Saturday 3 November 2018

ஹைக்கூ

#ஹைக்கூ' கவிதை வடிவம் ..... குமுதத்தில் நட்சத்திர எழுத்தாளர் பன்முக படைப்பாளி திரு. ரங்கராஜனின் (அதாங்க ''சுஜாதா'' - இவர் மேல் கொண்ட பற்று காரணமாக என் அக்காள் மகள் என் மருமகளுக்கு 'சுஜாதா' ன்னே பெயர் வைத்தேன் 1980ல் ) மூலமே அறிமுகம் ....
------------------------------------------------------------------------------
'ஹைக்கூ' எழுத பல மரபுகள் இருந்தாலும் அதில் முக்கியமானது, மூன்றே வரிகள் இருக்க வேண்டும், மூன்றாவது வரியைப் படிக்கும் வரை முதல் இரண்டு வரிகளில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று சஸ்பென்சாக இருக்க வேண்டும், மூன்றாவது வரியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட வேண்டும். அந்த வகையில் அழகான சில என்னுடைய படைப்புக்கள் ''ஹைக்கூக்கள்''...... இதோ:-
***********************************************************************
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்றும் பிச்சையெடுக்கிறது
கோவில் யானை.....
------------------------------------------------------------
* ஆணி பித்துக் கொண்ட கால்களுடன்
தைக்கிறான் செருப்புக்களை
செருப்பு தைக்கும் கிழவன் ....
--------------------------------------------------------------
* ஆயிரம் பெற்றோர்கள் உண்டு
முத்தமிட ஒரு குழந்தை இல்லையே
முதியோர் இல்லம் ..........
----------------------------------------------------------------
* நெடுஞ்சாலை விபத்து
உயிருக்கு போராடி இறந்தார்
ஆம்புலன்ஸ் டிரைவர்........
-------------------------------------------------------------------
* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
போராடியோர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.......
-----------------------------------------------------------------
*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள் அனைவரும்
இன்று உண்ணாவிரதம்.......
------------------------------------------------------------------
* அதிக வலியில் அழும் போது
"அம்மா" என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை......
-------------------------------------------------------------------
கமெண்டுங்க மத்யமர்ஸ் ...ப்ளீஸ் !!!!

No comments:

Post a Comment