Sunday 14 October 2018

விருந்து -பார்ஸி ஸ்டைல்

1992 இளவேனில் காலம் ...
*************************************
மும்பை சர்ச் கேட் ரயில் நிலையத்தில் இறங்கி ப்ளோரா பௌண்டன் நோக்கி ALPIC பைனான்ஸ் நிறுவனத்தில் பணியில் இருந்த என்னுடைய நண்பரின் - தமிழர் ... மார்வாடி நண்பரை ஒரு அவசியமாக காணச் சென்றேன்.
CIPLA மருந்து கம்பெனி மாற்றிப்போட்டுப் பாருங்கள் ALPIC...இரண்டுமே ஒரு நிறுவனமே ...
பேக் டு பாயிண்ட்...வழியில் ஒரு மைதானம் பார்சி இனத்தாரின் கல்யாணம் ஒன்று நடக்கிறது. வேடிக்கை பார்க்க நின்றேன்.
பார்சி மதம் Zoroastrianism...நெருப்பையே கடவுள் ஆக வணங்கும் மக்கள்....அடியேன் மதம் குறித்த ஆராய்ச்சி படிப்பு ஸ்பெஷலாக படித்தவன் .....1980-81லேயே ...ஆர்வக்கோளாறு ...வேறென்ன ?....
சென்னை லயோலாவில் வணிகவியல் இளங்கலை படித்த காலம் அது ......எல்லா மதங்கள் குறித்தும் இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் பார்சி பௌத்தம் ஜைனம் சமணம் ...what not.....அது ஒரு தேடுதல் வேட்கையில் ஆர்வமாய் படித்தது....
ஒரு கட்டுக்கடங்காத ஆர்வம் மகா துணிச்சல் எப்போதுமே உண்டு இன்றும் தான் வயது 56+….....
இளங்கன்று பயமறியாது...துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும்....ம் ஹூம் ...பழமொழிகள் ...பலம் தரும் மொழிகள் ..
பார்சி ஜோடிகளின் கல்யாணம் முடிந்து விருந்து ஆரம்பித்த அக்மார்க் அமர்க்கள / அதகள ...
சுப வேளையில் என்னோட entry...
என்னையும் வரவேற்று உள்ளே அழைத்தார் ஒருவர் ...நீல அங்கியில் நீண்ட வெண்தாடி ...
போய் பந்தி தரையில் ஜமுக்காளம் விரித்து இருந்ததில் சிலர் கும்பலாக போய் அமர்ந்தோம்.....
(((நான் அலங்கார பெனடிக்ட் .....உணவு உண்பதில் / கொட்டிக்கிறதுல...என்னிக்குமே ...இடம் பொருள் ஏவல்..... இன - மத - நிற - பேதம்......etc., பார்ப்பதில்லை )))
அய்யோடா சாமியோவ் ....பார்சி கல்யாண விருந்தில் தான் எத்தனை வகைகள் ...
பட்டியல் :-
முதலில் ஏதோ சூப் ...அப்புறமாய் சலாட் ...கதம்ப காய் கனிகள் …ரொட்டி வகைகள் ....இளம் ஆட்டிறைச்சி ....கோழி ( வறுவல் & கிரேவி ) ரெண்டுமே ....
next ....மீன் வகைகள் .....புலாவு காய்கறி கோழி மட்டன் முப்பெரும் ட்ரீட்....இறைச்சி ரொம்பவே Top class.... ...சரி போட்டுத் தாக்கு என்று தாக்கினேன்...
அப்போதெல்லாம் 20 பரோட்டா...பத்து ஸ்பெஷல் தோசை சாப்பிடும் தெம்பு இருந்த காலம்....
ஒரு முழு வான்கோழி 3 கிலோவுக்கு மேல் இருந்தது ....மதிய சாப்பிட்டில் குவைத்தில் 1985-ல் ...சாப்பிட்ட சாதனைக்கு சொந்தக்காரன்...
சரி அம்புட்டுதேன் என்று நினைக்கையில் .....
சொக்கா ....ஆ ஆ !!!!!
மாதுளம் , மா, வாழை பழங்கள் போட்டு செய்த இனிப்புக்கள் , குடிக்க தனியாக ....திரவ இனிப்புக்கள் ...
போதாக்குறைக்கு சிலவகைகள் அடியேன் ...முன் பின் பார்த்தே இல்லாத... இனிப்பு வகையாறாக்கள் ...
ஆண்டவனே ...!!!!!!!!!!!!!!!!!!!!!!
மெனு லிஸ்ட் மொதல்லேயே ஏனய்யா தரல...சண்டைக்கு போகும் மூர்க்கம் .....கோபம் உள்மனதில்.......
...
எப்படியோ தம் பிடித்து போட்டுத் தாக்கியதில் மெய்யாலுமே கடைசியில் குடித்த தித்திப்பு தயிர் கழுத்தில்../ தொண்டையில் ?... நிரம்பி மூக்கில் வெளியேற கதவை தட்டியது...
ALPIC போகும் ப்ரோக்ராம் கான்சல் ...
அங்கிருந்து நடந்தே கொலாபா கேட் வே ஆப் இண்டியா வந்து ரோடு போன திசையில் ஒரு சில மணி நேரம் கால் போன போக்கில் நடந்து ....அங்கு இருந்த ஒரு 15 –ஆம் நூற்றாண்டு சர்ச் கண்டு களித்து .......
அங்கிருந்த எனக்கு மிகப்பிடித்த இந்தியன் பிரவுன் தோல்நிற ...very special கொண்ட ... மீனவப் பெண்களை சைட் அடித்து ....ஆசுவாசமானது ....தனிக்கதை....
மற்றவை ...அடுத்த விஷேச பதிவில் .........
-----------------------------------------------------------------------------
ஒரு நாலுவரிக் கவிதை :-
**********************************
இமைகள் திற ஒரு ஜோடி மீன்கள் காண வேண்டும்
இதழ்கள் திற ஒரு ஜாடி தேன் குடிக்க வேண்டும் .....
வளைக்கரங்கள் நீட்டு வரம் பெற வேண்டும்
பொன் மலர்மேனி தழுவி மோட்சம் பெற வேண்டும் ....

No comments:

Post a Comment