Monday 12 December 2016

மழை-
விவசாயிக்கு பருவ காலத்தில்
சந்தோஷத்தையும்...
அறுவடை காலத்தில்
வருத்தத்தையும் கொடுக்கும்...
மழை-
குடை விற்பவனுக்கு
சந்தோஷத்தையும்...
உப்பு விற்பவனுக்கு
வருத்தத்தையும் கொடுக்கும்...
மழை-
பள்ளிக் குழந்தைக்கு
சந்தோசத்தையும்
பெற்றவளுக்கு
வருத்தத்தையும் கொடுக்கும்...
மழை-
எருமைக்கு
சந்தோஷத்தையும்
பசுவுக்கு
வருத்தத்தையும் கொடுக்கும்...
சிலருக்கு சந்தோஷத்தையும்
சிலருக்கு வருத்தத்தையும்
கொடுக்கும் மழை...
அது
சாரலோ....
தூறலோ...
பெருமழையோ
எதுவாகினும்
ஒரு மழை நாளில்
மலர்ந்த நம் காதல்
நினைவுளை
நீர்க்குமிழிகளாய்
நீந்த விடுவதால்...
எப்போதும் வேண்டுமடி
மழை எனக்கு..!

No comments:

Post a Comment