Sunday 1 January 2017

கோயிலுக்குப் போனால் இடி தாக்காது

மன்னராட்சி நடந்த காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம்.
என்ன காரணம் தெரியுமா?
கோயில்களின் உயரமான கோபுரங்களையும் அதில் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு ஆன்மீக வால்யூ உண்டா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் தெரியும்.
அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
ஒரு ஏரியாவில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது.
கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.
அதெப்புடி என்று கேட்கிறவர்கள் கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.
temple
சமீபத்தில் மும்பை போயிருந்த போது முப்பது மாடி, முப்பத்தைந்து மாடி குடியிருப்புக்கள் நிறைய பார்க்க முடிந்தது. முப்பத்தைந்தாவது மாடியிலிருந்து கோபுரக் கலசமே புளிப்பு மிட்டாய் சைசில்தான் தெரியும்!

No comments:

Post a Comment