Thursday 5 January 2017

ஆண்களை இரசிக்கும் பெண்கள்



அழகு என்பது  அழியும் கோலம்
இளமையில் அதுவே அழியாத ஜாலம்
அழகை ஆராதிப்பது  ஆரணங்குகளின்
அனுதின போகம் அது ஒரு யாகம்
இளமையின் வனப்பு வடிவாய்
மதுவென  பொங்கி அங்கம்  எங்கும்   
பொழியும் இனிய பருவம் தனில்
மூழ்கிக் களித்திடும்  ஏக மோகம்
உண்டு எல்லாப் பெண்ணுக்கும்.......
காலையின் விடியல் ஒளியில்
கோலம் போடும் வேளை தனில்
காளை அவன்  பார்வை வரம் ...
கண்ணும் கண்ணும் கலந்து பேசும்
கதைகள் ஓராயிரம் தினமும்  
காளையும் கன்னியும் தமை மறந்து
 களி கொள்ள அது பொற்காலமே    

காதலின் அளவு  ஒரு முழு வட்டம்
இளமை துள்ளலுக்கு வானமே எல்லை
எல்லையே இல்லை மனித காதலுக்கு!!!
காதல் இங்கு இல்லை எனில்
பூமியும் புல்லும் ஏதும்  இல்லை  
இரகசியமாய்  அழகை இரசிப்பதும் 
இதயம் தந்து இளமை  துடிப்பதும்
காளை அவன் நடை உடை பேச்சு
அலங்காரம் யாவுமே அவளை  
ஈர்த்து இம்சை செய்யும் வேளை
மனம் ஊமைக் குயிலாய் கூவும் .....  
ஆதாம் ஏவாள் தொடக்கம் முதல்
உலகில் அது தொடரும் கதை  
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள ஈர்ப்பு
அதுவே பூவுலகின் அன்றாட உயிர்ப்  பூ
அவன் அவள் அது – இதுவே
நியதி  தொடரும் மனித வாழ்விலே !!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment