Saturday 3 November 2018

வெண்ணிலாவும் நள்ளிரவும்

ஒரு வெண்ணிலா பூத்த கோடைக்கால நள்ளிரவில்
**********************************************************************
தமிழ் சினிமாப் படங்கள் காண ஆரம்பித்த போது வயது 5.....ஒண்ணாம் கிளாஸ் போகத் தொடங்கிய வேளை.
எங்க அம்மம்மாவின் சின்ன தங்கை எங்க சின்ன பாட்டி வீடு பக்கத்துக்கு ஊரில்.அங்கு டூரிங் டாக்கீஸ் உண்டு. அங்கிருந்த ரைஸ் மில் டாக்கீஸ் ரெண்டுக்கும் மானேஜர் ஒருவரே. அவர் சின்ன பாட்டியின் கணவர்/// எங்க தாத்தா வழி உறவினரே.
பாட்டிக்கு அரிசி வியாபாரம். தினமும் ரைஸ் மில் போவாங்க. டாக்கீஸ் க்கும் படம் புதுசா போடும்போதெல்லாம் போய் படம் பாப்பாங்க ... ...அவங்க நடிகர் திலகம் ரசிகை .....ஆனா படம் பார்க்க அந்த வேறுபாடெல்லாம் இல்லையே ...வழக்கம் பழக்கமா போச்சுது ....நெறையப் பாப்பாங்க .....
எங்க அம்மா பதினைந்து நாளைக்கு ஒருவாட்டி மாலை நேரம் அரிசி வாங்கப் போய் அப்படியே பாட்டி ஊட்ல ....ராத்தங்கி ஒரு படமும் பார்ப்பதுண்டு ..அவங்க கூடவே நானும் அவ்வப்போது போவேன் ...இப்படியாக நானும் புரிந்தும் புரியாமலும் எப்படியோ ....ஒரு சினிமா ரசிகன் ஆனேன்....ஏராளம் படங்கள் பார்க்கும் வழக்கமும் ஆனது...டென்ட் கொட்டகையில் படங்கள் பார்த்த வேளைகளில் சுவாரஸ்யத்துக்கோ பஞ்சமே இல்லை ...அதெல்லாம் தனிப்பதிவா தான் எழுதணும் ....பார்ப்போம் ....
அப்புறம் பத்தாம் வகுப்பில் படிக்கிறப்போ சைக்கிளில் பக்கத்துக்கு ஊர் டாக்கீஸ் களில் நண்பர்களோடு போக ஆரம்பித்தேன் ...
குமாரவேல், ஜானகி செல்வன்,அருணா திரையரங்குகள் போகும் வழமை ஆனது.
சாலைவழி எல்லாம் ஓகே ...ஆனால் ஊடே கொஞ்சம் காட்டுப்பாதையில் அதுவும் இடுகாடு சுடுகாடெல்லாம் இருக்கும் வழிப்பாதையில் போகும்போது பயம் உண்டு ....நெஞ்சு படபடக்குமே...நடுக்கமும் இருக்கும் ....
கள்ளிக்காட்டு பேய் , விளக்குப்பிசாசு , சுருட்டு முனி ன்னெல்லாம் ஏதேதோ சொல்வாங்க ....ஆனாக்கா சினிமா மோகம் அதையும் மீறி போதையேற்றி ....போக வைக்கும் ...ஒருமாதிரி சாகசமே அதெல்லாம் ......
ஒரு கோடைக்காலம் முழு ஆண்டு விடுமுறைக்காலம் .
''மனிதனும் தெய்வமாகலாம்''.... சிவாஜி படம் ...ஜோடி உஷா நந்தினி ..அப்போ உஷா நந்தினி ன்னா ஒரு ''க்ரஷ்''...கௌரவம் , ராஜபார்ட் ரங்கதுரை,பொன்னூஞ்சல்,என்னைப்போல் ஒருவன் .....எல்லாமே சிவாஜி - உஷா நந்தினி ஜோடி போட்ட படங்களே ...
படம் குமாரவேல் அரங்கில் பார்த்தோம்.அது வேறு கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தை அடுத்தே இருந்தது....ஒரு சிலுவை அடையாளம் போட்டு மனதில் துணிவை ஏற்றி வழக்கமாய் போவேன் ...
அன்றும் வழக்கம்போலவே ....சிலுவையே துணைன்னு போய் .....படம் பார்த்து திரும்பும் போது மணி 11க்கு மேல் ஆகிபோச்சு... ..நல்ல பௌர்ணமி வெண்ணிலவின் பால் போன்ற ஒளி ....கொஞ்சம் அமானுஷ்யம் ....எனக்கோ அமாவாசை இருட்டு கூட பயம் கிடையாது ....ஆனா முழு நிலா வெளிச்சம் கொஞ்சம் ....அதுவும் மேகமே இல்லாம இருந்தா பயமுண்டு....காரணம் தெரியாது...ஆனா பயம் உண்டே ....
நண்பர்கள் இருவரும் சைக்கிளில் எனக்கு முன்னே ...நான் ஒரு ஆலமர அடியில் சைக்கிளில் இருந்தபடியே சிறுநீர் கழிக்க ...அவர்கள் கொஞ்சம் முன்னே போய்ட்டாங்க ...பதட்டம் கொஞ்சம் என்னை தாக்க வேகமாய் பெடல் பண்ணி போனப்போ ....
நடுச் சாலையில் ஒரு வெள்ளையுடை தரித்த உருவம் திடீரென எழுந்து மேலே உயர்ந்து .....பறந்து......மேலே ...மேலே ...எனக்கு சர்வ அங்கமும் ஒடுங்கி ...மேலே தொங்கிக்கொண்டு இருந்த ஆலமர விழுதை பற்றிக்கொண்டு சைக்கிளை விட்டுவிட்டேன் ...ஒரு ரெண்டு தபா ஊஞ்சல் ஆடி பொத்தென் தரையில் குதித்தேன் ...
நண்பர்கள் ரெண்டுபேரும் சைக்கிள்களை திருப்பி என்னலே ஆச்சு ன்னு வந்தாங்க ...ஒருத்தர் சீனியர் ...பாடிபில்டர் .....அவருக்கு சிலம்பம் கொஞ்சம் தெரியும்...போதாக்குறைக்கு அவங்க அப்பாகூட ராக்காவல் ...விவசாய வேலைகளுக்கு ராவேளைகளில் அடிக்கடி போகும் வழக்கம்...ஆகவே என்னைவிட துணிச்சல் ரொம்பவே அதிகமுண்டு ....
எனக்கு கால் ரெண்டும் வெடவெடன்னு நடுங்குது .....வாய் பேச்சு வரல்ல ...குழறுது ...நெஞ்சு படபடன்னு அடிச்சு இதயத் துடிப்பு காதுக்கே கேக்கும் பயங்கரம் ...
அண்ணனின் கைகளை இறுக்கிப்பிடித்து அண்ணே யாரோ வெள்ளைச்சீலை உடுத்த கிழவி டமார்ன்னு ரோட்ல இருந்து எழும்பி காத்துலேயே வானத்தைப் பாத்து பறந்து.....போன மாதிரி ன்னு சொன்னதும் ...என் செவுள்ல (கன்னத்தில்) ஒரு அறைவிட்டார் ....அந்த அதிர்ச்சியில் உடம்பு நிதானம் ஆகிப்போச்சு ...
மூணு பெரும் அந்த பால் போல ஒளியில் சுத்தி சுத்தி பார்த்தோம்...கெழவி பறந்தவ பறந்தவளே ...காணவே காணோம் .....
ஒருமாதிரி மனசு தேறி .....சைக்கிளில் ஏறி ஒக்காந்து ....பெடலை மிதித்து ஊருக்கு வந்து வீடு சேர்ந்தேன் ...
படுத்தேன் ...மறுநாள் லீவு என்பதால் காலையில் எந்திரிக்க வில்லை ...நல்ல காய்ச்சல் ....அம்மாக்கிட்டே மெள்ள கதைய சொல்லி திட்டு வாங்கினேன்....அக்காள்கள் ரெண்டு பேரும் வசவோடு கிண்டலும் ...வீட்ல தான் புலி ....வெளில எலி ...அதுவும் சுண்டெலி ன்னு ஒரே எக்காளம்....பொருமி உறுமி ....எப்படியோ ...முடிஞ்சுது ...போங்க !!!!
இன்றும் 42 ஆண்டுகள் கழித்தும் .....அந்த குறிப்பிட இடம் கடந்து போகையில் நினவுத்திரையில் இந்த பயங்கர திகில் ''ஸீன்'' திரைப்படம் போல ஓடும் ...
வாழ்க்கையில் விடை இன்றுவரை கிடைக்காத புதிரான நிகழ்வு ...மனப்பிராந்தி / விஸ்கி ?!!!மாயத்தோற்றம் ?!!!!அமானுஷ்யம் ...
இந்த 57வயதிலும் புரியவே இல்லீங்கோ !!!!
உங்களுக்கு இம்மாதிரி அனுபவம் ?....
பகிரலாமே ////மத்யமர்ஸ் !!!!!

No comments:

Post a Comment