Tuesday 24 January 2017

வானவில்


ஒரு சிறு மழைத்துளியின் மீது பட்ட சூரியனின் ஒற்றை வெள்ளொளியானது,
சிவப்பு, ஆரஞ்சு,
பச்சை, மஞ்சள், நீலம்,
கருநீலம், ஊதா போன்ற ஏழு நிறங்களை உள்ளடக்கிய அழகிய வானவில்லாக பிரசவிக்கிறது...
நிகழ்வையொத்ததே அழகிய
மனித சமுதாயத்தின் தோன்றலும்...
மனித சமுதாயமென்பது,
ஒரு தாயிடம் இருந்து பிரசவிக்கப்பட்ட வெவ்வேறு நிறங்களையும், எண்ணங்களையும் கொண்ட குழந்தைகளை உள்ளடக்கியதே....
இருப்பினும் மனித சமுதாயத்தின் அழகை ஏன் நம்மால் உணர முடியவில்லை???
வானவில்லின் ஏழு நிறங்களின் அலைநீளங்களில் வேற்றுமை இருந்தாலும்,
அவை ஒற்றுமையாய் ஒன்றாக இணக்கமாகப் பயணிக்கின்றன...
ஆனால், மனித சமுதாயமோ, தங்களுடைய வேற்றுமைகளைக் காரணம் காட்டி,
தாங்களே உயர்ந்தவர்களென்று,
ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்...
ஒரு வேளை மனிதர்களைப் போன்று, தானென்ற அகந்தையுடைய பகுத்தறிவாதிகளாக,
வானவில்லிலுள்ள ஏழு நிறங்களும் படைக்கப்பட்டிருந்தால்,
அவைகளும் தங்களுடைய அலைநீளங்களின் வேற்றுமையைக் காரணம் காட்டி ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொண்டு ஒற்றுமையில்லாமல் இருந்திருக்கும்...
அழகிய வானவில்லை நம்மால் காண முடியாமலே போயிருப்போம்...
சிந்தித்துப் பாருங்கள் எனதன்பு சகோதர,சகோதரிகளே....
நம்முள் ஆயிரம் வேற்றுமைகள் இருக்கட்டுமே...
அவற்றை மறந்து,
ஒற்றுமையோடு,
தூய அன்போடு
நல்லிணக்கம் கொண்டு வாழ்வோமே.....
நம்மால் அழகிய நல்லதொரு மனித சமுதாயம் பிரசவிக்கட்டுமே....

No comments:

Post a Comment