Saturday 10 December 2016

தனித்திருந்து
வானம் பார்க்கும் இரவுகளில்
சட்டென்று விழும்
எரி நட்சத்திரமோ...!
யாருமற்ற ஒரு நாளில்
பின்புற கொல்லையில்
இறகு உதிர்த்து சென்றிருந்த
பறவையோ...!
முற்றத்தில் ஓடும் நீரில்
படகுவிட ஆளில்லா
வெறுமையைத் தந்த
ஒரு மழையோ...!
விழாவற்ற ஒரு நாளில்
தெருவில் ஆடிஅசைந்து
ஆசீர்வதித்து வந்துகொண்டிந்த
ஒரு யானையோ...!
புல்வெளிகளில் காத்திருக்கையில்
அங்கு சிறகடித்துவரும்
வண்ணங்களில் வசப்படுத்தும்
ஏதோ ஒரு பட்டாம்பூச்சியோ..!
சப்பதங்களற்ற
ஒரு ‌ஏகாந்த வேளையில்
வீற்றிருந்த என் நினைவை
எழுப்பிவிட்டு போகும் ஒரு குயிலோ..!
இன்னும் எதுவெதுவோ
வந்துப்போகிறது ஞாபக சுவடுகளாய்
அவள் இல்லது தவிக்கும்
என் தனிமைகளில்...!

No comments:

Post a Comment