Tuesday 27 February 2018

இயற்கை

நதி வட்டப்பனையோலைத்
தடுக்குகளை முடைகிறது
கர அலையால்..

மரம் கலைத்துக் கலைத்து
சீட்டுகளாய் வீசுகிறது
கொத்து கொத்து இலைகளை..

வானில் உலவும் நிலா
வெள்ளிக்கிண்ணமாய்க் கவிழ்கிறது
ஓடும் புனல் நதியில்

சில்வண்டுகள் ஒளிந்திருந்து
மீட்டிக் கொண்டிருக்கின்றன
இசைக் கோர்வையை ..

கோட்டான்கள் உச்சஸ்தாய் ஓசையில்
ஆக்குகிறது நெளிக்கோலங்களாய்
நீர் நிரம்பிய குளத்தை..

துருவன் இருக்கும் இடம் மாறாது
நோக்குகிறான் அச்சில் சுழலும்
அகண்ட பூமியை..

No comments:

Post a Comment