Saturday 10 December 2016

மண்டை ஓட்டின் மதிலைத் தாண்டாது, 
ஒண்டிக் கிடக்கும் 
ஓய்ந்து போன மூளை 
உறங்கி உறங்கி ஊறுகாய் ஆகும்! 
ஓய்வு உடலுக்கு! ஆத்மாவிற் கில்லை! 
இறைக்காத கிணறு தூண்டாத மனது!
இறைத்த கிணறு நீர் ஊறும்!
இறைக்காத கிணறு வேர் நாறும்!
விழித்த கண்தான் ஒளிவீசும்!
வீறிடும் நெஞ்சம் விண்வெளி செல்லும்!
வேட்கை மில்லா காளை,
வேட்டை ஆடா மூளை,
ஆர்வம் மழுங்கிய கூர்மை!
நெடுந் தூரம் செல்லா கால்கள்,
நிலவைப் பற்றாக் கரங்கள்,
பயணம் செய்யாப் படகு,
பணிகள் செய்யா உடலும்
பாரில் உலவுதல் ஏனோ?

No comments:

Post a Comment