Tuesday 6 March 2018

அப்ரோடைட் & பாரிஸ்


கண்களில் நீர் பெருக, Priam அரசனும் அவனது துணைவியான Hecuba அரசியும் அவர்களுக்கு பிறந்த குழந்தையை Ida மலையில் விட்டுச் செல்கிறார்கள்.

ஏன் அப்படி செய்தார்கள்? அதற்கான பதில் ஜோதிடனின் கணிப்பு. அவர்களுக்கு பிறந்த அக்குழந்தை அரண்மனையில் இருக்கும் பட்சத்தில் Troy அரசுக்கு பெறும் பாதிப்பு உண்டாகும் என ஜோதிடன் கூறுகிறான்.

ஒரு இடையனின் அரவணைப்பில் Paris எனப் பெயரிடப்பட்டு அக்குழந்தை வளர்கிறது. காலம் கழிகிறது. அவனும் வீரனாய் வளர்கிறான்.

ரோமானிய புனைக்கதைகளில் காணும் ஒரு தேவதையின் பெயர் Eris.

ஒரு சமயம் அவளுக்கு கடுங்கோபம் உண்டாகிறது. கோபத்தின் காரணம் என்ன? Thetis எனப்படும் கடல் தேவதை தனது திருமணத்திற்கு Eris தேவதையை அழைக்காமல் போகிறாள். இதனால் அவள் சினம் கொள்கிறாள்.

Thetis எனும் அக்கடல் தேவதையை கேவலப்படுத்தவும், திருமணத்தை நிலைகுலையச் செய்யும் பொருட்டும் Eris திருமண நிகழ்வின் போது கலகம் உண்டாக்கத் திட்டமிடுகிறாள்.

திருமண நிகழ்வின் போது ஒரு ஆப்பிளைத் தூக்கி எறிகிறாள். தேவதைகளுள் சிறந்த தேவதைக்கே அந்த ஆப்பிள் கொடுக்கப்பட வேண்டும் என்பது விதி.

ஆதலால் அந்த ஆப்பிள் யாரைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் திருமண நிகழ்வின் போது பெருங் குழப்பம் ஏற்படுகிறது. பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு அந்த ஆப்பிளுக்கு தகுதியானவர்கள் என மூன்று தேவதைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் முறையே Athena, Aphrodite மற்றும் Hera எனப்படும் தேவதைகள்.

Zeus எனும் தலைமைக் கடவுளரின் ஆலோசனைபடி Paris எனும் அவ்விளைஞன் சிறந்த தேவதையை தேர்ந்தெடுக்கப் பொறுப்பாகிறான்.

அம்மூன்று தேவதைகளும் Paris தன்னை சிறந்தவனாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் நோக்கில் ஆளுக்கு ஒரு வரம் அவனுக்கு கொடுக்கிறார்கள்.

Athena அவன் கலந்துக் கொள்ளும் எல்லா போர்களிலும் வெற்றி பெற வரம் கொடுப்பதாக சொல்கிறாள். Hera பல இடங்களை அவன் ஆட்சி செய்ய வரம் கொடுப்பதகச் சொல்கிறாள். Aphrodite உலகில் மிகச் சிறந்த அழகியை அவனுக்கு கொடுப்பதாகச் சொல்கிறாள்.

Aphrodite-ன் வரத்தை ஏற்கும் Paris அவளையே சிறந்த தேவதையென அறிவிக்கிறான்.

யார் அந்த உலகின் மிகச் சிறந்த அழகி? துரதிஷ்டவசமாக அவள் கிரேக்க நாட்டின் Sparta நகர அரசனின் மனைவியான Helen என அறியப்படுகிறது. சில பல சதிவேளைகளால் Helen வெற்றிகரமாக Troy நகருக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள்.

இதன் வினையாக Troy-க்கும் Spartaவில் இருக்கும் Achaea இனத்துக்குமிடையிலான Trojan போர் உண்டாகிறது. சுமார் 10 வருட காலத்தை விழுங்கிய இப்போரில் கிரேக்கர்கள் தந்திரமான ஒரு சாதுர்ய வகையில் தோல்வியை ஒப்புக் கொள்ளவும் போர் நிறுத்தம் காண்கிறது.

Troy நகரிலிருந்து கிளம்பும் முன் கிரேக்கர்கள் கடற்கரையோரமாக பூதாகரமான ஒரு மரக் குதிரை ஒன்றை விட்டுச் செல்கிறார்கள்.அதனுள்ளே மிகச் சிறந்த கிரேக்க வீரர்கள் ஒளிந்து இருப்பது யாருக்குமே தெரியாத மாபெரும் ரகசியம் ....

வெற்றி வாகைச் சூடியதாக எண்ணம் கொண்டு Priam அரசனும் அவனது இராணுவமும் அன்றய தினம் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

உற்சாக மிகுதியில் பிரமாண்டமான மரக்குதிரையையும் கோட்டைக்குள் கொண்டு போகின்றனர்...அந்தோ !!!!! விளைவு ...

அந்த இரவு யாரும் அறியா வண்ணம் கிரேக்கர்கள் மீண்டும் கடற்கரைக்கு வருகிறார்கள். மேலும் கோட்டைக்குள் மரக் குதிரையில் மறைந்திருக்கும் வீரர்களும் வெளியேறி Troy அரசை எதிர்க்கிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் அதிரடித்தாக்குதல் நிகழ்வில் மொத்த Troy அரசு அழிந்து போகிறது.

இலியட் எனப்படும் இக்கதை Homer எனும் ஒரு கிரேக்க குருடனால் எழுதப்பட்டது. இலியட் உலகப் புகழ் வாய்ந்த புத்தகம் என்பதை நமது பள்ளிக் காலங்களில் படித்திருப்போம்.

இலியட் புனைக் கதை மட்டும் தானா?....!!!!!!

No comments:

Post a Comment