Friday 2 June 2017

லிப்ட் (Lift) அழகு தமிழில் மின்தூக்கி .... கதை-2:-
*****************************************************************
1982 -ல் பம்பாய் ''பெடார் ரோடு''.... ''கெம்ப்ஸ் கார்னர்'' சந்திப்பின் அருகில் ஒரு உயரமான கட்டிடம் .அப்போதே 45 மாடிகள் .
அந்த கட்டிடம் பின்னர் அபாயம் கருதி சில மாடிகள் இடிக்கப்பட்டு உயரம் குறைக்கப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் படித்தேன்.
எனது உறவினர் என்னைவிட இரண்டு வயது மூத்தவர் .லியோன் பெனடிக்ட் அங்கு மின் அமைப்புக்கள் பணியில் இருந்தார்.
ஒருநாள் என்னை வேடிக்கை பார்க்க அழைத்துச் சென்றார். 1983 ஜனவரி மாதம் பொங்கல் நேரம் என்பது நன்றாய் நினைவில் உள்ளது. ஏனென்றால் காலை வீட்டில் பொங்கல் கரும்பு பாயசம் சாப்பிட்டு விட்டே புறப்பட்டோம் ....
சயான் பேருந்து நிலையம் சென்று (தடம் எண் 82 என நினைவு) பேருந்தில் சென்றோம்.பெடார் ரோட்டில் கெம்ப்ஸ் கார்னர் நிறுத்தத்தில் இறங்கி சாலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டே போய் கட்டிடத்தை அடைந்தோம்.
அத்தனை உயரம் முதன் முறையாகப் பார்த்து 'ஆ' வென வாயைப் பிளந்து அதிசயமாய்ப் பார்த்தேன் ...ஓரளவு பணிகள் மட்டும் மீதம் இருந்த காரணத்தால் அதிகம் பணியாட்களும் கிடையாது. சுமார் பத்து பேர்கள் போல இருந்தார்கள். அண்ணன் என்னை அறிமுகம் செய்து பின்னர் உடன் அழைத்துப்போனார்.
மின் தூக்கியில் மேல் தளம் வரை சென்று கீழே பார்த்தால் ...
அம்மம்மா..... மனிதர்கள் எறும்பு சைசில் வாகனங்கள் கொஞ்சம் பெரிதாக தெரிந்தார்கள். எனக்கு ரொம்ப ரசிக்கவில்லை. கொஞ்சம் பயமும் இருந்தது.
தொலை நோக்கி (Binoculars) இருந்தால் ரசிக்கும். ரசிக்கலாம். வெறும் கண்களால் ரொம்ப தெளிவாக பார்க்க முடியாமல் ....சுற்றுப்புறக் காட்சிகளை ரொம்ப ரசிக்க முடியவில்லை.ஆனாலும் ஒரு குழந்தைத்தனமான ஆர்வம் / பெருமை இருந்தது மெய்.
மின் தூக்கியில் 'சர் சர்' ரென்று எவ்விதமான தொல்லையின்றி மேலும் கீழும் சென்று அனுபவித்து கொள்ளையாய் மகிழ்ந்தேன். அது அன்றைய தின சூப்பர் கொண்டாட்டமாய் இருந்தது.
வொர்லியில் சத்தியம் ,சச்சினம்,சுந்தரம் தியேட்டர் காம்ப்ளெக்ஸ். (சென்னையில் சத்தியம், சாந்தம், சுபம் உண்டல்லவா ?) ......அப்போது ''ஜராசி ஜிந்தகி ''....அதாங்க .. ''வறுமையின் நிறம் சிவப்பு '' ஹிந்தி ஆக்கம் ....கமல்ஹாசன் & அனிதா ராஜ் நடித்தது படம் பார்த்தோம். 'ஸ்ரீதேவி' இடத்தில் 'மூதேவி' நடித்த படம் ரசிக்கவில்லை ....இயக்குனர் KB மீது கடுப்பு வந்ததும் உண்மை ...
அங்கிருந்து நடந்தே சிவாஜி பார்க் போய் மாலைப்பொழுதை கழித்து பின்னர் தாதர் வந்து பஸ் பிடித்து தாராவி VOC குடிசைப்பகுதியில் எனது ஞானம்மா (காட் மதர்) வீடு போனேன் ....

No comments:

Post a Comment