Saturday 3 November 2018

கல்யாண சாவு

2009 அக்டோபர் 17 சனிக்கிழமை.தீபாவளி திருநாள்
--------------------------------------------------------------------------------
காலை ஒரு எட்டுமணி .....நாங்கள் கிறிஸ்டியன்ஸ் ஆகவே கொண்டாட்டம்ன்னாலே அசைவமே பிரதானம் ////பிரமாதம்!!!!!
ஒரு சேவலை கழுத்தை முறித்து கொன்றேன் . இனி வெந்நீரில் முக்கி இறக்கை இன்னபிறவற்றை சுத்தம்செய்து மஞ்சள் தடவி மங்கலக் குளியல் நடத்தி அப்பால ..
வெட்டு குத்து தான் ...வேறென்ன ....
------------------------------------------------------------------------------
ஒரு பொடியன் ஓடோடி வந்தான் ...'பெரியப்பா செத்துட்டாரு' ன்னு நாக்கு குழற சொல்லி ... சொன்னவன் ஓடியே போனான் ...
ஏற்கனவே இரண்டு ஆண்டுகாலம் படுக்கையில் இருந்தவரே ...'' 86 வயது '' ......எனவே பெரிய சோகமில்லை.போனதும் ஆறுதலான விஷயமே ...கல்யாண சாவு ...ன்னே சொல்வேன் ....
ஆனா தீபாவளி அன்னிக்கு..அதுவும் சனிப்பொணம் ..இதான் என்னோட மனசில் மின்னல் அடிச்ச ஒரே விஷயம் ..
பக்கத்துக்கு தெரு உறவுகள் ஒவ்வொண்ணா வந்து கடைக்கோடியில் இருந்த என்னோட வீட்டு வழியாக வடக்கு பக்கம் போய் கிழக்கில் பெரியப்பா வீடு ...
எங்க அப்பா உடன் பிறந்தோர் அவரையும் சேர்த்து மொத்தம் 10பேர்கள் ...ஏழு ஆண்கள் மூன்று பெண்கள் ...
பாலாம்மை மாமி தலைச்சன் ...அப்புறம் முத்துச்சாமி (இறந்தவர்) ...எங்க அப்பா அஞ்சாவது ....ஒரு அக்காள் மூன்று அண்ணன்கள் இரண்டு தங்கைகள் மூன்று தம்பிகள் ...கணக்கு சரியா?
பெரியப்பா பனையேறி & விவசாயி ...
கையளவு நிலம் இல்லாமல் பனையேறி பதநீர் /கருப்பட்டி வணிகம் ..ஆடு மாடு கால்நடை செல்வம் பலுகி பெருகி இறக்கும்போது சுமார் பதினான்கு ஏக்கர் ப்ளஸ் நிலம் ஒரே இடத்தில அவருக்கே சொந்தம்...தென்னந்தோப்பு உண்டு ...
அவருக்கு மக்கள் எட்டு பேர்.ஐந்து பெண்கள் மூன்று ஆண்கள் .
நல்ல சிலம்பாட்டக்காரர்.வர்ம அடி///கலை நிபுணர். பெரிய பலசாலி .
ஒரே ஒரு எ.கா: 1971-ல் எனக்கு அப்போ 10வயசு ஆரம்பம் ...பெரியப்பா கூட வயலுக்கு போனேன்....அது ஒரு ஞாயிறு அன்று.....
பெரியப்பா இரண்டு வாழைக்குலைகளை கயிற்றில் முடிந்து தோளில் துண்டு போல போட்டுக்கொண்டு பக்கத்து ஊரில் சந்தையில் விற்கப் போகும் வேலை...வாழைக்குலையில் தலா நூறுக்கு மேல் காய்கள் ...அப்போ மொத்தம் இருநூறு ....உயரம் மூன்றடிக்கு மேலேயே ...எனக்கு தோள் உயரம் ...இருந்த நினைவு உண்டு ....
நானும் கூடவே போனேன் ..வழியில் ஆட்களை குசலம் விசாரித்து வெற்றிலை போட்டுக்கொண்டு பொறணி பேசி..இப்படியே சந்தை போன நேரம் ஒரு மணி இருக்கும் ..அவர் அந்த வாழை குலைகளை தோள் மாற்றவே இல்லியே...இன்னும் சில சம்பவங்கள் அப்பால தனியா சொல்வேன்...
பெரியப்பா வீடு முன்னால் பெரிய கூட்டம் ..அவங்க வீடு மெய்ன் ரோடு.எங்க உறவுகள் எக்கச்சக்கம் உள்ளூரிலேயே ....எல்லோருமே குஞ்சு குளுவானுங்க கூட ...
யாருக்குமே பெரியப்பா தீபாவளிக்கு செத்துப்போனது பெரிய துக்கமாக இல்லை ....இனி கொண்டாட முடியாதே ன்னு தான் ஒரே சோகம் ....சிலர் எண்ணெய் தேய்த்ததை துண்டால் வழித்தபடியே வந்த்து கலந்து கொண்டது..சோகமே !!!!
பொறவென்ன .... காரியங்கள் மாலையில் முடிந்து வந்து குளித்து இரவுக்கு சேவலை போட்டுத்தள்ளி ...நாட்டுக் கோழிக்குழம்பு...ருசிக்கு கேக்கணுமா என்ன ..கோலாகல தீபாவளி சாப்பாடு மதியம் மாறி இரவு ஆகிப்போனது எனக்கு ஒன்றும் சோகமில்லை ...
ஆனால் எங்க அப்பாவைவிட என்னைக்கவர்ந்த பெரியாவின் மறைவு அப்புறமா கொஞ்சங்கொஞ்சமா என்னை அழ வைச்ச சோகம் ....அது என்னோட சுய சோகம் ...அவரது கல்லறைக்கு போவேன்...தனியாக இருந்து பழசெல்லாம் நினைப்பெனுங்க ...அது ...சொன்னா புரியுமா ?.....ம் ஹூம் !!!!!
எங்க அப்பா மும்பை குவைத் ன்னு பொழைப்ப தேடிப்போனதால அவர் இல்லாத குறையை தீர்த்தவர் பெரியப்பாவே ...
எனக்கு ஸ்பெஷலா ஒரு பனையில் நல்ல இனிப்பு பதநீர் இறக்கி சில்லாட்டையால் வடிகட்டி ஈ எறும்பு நீக்கி ஒரு பூவரசு மரத்தடியில் வைத்து அவரு தரும் ..அது நினைவில்...கண்ணில் நீர் கசிவு...நான் போகும் வரை அந்தப்பனையில் பதநீர் இறக்க மாட்டார் ...எம்பேர்ல அத்தனை பிரியம் ..அன்புள்ள என்னோட பெரியப்பா ....!!!!!
ஒருநாளில் சுமார் நூறுக்கு மேலேயே பனை காலை மாலை ஏறி இறங்கும் உடல் உரம் ...விவசாயப்பணிகள் ..பெரிய மீசை உண்டு ...இன்னும் இன்னும் ...என்னே எண்ணங்கள் !!!!!
இப்போ அதே மீசை என்னோட தம்பி ஜெகராசா அவர் இரண்டாம் மகன் என்னோட செட்டு தானுங்க ......வைத்துள்ளான் ..அனுமதி கேட்டு போட்டோவை போடுறேன் ...ஓகே!!!!
என்னென்னவோ சொல்லி ...அதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்த பதிவைப்போட்ட அட்மின் திரு கீர்த்தி வாசன் ராஜாமணிக்கு ஒரு ஓ போடுங்க !!!!!
நன்றி திருவாளர் ....KR அவர்களே !!!!!!

No comments:

Post a Comment