Saturday 23 December 2017

என்னதான் நடந்தது
டைரியின்
எழுதப்படாத பக்கங்களில்?
நீக்கிவிடலாம்
நினைவில் நிற்காத
நாட்களை
ஆயுட்கணக்கிலிருந்து
அடியோடு.
தினசரிக் காலண்டரின்
நேற்றாய்
கிழித்தெறிந்து விடலாம்
முத்தெடுக்கும் ஆசையில்
கிளிஞ்சல் பொறுக்கிய
நாட்களை.
கனவிலும் சாதிக்காமல்
கடந்துசென்ற காலத்தை
எப்படிச் சேர்ப்பது
கணக்கில்?
வாழ்ந்து முடிப்பதும்
முடிந்தவரை வாழ்வதுமே
வாழ்வெனில்,
இன்னொரு பிறப்பு
இருப்பது நிஜமெனில்
இறைவா படைத்துவிடு
ஈசலாய் .

No comments:

Post a Comment