமிழ்நாட்டில் திரிய முடியிகிறது
ரஜினி, விசால் என்று கண்ட கண்டவன் எல்லாம் தமிழ்நாட்டு அரசியலில் குதிக்க முடிகிறது.
தீட்டு’ என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்
தீட்டு என்பது என்ன?
இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது!
தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.
ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால்,தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.
தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு. இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.
தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!
1. காமத் தீட்டு:
காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.
2. குரோதத் தீட்டு:
குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர்,
கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.
3. லோபத் தீட்டு:
லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள் இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.
4. மதத் தீட்டு:
மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது. எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.
5. மாற்சரியத் தீட்டு:
மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.
தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.
இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.
* சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி,கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.
•தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.
• கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும். எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.
• பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும். தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
• தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும். குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.
• நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு,வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.
• வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சுநீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.
•காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.
மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.
• கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால்தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.
• கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீல வெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை. தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.
•புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை, ஆபரணங்கள்,பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித் தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும்.
ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால், நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.
• வெள்ளி,செவ்வாய்க் கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல், அரிசி, கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள், பதார்த்தங்கள் தரக்கூடாது.பணம், முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது. அப்படிக்கொடுத்தால்,வாங்கியவர் வளமடைவார்.
. கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும்கூடாது. அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.
•வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின்
இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி,அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது என்று ஆராய்ச்சியில்கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால்ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.
ஆலிலை ஸ்ரீகிருஷ்ணரும் அவருடைய பக்தர்களும்
**********************************************************************
ஆலிலை மேல் துயிலும் ஸ்ரீகண்ணன்தான் இவ்வுலகத்தை ஆட்டுவிக்கிறார். நம் இதயம் போன்ற வடிவுடையதுதான் ஆலிலை. ரிக், யஜுர், சாமம், அதர்வணம் போன்ற நான்கு வேதங்களும் ஆலிலையில் நான்கு பகுதிகளாகும். ஆழ்வார்களின் ஆலிலை போன்ற இதயத்தில் ஸ்ரீ பரந்தாமன் எழுந்தருளியிருக்கிறார். ஆலிலை மேல் அமர்ந்துள்ள ஸ்ரீவாஸுதேவன் இல்லாமல் இப்பேருலகில் ஒரு அணுவும் அசையாது என்பது பேருண்மையாகும். ஆலிலைமேல் உறங்கும் ஸ்ரீகோபாலன் விரும்புவது ஆழ்வார்களின் அன்பையும் பக்தியையுமேயாகும். ஆலிலைக் கோவிந்தன் நடு உச்சியில் அடர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கும் மர நிழலில் பசுக்களை இளைப்பாறச் செய்து, தன் புல்லாங்குழலில் இனிமையாக இசைத்து, பசுக்களை மகிழ்விப்பார். தானும் தன் களைப்பைப் போக்கிக் கொள்வார். ஸ்ரீ மாதவனான அந்தப் பரம்பொருளே ஏகப் பரப்பிரம்மம். மனிதர்கள் மற்றும் உயிருள்ள ஜீவராசிகளின் உறைவிடமாக உள்ளவனே ஸ்ரீகேசவன். ஆலிலையையே பரந்தாமனுக்கு, ஆதி சேஷ வாகனமாகும். ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் வாக்கே ஸ்ரீமத் பகவத் கீதையாகும். ஸ்ரீகிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது தன் கால் கட்டை விரலைச் சூப்புவது வழக்கம். தேவர்கள், தவசிரேஷ்டர்கள், முனிவர்கள், தவசிகள் என்று அனைவரும் ஸ்ரீகிருஷ்ணரின் பாதார விந்தங்களில் பணிந்து வணங்குகிறார்கள். ஸ்ரீ விஷ்ணுவின் பாதக் கமலத்தைத் தரிசித்து மகிழ்கிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர் பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் போது, அவை ஸ்ரீ கண்ணனின் கால்களையும், பாதங்களையும் நக்கிச் சுவைத்து இன்புறும். அதனால், அப்படி தன் கால் கட்டை விரலில் என்ன அமிர்தம் போன்ற ருசி, தேன் போன்ற சுவை இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவே தான் ஆலிலையில் துயிலும் குழந்தையான ஸ்ரீ கண்ணனும், தன் கால் கட்டை விரலைச் சூப்புகிறாரோ என்று ஆழ்வார்களுக்கு நினைக்கத் தோன்றியிருக்கும் ஸ்ரீவாஸுதேவன் தன் பாதவிரலைச் சூப்புவது எதனால் என்றால், பூலோகவாசிகள் அதாவது அவருடைய பக்தர்களின் மனதைக் கவர்ந்து கொள்ளவும், அவர்களின் அன்பையும், பக்தியையும் பெறுவதற்கே என்று தத்துவ ஞானிகளான தவசிரேஷ்டர்கள் கூறுவார்கள்.
வாமனவதாரத்தில் ஸ்ரீதிருமாலின் புனிதமான திருவடிகள், அவர் மூவடி அளந்தபோது, சத்தியலோகம் வரை வளர்ந்தது. ஸ்ரீபிரம்மாவும் பெருமாளின் திருவடிகளுக்கு திருமஞ்சனம் செய்து பூஜை செய்தார். ஸ்ரீ பரந்தாமனின் இடது பாதக் கட்டை விரலிலிருந்து அவருடைய மெய் பக்தர்களின் பாவங்களைப் போக்கும் ஸ்ரீபாத தீர்த்தமாக மிகப் புனிதமான கங்கை இப்பூமிக்கு வந்தது. இந்நிகழ்ச்சி பகவான் திருவருளேயாகும்.
இந்த பெருமாளின் கடலடித் தீர்த்தமே வைணவர் கோயில்களில் அமிர்தமாக பக்தர்களுக்குத் தீர்த்தப் பிரசாதமாக திருத்துழாய் சேர்த்து வழங்கப்படுகிறது. அதையடுத்து உடனே ஸ்ரீ விஷ்ணுவின் பாதார விந்தங்களின் அடியில், பெருமாளின் பாதுகையின் சம்பந்தத்தினால் என்றென்றும், ஒரு க்ஷண நேரங்கூடப் பிரியாமலிருக்கும் அற்புதத்தை பக்தர்களுக்கு எடுத்துரைக்கவே சடாரியும் சாத்தப்படுகிறது. பரதாழ்வாரால், அயோத்திக்குக் கொண்டு வரப்பட்ட, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு இராமப் பாதுகைகள் அயோத்தி நகரைப் பதினான்கு வருடங்கள் ஆட்சி செய்தன. ஆகையினால் ஸ்ரீதிருமாலின் பாதுகைகளும் பகவான் பாற்கடல்மேல் துயில் கொள்ளும் ஆதிசேஷனும், பன்னிரு ஆழ்வார்களும் ஒரே தத்துவமாகி ஆலிலையாக ஆதி காலந்தொட்டே என்றென்றும் நமக்கு அருள்மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. இவற்றிலிருந்து, ஆலிலைமேல் துயின்று புவனம் அனைத்தையுமே ஆட்டுவிக்கும் சிறு குழந்தை கண்ணனின் வைபவம் பக்தர்களால் அளவிட்டுக் கூறிட இயலாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் நமக்குத் தெளிவாக விளங்குகிறதல்லவா?
பொழுது உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தது. புங்கமரத்து நிழலில் அமர்ந்திருந்த நாளிமுத்தன் மீண்டும் ஒருமுறை பாதையை எட்டிப் பார்த்தான். யாரும் வருவதாகத் தெரியவில்லை. தூரத்தேயிருந்த மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து ஊர்த்திருவிழாவில் பெருங்குரலெடுத்து ஊதும் சங்குச்சத்தம் காற்றில் கலந்து வந்தது.
அவனுக்கு முன்னால் கீறப்பட்டிருந்த பதினெட்டாங்கரத்தின் கோடுகளை வெறித்துப் பார்த்தான்.
ஒவ்வொரு அமாவாசை நாளிலும் அவனும் சேக்காளிகளும் அந்தப்புங்கமரத்துக்கு வந்துவிடுவார்கள். அந்திசாயும் வரை ஆடுபுலி ஆட்டம்தான். அதில் நாளிமுத்தன் மகா கெட்டிக்காரன். அவனுக்குச் சரியான போட்டி நஞ்சுமல்லன்தான். அவர்கள் இருவரும் ஆடாகவும், புலியாகவும் மாறிமாறித் தங்களது காய்களைக் கணக்குப் போட்டு நகர்த்தும் அசைவுகளை ஆரவாரத்துடன் கொண்டாடிக் களிப்பார்கள் சேக்காளிகள். அந்தி சாயும்வரை ஆட்டம் கூச்சலும் கும்மாளமுமாக இருக்கும். இன்றைக்கு எல்லாப்பயலுகளும் திருவிழாவுக்குப் போய்விட்டார்கள் போல..
உச்சிவெயில் புங்கமரக்கிளைகளின் இடுக்குகளில் புகுந்து அவனது கருத்த திரேகத்தில் சூடாய் இறங்கியது. சரி நாமும் இனி திருவிழாப்பக்கம் போக வேண்டியதுதான் என்ற நினைப்புடன் மெல்ல எழுந்தான்.
“என்ன முத்தனாரே எழுந்திட்டீங்க..?” என்று குரல் கொடுத்தவாறு எதிரில் வந்து கொண்டிருந்தார் வையப்ப பண்டிதர்.
பண்டிதர், அந்த ஊரின் பிரசித்திபெற்ற முடிஅலங்காரக் கலைஞர். அதுமட்டுமல்லாது கவிதைகள் பாடுவார், வெண்பாக்கள் புனைவார். யாருக்காவது காலில் முள்தைத்து விட்டால் அதை கவிதைகள் பாடியே சொக்கவைத்து வலிதெரியாது எடுத்து விடுவதில் வல்லவர்.
“வணக்கம் பண்டிதரே... என்ன இந்த வழியாக...?” என்று முகமன் கூறினான் முத்தன்.
“ஆமாம் அய்யா... நம் நாகசங்கனுக்கு முகவேலை செய்து வந்தேன்... நீங்கள்?”
“ஆடுபுலி ஆட்டம் விளையாட சேக்காளிகளுக்காய் காத்திருந்தேன் யாரையும் காணோம்...”
“ஓ... அப்படியா...” என்றவர் புங்கமர நிழலுக்குள் நுழைந்து ஆட்டத்தின் கோடுகளைக் கவனித்தார், அவர் முகம் சட்டென மலர்ந்தது.
“வாருமே நாம்தான் அதை விளையாடிப் பார்ப்போம்...” என்று தனது கக்கத்தில் வைத்திருந்த அடைப்பத்தைக் கீழே வைத்துவிட்டு ஆட்டக்கோடுகளின் முன் உட்கார்ந்தார் பண்டிதர்.
“நீங்கள் அங்கு அமரக்கூடாது. அது வலங்கைச்சாத்தர்கள் அமரும் இடம்...”
“ஆட்டத்தில் வலங்காரம் இடங்காரம் இல்லையென்று, பாண்டவ கதையின் கர்ணபர்வத்தில் பாடப்படுவதை நீங்கள் கேட்டதில்லையா...?” என்று கால்களைச் சம்மணமிட்டு உட்கார்ந்தவாறே ஏறிட்டு நோக்கினார் பண்டிதர்.
முத்தன் பதிலெதுவும் தோன்றாமல் மூன்று புலிக்காய்களை எடுத்துக்கொண்டு ஆடுகளுக்குரிய 18 காய்களை பண்டிதரிடம் ஒப்படைத்தான்.
“ம்... சரி, பந்தகத்தொகை வையுங்கள் பண்டிதரே...” என்றபடி ஒரு புலிக்காயை ஆட்டத்தின் கோபுரத்தில் வைத்தான் முத்தன்.
“பந்தகமா...? நாமாடுவது சூதல்லவே.. பொழுது கழிவதற்குத்தானே..” என்று சிரித்தார் பண்டிதர்.
“பண்டிதரே, ‘ஆட்டமென்று வந்துவிட்டால் சூதும்வாதும் வேண்டுமால் சிறிதே..’ என்று அதே கதையின் பகடையாட்டத்தில் சொல்கிறார்களே.. உங்களக்குத் தெரியாதா..?”
“ஆஹா ஆஹா ஈது யாருடைய செய்யுள்...?”
“அதுவொன்றும் அறியேன்... உங்களைப்போன்ற பண்டிதர்கள் உதிர்த்த சொற்களில் கொஞ்சம் என்னிடம் தங்கிவிட்டது...”
“ஆனாலும் உமக்கான சொற்களை மட்டுமே பிடித்து வைத்திருக்கிறீரய்யா...”
இருவரும் கலகலவென்று சிரித்தார்கள்.
பண்டிதர் தனது கையிலிருந்த ஆடுகளுக்கான காய்களில் ஒன்றை ஆட்டக்கட்டத்தில் வைக்கக் கையை நகர்த்தினார்.
“முடியாது பண்டிதரே.. ஆட்டத்திற்கான பந்தகத்தொகையை வைத்துத்தான் துவங்கவேண்டும்...” என்று தடுத்தான் முத்தன்.
“கையில் ஓரணா கூட இல்லையே அய்யா...” என்றார் வெறுமையாய்.
“கதைவிடாதீர்.. இப்போதுதானே முகவேலை செய்து வருகிறீர்..?”
“அதுசரி.. பணி முடிந்ததும் கனி கொடுப்பவர்கள் எத்துணை பேர்...”
வரகுத் தண்டின் கோந்தாழையை மெல்லுவது போல சப்பென்றாகிவிட்டது முத்தனுக்கு. சரி ஆட்டத்தை நிறுத்தி விடலாமென்பதுபோல யோசித்தவனின் மனதைக் கண்டு கொண்டவர், மேற்கொண்டு பேசலானார்,
“முத்தனாரே உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில்... என்னிடம் ஒரு சொல் இருக்கிறது. அதைப் பணயமாக வைப்போம்...” என்றார் தயங்கியபடியே.
“சொல்லா...?”
“ஆம், நானே இயற்றிய வடிவான சொல்”
நாளிமுத்தனுக்கு அது வேடிக்கையாக இருந்தது. அப்படி ஒரு வினோதமான பந்தகத்தை அவன் வாழ்நாளிலும் கேள்விப்பட்டதேயில்லை. அதேசமயத்தில் அந்தப் பந்தகத்தினுள் இருக்கும் புதிர் அவனுக்குள் ஒரு ஆவலையும் சவாலையும் தூண்டிக் கொடுத்தது.
இனம்புரியாத உத்வேகத்தில் தலையை அசைத்தவாறு ஆட்டத்தில் இறங்கினான் முத்தன்.
கடகடவென்று 18 ஆடுகளையும் ஆட்டக்களத்தில் நிறுத்தினார் பண்டிதர். ஆனால் அந்தக்கட்டுக்குள் முத்தனின் புலிகள் அகப்படாமல் தறிகெட்டு ஓடின. தாவித்தாவிப் பண்டிதரின் ஆடுகளைத் தின்று தீர்த்தன. பண்டிதரும் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு என்னென்னவோ செய்து பார்த்தார். இறுதியில், நாளிமுத்தனின் வெற்றியில் சிரித்தது ஆட்டம்.
பண்டிதர் தனது சொல்லைக் கொடுத்துவிட்டு ஆயாசத்துடன் எழுந்தார். முகம் முழுவதும் சாரமிழந்து நெற்றிச்சுருக்கங்கள் பிரிந்தோட, மெல்ல மேற்குப்பக்கமாக நடந்தார்.
முத்தன் அவர் எதையோ தொலைத்தபடி பேசாமல் போவதையே வியப்புடன் பார்த்தவனாய், அந்தச் சொல் பற்றிய உருவமற்ற உருவகத்தை வேடிக்கையாய் உணர்ந்தான். அந்த அங்கதத்தை மேலும் பரிசோதித்துப் பார்த்துவிடுவதென்று வாணிபத்தெருவை நோக்கி நடந்தான்.
வாணிபத்தெரு மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. பல்வேறுபட்ட அங்காடிகளில் சனங்கள் குழுமி நின்று செலவு செய்து கொண்டிருந்தனர். கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை போன்ற உணவுத் தானியங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்த அங்காடிக்குள் நுழைந்தான் முத்தன். உரிமையாளனிடம் மெதுவாகத் தயங்கியவாறே அருகில்சென்று ‘தன்னிடம் ஒரு சொல் இருப்பதாகவும் அதை வைத்துக் கொண்டு ஒரு ஆழாக்கு வரகு வேண்டுமென்றும்’ தெரிவித்தான். அவன் கேட்டது அங்காடிக்காரனுக்கு ஏதும் புரியவில்லை. ஒருவழியாய்ப் புரிந்தபோது, முத்தனை இகழ்ச்சியுடன் நோக்கினான். பைத்தியத்தை வெளியில் துரத்தியடிக்கும் வெறுப்புடன் பணியாளை அழைத்து அவனை வெளியேற்றச் சொன்னான். முத்தன் அவமானத்துடன் வேறொரு அங்காடிக்குள் நுழைந்தான்.
அளம், ஆபரணம், வளையல், மாடுகட்டும் தளைக்கயிறு, வரகு கிள்ளும் கம்பரகத்தி என்று பல்வேறு அங்காடிகளுக்குள் நுழைந்து பார்த்தான். அவனை அடிக்காத குறையாக கழுத்தை நெட்டி வெளியே தள்ளினர்.
ஆத்திரத்தாலும், அவமானத்தாலும் குன்றிப்போனவனாய் நிராதரவாக வாணிபத்தெருவில் திக்கில்லாமல் நடந்தான். தன்னிடம் உள்ள சொல் வாணிபத்திற்கு உகந்ததல்லவா என்று எண்ணமிட்டான். வேடிக்கையாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் பட்டது. சனங்களின் அங்காடி இரைச்சல்கள் செவிப்பறைகளில் மோதியறைந்தன.
அந்தத் தெருவின் ஓரத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ஒரு கிளிக்காரன் பச்சைக்கிளிகளை இரண்டிரண்டாகப் பரப்பி வைத்து ‘ஒரு பணத்துக்கு ஒருகிளி’ என்று கூவிக்கொண்டிருந்தது கவனத்தைக் கவர்ந்தது. இறகு பிடுங்கப்பட்ட கிளிகள் கீக்கி என்று ரெக்கைகளை அடித்துக் கொண்டு எழும்பிக் கீழே விழுந்து நடைபயின்று கொண்டிருந்தன. அவனருகில் சென்று கிளிகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த முத்தன், மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
அந்தத் தருணத்தில் ‘ஹோயோ... ஹோயோ...’ என்று ராகமொலிக்கும் கூட்டுக்குரல்கள் கேட்டன. சட்டென வாணிபத்தெரு பரபரப்படைந்தது. சனங்கள் இங்குமங்கும் பதட்டத்துடன் ஓடினர். அங்காடிகளில் செலவு செய்து கொண்டிருந்தவர்கள் வீதியில் இறங்கி இருமருங்கிலும் குழுமி நின்று எதையோ எதிர்பார்க்க ஆரம்பித்தனர்.
அந்த வீதியின் முனையில் ஒரு சிவிகை தோன்றியது. அது புகழ்பெற்ற கணிகையர் பெண்ணான மாணிக்கியின் வருகை. ராகம் பாடிக்கொண்டே சிவிகை நெருங்க நெருங்க அந்த வீதியே அல்லோல கல்லோலப்பட்டது. வீதியின் உப்பரிகையிலும் மேல்மாடத்திலும் பெண்கள் கூட்டம் அம்மியது. சிவிகை தூக்கிகள் ராகம் பாடிக்கொண்டு நடக்க நடக்க, அந்திக்காத்தின் அலையடிப்பில் சிவிகையின் திரைச்சீலை விலகி உள்ளே இருக்கும் முழுநிலவு முகம் தென்படாதா என்று படபடக்கும் இதயத்துடன் கண்ணிமை சிமிட்டாமல் பம்மிக் கிடந்தனர் சனங்கள்.
கீக்கி எனும் கிளிகளின் கிள்ளை அந்தச் சிவிகையை அடைந்து அவளை உசுப்பியது. மெல்லிய சல்லாவின் வழியே கிளிகளின் ரெக்கையடிப்பைப் பார்த்ததும், அவளது கரங்கள் அசைந்து சிவிகையின் வேகத்தை நிலைப்படுத்தின. சிவிகையின் பின்னே ஓடிவந்த தனது பெண்பணியாளை நோக்கி சமிக்ஞை செய்தாள்.
அந்தக் கணமே கிளிக்காரனிடம் ஓடினாள் பணியாள். நாளிமுத்தன் இந்தப் பரபரப்புகளில் எதிலும் தலைப்படாமல் எப்படியும் ஒரு கிளியையாவது வாங்கிச் சென்று விடவேண்டும் என்று மன்றாடிக் கொண்டிருக்க, அங்கு வந்த பணியாள் கிளியை வாங்க, இடையில் புகுந்து முத்தன் மன்றாட, வணிகத்திற்கு இடையூறாய் இருப்பவனைக் கிளிக்காரன் நெட்டித் தள்ள மல்லாந்து விழுந்தான் முத்தன்.
கிளிக்காரனை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு புழுதியைத் துடைத்தபடி தள்ளி நிற்கும் முத்தனைப் பார்த்தபடி நான்கு கிளிகளை வாங்கிக் கொண்டு சிவிகையிடம் போனாள் பணியாள்.
கிளிகளைப் பெற்றுக் கொண்ட மாணிக்கி, ‘என்ன தகறாறு..?’ என்று விசாரித்தாள். பணியாள் நாளிமுத்தன் வியவகாரத்தைப் பற்றிச் சொன்னதும் ஆச்சரியமடைந்தவள், சிவிகையை இறக்கி வைக்க ஆணையிட்டாள். சிவிகை கீழே வைக்கப்பட்டதும் அந்த இடத்துக்கே உன்மத்தம் பிடித்தது போல சனங்கள் கட்டுக்கடங்காது குழுமினர். சிவிகை தூக்கிகள் சனங்களைக் கட்டுப்படுத்த திரைச்சீலையை விலக்கிக்கொண்டு வெளியே காலெடுத்து வைத்தாள் மாணிக்கி. தன் வாழ்நாளில் அப்படியொரு அழகைப் பார்த்ததில்லையென, தங்களது சென்மம் சாபல்யம் அடைந்து விட்டதாக மருகினர். பௌர்ணமி நிலவெடுத்துச்செய்த அவளது முகமும், கிறங்கடிக்கும் கண்களும், தலைவழியே இறங்கி நிலத்தைத் தொடும் அளகபாரமும், அவ்விடத்தை அலைபாய்த்தது. முகத்தைக் கப்பியபடி உடலெங்கும் இறங்கியிருந்த மெல்லிய சல்லாவின் வழி மறைபடாத திரண்ட கொங்கைகளின் கூர்வாளில் சிக்கிய சனங்கள் மாய்ந்து போயினர். வலதுபுறக்கொங்கையின் மேல்புறத்தில் சூலம் பொறிக்கப்பட்டிருந்தது. அவளது பால்வெண்மை மாறா உடலில் அந்த அச்சின் கருத்த கோடுகள் நீங்கமுடியாத தளையைப்போல அவளுக்குள் இறங்கியிருந்தது.
நாட்டிய அடவுகளின் நளினத்துடன் நாளிமுத்தனின் அருகில் சென்று, “இன்றிரவு என் இல்லத்திற்கு உங்களிடம் உள்ள அந்த சொல்லைக் கொண்டு வாருங்கள்... என்னுடன் ஓரிரவைக் கழித்து வரலாம்...” என்று ஒரு காந்தப் பார்வையை வீசிவிட்டுத் திரும்பி வந்து சிவிகையேறிக் கொண்டாள்.
‘ஹோயோ...ஹோயோ..’
சற்றைக்கெல்லாம் அங்கு குழுமியிருந்த சனங்கள் முத்தனைச் சூழ்ந்து கொண்டனர். கூட்டத்தை முட்டிப்பிளந்து கொண்டு அவனை வந்தடைந்த ஒரு பருத்த மனிதர், அவனிடம் நைச்சியமாகப் பேசினார். தான் பத்து வராகன் தருவதாகவும் அந்தச் சொல்லைத் தனக்குத் தந்து விடுமாறும் இறைஞ்சினார்.
பத்துவராகனா?
நாளிமுத்தனுக்குக் கண்கள் அகல விரிந்து கொண்டன. அப்போது அவனிடம் வந்து நின்ற மற்றொருவர், தான் இருபது வராகன் தருவதாகச் சொன்னார். சட்டென்று அவ்விடத்தில் ஒருபதற்றமான அலை தீயெனப் பற்றிக் கொண்டது. மாணிக்கி கணிகையின் உடலில் பற்றியிருந்த பெருநெருப்பு அது. 30, 40 என்று உயர்ந்து வந்த ஏற்றத்தை தடாலடியாய் ஒரு குரல் உடைத்தெறிந்தது:
“100 வராகன்”
அந்த இடம் விரல் நொடிப்பில் உறைந்துபோக முத்தனுக்குச் தலைசுற்றியாடியது. மறுபடியும் அந்த இடம் கொதித்துச் சூடேற 200, 300 என்று குரல்கள் உயர்ந்தன. முத்தனின் உடல் அந்தரத்தில் பறந்தது. இடிஇடிப்பது போல ஒருகுரல் முழங்கியது:
“1000 வராகன்”
நாளிமுத்தனை யாரும் பிடித்து வெளியில் தள்ளாமலேயே அந்தத் தெருவை விட்டு ஓடஆரம்பித்தான்.
அன்று இரவு நாளிமுத்தன் மாணிக்கியின் இல்லத்திற்குப் போனதும், அவள் அவனுக்காகவே வழிமேல் விழிவைத்துக் காத்திருந்து கைலாகு கொடுத்து அழைத்துப்போய் தனது சந்தனப் பொய்கையில் நீராட்டி, அவனது உடலின் அகில் புகை தூவி சப்பிரகூடமஞ்சத்தில் சீராட்டி, தனது உடலிலிருந்து கமழ்ந்த சுகந்த மணத்தைச் சுவாசிக்கக் கொடுத்து, தனது தேவஉடலில் அவனை உறவாடிக்களிக்க வைத்து ஏழேழு சென்மங்களுக்கும் போதுமென்று முத்தன் மாய்ந்து போனதும் நடந்தேகியது.
அதன்பிறகு முன்பு போல ஆட்டத்திலோ பணியிலோ நிலைகொள்ளாமல் ஒவ்வொரு நாளும் தான் கண்டது கனவா நனவா என்ற மயக்கத்திலும் கிறக்கத்திலும் காலவழுவமைதியில் கிடந்தான் நாளிமுத்தன். தனது உடலில் மிச்சமிருந்த மணத்தை அப்படியே தேக்கி வைத்திருக்க குளிக்காமலும் வெயிலுக்குக் காட்டாமலும் பொத்திப் பொத்திப் பேணினான். உடலையும் எண்ணங்களையும் முகர்ந்து கொண்டே காடு மலை வனந்திரங்களென்று கால்போன போக்கில் அலைந்து திரிந்தான். பௌர்ணமியின் முழுநிலவு தேய்பிறையாய் கழிவது போல அந்த மணம் தேய்ந்து கொண்டே போவதில் சூன்யத்தில் புகுந்து மனம் வெம்பிக் கிடந்தான் முத்தன்.
அப்படியான ஒருநாளில் வையப்ப பண்டிதர் வழியில் சந்தித்துக் குசலம் விசாரித்தார். நடந்தவைகளையெல்லாம் அவரிடம் சொல்வதா வேண்டாமா என்று ஒருகணம் பொங்கியவன் மறுகணம் அமைதியானான். பல்வேறு வியவகாரங்கள் குறித்துப்பேசிய பண்டிதர், “உங்களுக்குச் சேதி தெரியுமோ முத்தனாரே... மாணிக்கி என்னும் பொதுமகள் நனது நாட்டிய விருந்தில் கலந்து கொண்ட அரச காரியஸ்தர்கள் 18 பேரைக் கொன்றொழித்துவிட்டுத் தானும் தலைமறைவாகிப் போனாள்... அவளைப்பற்றித்தான் நாடுமுழுக்கச் சேதிபரவுகிறது...” என்று சொல்லிவிட்டு விடை பெற்றுச் சென்றார்.
நாளிமுத்தனுக்கு ஒரேயடியாய் உடலும் உள்ளமும் குன்றிப் போனது. நாலாப்புறத்திருந்தும் பாலைக்காற்று வீசிச் சுழட்டியடித்தது. தலை மீது ஒரு பெரிய பாறாங்கால் அமுக்கியது. மேலும் ஓரடி எடுத்து வைப்பதற்குக்கூட முடியாது தடுமாறின கால்கள். அருகிருந்த சுமைதாங்கிக் கல்லின்மீது தனது சுமைகளை இறக்கி வைத்து அமர்ந்தான்.
அப்பொழுது செம்மண் புழுதியைக் கிளப்பிக் கொண்டு அந்தப் பாதையில் புரவி ஒன்று விரைந்து வந்து அவனருகில் நின்றது. தலையில் உருமாலாய்க்கட்டியிருந்த சுங்குப்பகுதியில் முகத்தை மறைத்தபடி அமர்ந்திருந்த குதிரையோட்டி, “அய்யா வேங்கை மங்களத்திற்குச் செல்லும் வழி எவ்வழி...?” என்று வினவ, அந்தக்கண்களின் வீச்சை தான் எங்கோ கண்டிருப்பதாக ஞாபகங்களில் தேடிக்கொண்டே, வழியைச் சுட்டிக் காண்பிக்க, இறுக்கியிருந்த கடிவாளக்கயிறு சுண்டியது.
அத்திசையில் கனைப்பொலியுடன் பாய்ந்தது பரி.
பாய்ச்சலின் எதிர்க்காற்றில் குதிரையோட்டியின் உடல் மீது கப்பியிருந்த கறுத்த அங்கி விலகிப்பறக்க பெண் உடலின் அம்சங்கள் எதிர்ப்பட்டன. வியப்புடன் நோக்கும் அவனது கண்களில் பட்டது, அவளது வலது மார்புப் பகுதியின் மேல் பொறித்திருந்த அச்சுக்குறியை தீயால் கருக்கி அழிக்கப்பட்டிருந்த தசைக்கோளம். காற்று வேகத்தில் கடுகியது புரவி.