Saturday 23 December 2017

நீயிருந்து பெய்தமழை 
   நேற்று வந்தது-இங்கு
   நீயில்லாமல் என்னைக்கண்டு 
   திகைத்து நின்றது.

வாயில்வரை வந்துபின்னே 
   வரமறுத்தது-என்
   வாசல்சன்னல் கதவுடைத்து 
   வேகங்கொண்டது

கோயிலுக்குள் சிலையைத் தேடி 
    கோபம் கொண்டது-தன்
    கோபம்காட்ட வீதியெங்கும் 
    கொட்டித் தீர்த்தது.

போயிருக்கும் மழைமீண்டும் 
    தேடிவந்திடில்- என்ன
    பொய்யுரைத்து நான்பிழைப்பேன் 
    பெண்மயிலே சொல்.

No comments:

Post a Comment