Saturday 3 November 2018

கஸாக் தீபாவளி

சிறுவயது முதல் கொண்டாடிய தீபாவளிகள் வரிசை கட்டி நிக்குது ..
அணையா தீபமும் வாடா மலரும் கொண்டு வசந்த உற்சவம் ஆக கொண்டாடிய தீபாவளிகள் ...
அப்பா முறை இந்து உறவுகளின் பாச வலையில் சிக்கி ஆனந்த மயமாக கொண்டாடிய உள்ளூர் கொண்டாட்டங்கள் ....
பள்ளி நண்பர்கள் நிறைய பேர்கள் இந்துக்கள் உண்டு என்பதால் அவர்கள் வீட்டுக்கே போய் கொண்டாடிய வளரிளம்பருவம் ஸ்பெஷல் கொண்டாட்டங்கள் ...
கல்லூரியில் திருச்சி தில்லை நகரில் பிலிம் டிஸ்ட்ரிபியூஷன் தொழிலாளி (அவர் முதலாளி என சொல்வதில்லை ) திருவாளர் ராமசாமியோடு திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவார் சுவாமி கோயில் அருகே அவரது குடும்ப நண்பர் ஒருவர் சுற்றத்தாருடன் கொண்டாடிய தீபாவளி ....{{{திரு ராமசாமி கட்டை பிரமச்சாரி }}}
சென்னையில் லயோலா காலத்திய நண்பர்கள் ஸ்ரீனிவாசன் ராகவன் சூளைமேடு , அனந்தகுமார் ஆயிரம் விளக்கு பகுதி , புதுப்பேட்டை கண்ணன் ....இவர்களுடன் கொண்டாடிய தீபாவளி ...
1991ல் மும்பையில் மலாடு வெஸ்ட் ஜெய் ஜனதா நகர் கொண்டாட்டம்....
ஒருவாரம் பட்டாசு ஒளி&ஒலியில் ...யம்மாடி மங்களூர் ஷெட்டி குரூப் இளையோர்களின் அதகள கொண்டாட்டங்கள் ...அருமை ...
எனக்கு ஒலி மாசு அலர்ஜி ...ஆனாலும் அவர்களின் பண்டிகைக்கால கொண்டாட்ட உற்சாகம் பாராட்டி மெச்சத்தக்க ஒன்றே என்பதில் உடன்பாடு தானுங்க !!!!
மீண்டும் 1993-95சென்னை திருவான்மியூர் வீட்டில் ....
ஆனா ....
1996 ல் மத்திய மேற்காசிய கஸாக்ஸ்தானில் கொண்டாடிய ''தலை'' சிறந்த ''தலை'' தீபாவளி பற்றியே இப்பதிவு .....
****************************************************************
அங்கு அல்மாட்டி நகரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஆடிட்டர் பணியில் ...
அங்குள்ள புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரியில் இந்திய மாணவர்கள் பல மாநிலம் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் அவர்களின் விடுதியில் கொண்டாடிய ஒரிஜினல் இந்தியா நாட்டு தீபாவளி பற்றி சொல்லவே விரும்புகிறேன்.
எண்ணெய்க்குளியல் நஹி ...
இந்திய வகை பட்சணங்கள் இல்லை ....
பட்டாசு லேது ...
ஆனால் அந்த தீபாவளியில் எங்கள் அன்பே எண்ணெய் என எல்லோரையுமே ஆகர்ஷித்து ....
உற்சாமான உரையாடலே இனிப்பு தித்திக்கும் பலகாரங்கள் ஆகி .....
அதிர் வேட்டு சிரிப்புக்களே பட்டாசு தோற்கும் முழக்கமாகி ...
ஆஹா அதுவல்லவோ பேரானந்தம் ...இன்பம் கொள்ளையோ கொள்ளை !!!!
அதெல்லாம் மனக்கண்ணில் திரையில் ஓடுதுங்க !!!!புளகாங்கிதம் .....
-----------------------------------------------------------------------------
இன்று 22 ஆண்டுகளுக்கு பின்னர் என் எண்ணத்தில் உறைந்து போன மகத்தான அந்த என்ன அலைகளை உயிர்ப்பித்து மத்யமர்ஸ் உங்களோடு பகிர்வதில் எல்லையில்லாத ஆனந்தமே ....
----------------------------------------------------------------------------
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள அத்தனை இந்தியக் குடிகளின் ஒன்று சேர்ந்த இணைப்பில் தீபாவளியின் இலட்சணங்கள் இல்லாமல் போனாலும் ...அந்த கொண்டாட்டம் தந்த உவகை உற்சாகம் ஈடு இணை இல்லாதது என அடித்துச் சொல்வேன் ...
பீகாரி புவனா , ஒரிய அனுபமா , குஜராத் மங்களா , ஆந்திரா நிர்மலா ,பஞ்சாபிய ரஞ்சனி ,டில்லி பிரஷாந்தி ....இன்னும் இன்னும் ஆண்கள் பெயர்கள் சொல்லணும்ன்னா ரமேஷ், முஹிதீன் ,தாமஸ் ,மைக்கேல் , மணிபிரபு, சோமாஸ்கந்தர்...அது பெரிய லிஸ்ட் ...
பெயர்கள் நினைவில் நிற்க காரணம் ஆட்டோகிராப் புத்தகமே ...ஓகே
அதற்கு முன்னரும் அப்புறமும் எவ்வளவோ தீபாவளியை இந்த 56 பிளஸ் வருட ஆயுளில் கொண்டாடினாலும் .....
இதுவே ''தலை'' என சிறப்பு பெற்று விளங்கும்...''தலை தீபாவளி'' ..!!!!No automatic alt text available.

No comments:

Post a Comment