Thursday 5 January 2017

1. ஜனக மகாராஜனுடைய மந்திரியின் பெயர் என்ன?
2.லெட்சுமனன், பரதன். சத்ருக்னன் ஆகியோரின் மனிவியர் பெயர் என்ன?
3.ராம சேது எனப்படும் கடல் பாலம் அமைத்த பெருமை யாரைச் சாரும்?
4.சீதை எந்த நாட்டு இளவரசி? அந்த நாட்டின் தலை நகரம் எது?
5.ராவணனுடைய தாய் தந்தையர் யார்?
6.ராவணனுடைய மந்திரிகள் பெயர் என்ன?
7.வாலி, சுக்ரீவர்களுடைய தந்தையின் பெயர் என்ன?
8.ராமாயணத்தில் சத்ருக்னனுக்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது?
9.சீதையைக் கண்டு பிடிப்பதர்காக சுக்ரீவனிடம் நட்புகொள்ள வேண்டிய அவசியத்தை ராமனுக்கு சுட்டிக்காட்டியவன் யார்?
10.வாலி, சுக்ரீவர் மனைவியர் பெயர்கள் என்ன?
11.வாலி, அர்ஜுனன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
12. லெட்சுமணனிடம் ஒருதலைக் காதல்கொண்ட ஒரு பெண் சூர்ப்பநகை. மற்றொரு பெண் யார்? எங்கே நடந்தது?
13.தசரதர் ஏற்பாடு செய்த புத்ர காமேஷ்டி யாகத்தை முன்னின்று நடத்தி வைத்த முனிவர் யார்?
14.ராம,லெட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நட்சத்திரங்கள் எவை?
15. அவர்களுடைய லக்னங்கள் அல்லது ராசி என்ன?
16. ராமர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்?
17.ராமர் வாழ்வில் எண் 2, 7, 14 ஆகியன மறக்க முடியாதவை .ஏன்?
தமிழ்பிராமின்.காம் திரு. சமரபுங்கவன் தொகுத்த மேலும் சில கேள்விகள் இதோ:-
18.வால்மீகியின் கூற்றுப்படி தசரதனுக்கு ஒரு பெண் உண்டு. அவள் பெயர் என்ன?
19.தண்டகாரண்யத்தில் ராமர் சந்தித்த அகத்திய முனிவரின் தம்பி பெயர் என்ன?
20.ஜடாயுவின் சகோதரர் பெயர் என்ன?
21.அனுமனின் தந்தை யார்?
22.ராவணன் எந்த ரிஷியின் வம்சத்தில் வந்தவன்?
23. ரிஷ்யமுக பர்வதத்தில் வாலி நுழையமுடியாதபடி சாபம் இட்ட முனிவர் யார்?
24.கைகேயியின் தந்தை யார்?
25.ரிஷ்யஸ்ருங்கருக்கும் தசரதருக்கும் என்ன உறவு முறை?
26.வசிஷ்டரின் மகனிடம் சீதாதேவி எல்லா நகையையும் கொடுத்துவிட்டு கானகம் சென்றாள். யார் அந்த மகன்/ முனிவர்?
27.ராமர் கொடுத்த பாதுகைகளை பரதன் எங்கே வைத்து பூஜை செய்தான்?
28.ராமரிடம் காட்டும்படி அனுமனிடம் சீதை கொடுத்த நகை எது?
29.இந்திரஜித்தையும், கும்பகர்ணனையும் போரில் யார் கொன்றார்கள்?
30.வாலியின் மகன் பெயர் என்ன?
விடைகள்:
1.சதாநந்தர் 2. முறையே ஊர்மிளை, மாண்டவி, ஸ்ருகீர்த்தி 3. நளன் நீலன் ஆகிய வானர சகோதரர்களை 4.விதேஹ நாட்டின் இளவரசி, தலை நகர் மிதிலை 5.விஸ்ரவஸ் என்ற முனிவர், கைகசி என்ற அரக்கி 6.மகோதரன், மால்யவான் 7.ரிக்ஷராஜன் 8.மது என்ற அரக்கனின் மகனான லவணாசுரனைக் கொன்று அவனுடைய மதுராபுரியை ராமராஜ்யத்தில் சேர்த்தான் ராமன். பிறகு அதற்கு அரசனாக சத்ருனனை பட்டம் சூட்டினான்.9.கபந்தன் என்னும் அரக்கன் 10.தாரா, ருமா 11. இருவரும் தேவேந்திரனின் அருளால் பிறந்தவர்கள் 12.அயோமுகி என்னும் அரக்கி, மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில் 13.ரிஷ்யஸ்ருங்கர் 14.ராமன்—புனர்வசு/ புனர்பூசம், லெட்சுமணன்—ஆயில்யம், பரதன்—பூசம், சத்ருக்னன்- ஆயில்யம் 15. ராமன்—கடக லக்னம், லெட்சுமணன்—சிம்ம ராசி , பரதன்—மீன லக்னம், சத்ருக்னன்- சிம்ம ராசி.16.ஐந்து கிரகங்கள் 17. இரண்டு வரங்கள் மூலம் காட்டுக்கு அனுப்பப்பட்டான், பரதன் ஆள்வதற்கு அனுமதித்தான், ஏழு மரா மரங்களைத் துளைக்கும் போட்டியில் வெற்றி பெற்றவுடனேயே வானரசேனை உதவி கிட்டியது, பதினான்கு ஆண்டு வனவாசம் 18. சாந்தி 19.சுதர்சனன் 20.சம்பாதி 21.கேசரி 22.புலஸ்த்ய ரிஷி 23.மதங்க முனிவர் 24. அஸ்வபதி 25.தசரதரின் மருமகன் ரிஷ்யஸ்ருங்கர் 26.சுயஜ்னன் 27.நந்திக்ராமம் 28.சூடாமணி 29.இந்திரஜித்- லெட்சுமணன், கும்பகர்ணன்- ராமன் 30.அங்கதன்

No comments:

Post a Comment