Wednesday 21 February 2018

நானிலம்

இந்தியாவின் வேறெந்த மொழிக்கும் இல்லாத பெருமை என்று நான் கருதுவது, மனிதகுல
வரலாற்றின் தொடக்கக் காலச் செய்திகளை உடைய மொழி தமிழ்மொழி ஒன்று மட்டுமே என்பதே
ஆகும்.





உதாரணமாக


மனிதகுல
வரலாறு கூறுவோர், மனிதனின் ஆதி வரலாற்றை நான்கு வகை வாழ்க்கையாக வகுத்துச்
சொல்கிறார்கள் -


(1)  
உணவு தேடும் நிலை


(2)  
வேட்டை நிலை


(3)  
உணவு பயிரிடும் நிலை


(4)  
உபரி கண்டு வணிகம்
தோன்றிய நிலை


இவை நான்குமே தமிழ் இலக்கணத்தில் வரும்

(1)  
குறிஞ்சி – உணவு தேடும்
மலைசார்ந்த மக்கள் நிலை


(2)  
முல்லை –
வேட்டையாடும் காடுசார்ந்த வாழ்க்கை


(3)  
மருதம் – உணவு பயிரிடும்
வயல்சார்ந்த வாழ்க்கை


(4) நெய்தல் – வணிகம் (உபரி)கண்ட கடல்சார் வாழ்க்கை

என இதனைச் சொல்லலாம். ஐந்தாவதான பாலை தமிழ்நாட்டில் இல்லை என்பதாலேயே
பாலை தவிர்த்த நான்கு நிலத்தையுமே “நானிலம்“ என –உலகமெனும் பொருளில்- சொல்வதுண்டு.
(பின்னர் மற்ற இடங்களில் பாலை இருப்பதால், ஐந்து நிலப்பிரிவுகளாகத் தமிழர்
சொல்வாராயினர்)

No comments:

Post a Comment